Thursday, November 1, 2007

முக மூடிகள்

பெற்றோரிடம்,
நல்ல பிள்ளை என்ற முகமூடி!

ஆசிரியர்களிடம்,
படிப்பவர்கள் என்ற முகமூடி!

நண்பர்களுடன்,
தோழமை எனற முகமூடி!

கணவன், மனைவி,
கடமை என்ற முகமூடி!

குழந்தைகளிடம்,
அவர்கள் தான் உலகம் என்ற முகமூடி!

குடும்பத்தாருடன்,
எல்லாம் தங்கள் தலையில்தான் என்ற முகமூடி!

உலகத்திற்க்கு,
உலகமே தங்கள் கையில் என்ற முகமூடி!

பொதுவான மனித அடிப்படை,
எல்லாவற்றிக்கும் முகமூடி!

முகமூடிகளே,
நம்முடைய நிரந்தர முகங்கள் ஆகிவிட்டன!!!

ஆண்வேடம்


உலகத்தில்,

மக்களுக்கு
ஒரு பழக்கம்
மற்றவர்களை,காயப்படுத்துவது.

அதற்க்கு,
அவர்கள் பயன்படுத்தும்
ஆயுதம்,
"அறிவுரை"

நம்முடைய,
நிலைமை புரியாது.
நம்முடைய,
வாழ்க்கை புரியாது.

அதை தடுக்க,
ஒரு வேடம் தேவை இருந்தது,
நிமிர்நத நடை,
எதையும் சமாளிக்கும் திறமை.

இது,
"கவச குண்டலம்"
உண்மையாக,
என்னை காப்பாற்றி இருக்கிறது!


இல்லை என்றால்
இன்று;
பெண் என்பதை உணர,
ஆள் இல்லாமல் போயிருக்கும்.

பொய் முகம்



கடந்த காலம்,
என்னை காயப்படுத்தியிருந்தாலும்
நிகழ்காலம்,
என்னை சந்தோஷமாக தான் வைத்து இருக்கிறது!

உண்மையாக,
எல்லாம் மறந்துவிட்டது.
நான் பெண் என்பது,
இப்போதுதான் ஞாபகம் வருகிறது!

பாதி வாழ்க்கை,
"ஆண்வேடம்" போடவேண்டி வந்ததால்;
பெண் என்பது,
மறந்துவிட்டது!

உன்னுடன்,
பேசிய பின் தான்;
நான்,
பெண் என்பதை உணர்கிறேன்!

"சத்தியம்",
நான் சந்தோஷமாக இருக்கிறேன்!
உனக்கு,
இதை எப்படி புரிய வைப்பது!

நான்,
மறந்து போன உணர்வை,
நீ,
தட்டி எழுப்பி இருக்கிறாய்!

எந்தவித பொய்முகங்களும்
இல்லாமல்;
நான்,
நானாக...!

மறுபடியும் சொல்கிறேன்,
"எனக்கு நீந்தத்தெரியும்".
மூழ்கவேண்டிய காலத்திலேயே,
"நான் மூழ்கவில்லை" என்பதை மறந்துவிடாதே!

என்னுடைய,
அத்தனை பொய்முகத்தையும்;
கழற்றிவிட்டு
சொல்கிறேன்...

"நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்"
"நான் இந்த புது பெண்முகத்தை ரசிக்கிறேன்"
உனக்கு கவலையாக இருக்கிறது என்றால்,
"உன்னிடமும் பொய்முகம் காட்ட ரெடி".


Monday, October 1, 2007

நான் யாரோ...???

ஏதோ ஒன்று "என்னை"
கட்டிப் போடுகிறது "உன்னிடம்"!

எது என்று தேடுகிறேன்,
தெரியவில்லை.

அன்பு என்பதற்க்கு
ஏதேனும் கதவுகள் இருக்கிறதா?

இருந்தால்,
அது ஜெயில் கதவா?

பூட்டினால்,
திறப்பது கடினமா?

தேவையான போது,
தேவையான அளவு திறந்துவிடப்பட வேண்டுமா?

ஆனால்,
எப்போதும் திறந்து இருக்கிறதே....?!

அப்படியானால்,
இது சமுத்திரமா???

சமுத்திரத்திற்க்கு,
ஏது கதவுகள்!!!

அன்பும், சமுத்திரமும்,
"ஒன்று" !

பரந்து விரிந்தது!
நம்மை உள்வாங்கிவிடும்.

நீந்தத் தெரிந்தவர்கள்,
"புத்திசாலிகள்"

நீந்தத் தெரியாதவர்கள்,
"படைப்பாளிகள்"

மூழ்குபவர்கள்,
"சொர்க்க வாசிகள்"

நான் யாரோ?
தெரியவில்லை.....



(உனக்கு தெரிந்தால் சொல் நண்பனே!)

பழக்கம்


நடந்து வந்த முட்பாதைகள்
மறைந்து போனாலும்,
பழக்க தோஷம்;
கால்கள் தரையில் பதிய மறுக்கின்றன!

முடியாது ... முடியவில்லை...?

எத்தனை தான் மனதை
தேற்றினாலும்,

திரும்ப திரும்ப ஒலிக்கும்
ஒரே மந்திரம்!

"உன்னால் முடியாது"
எனற பிரியமானவரின்

"அன்புக் குரல்"
கால்களை கட்டிப்போடுகின்றன!

சங்கிலியால் பிணைத்தால்,
கழட்டி விடலாம்!

போட்டது என்னவோ,
சொல்லால் அல்லவா....

அது விழுந்தது,
நெஞ்சில்!

இரத்தத்தில் கலந்துவிட்டது
பிரித்து எடுக்க முடியாமல்!!!

சொல்லை மீற
அதிக நேரம் தேவையில்லை.

ஆனால், பின்விளைவுகள்
குடும்பத்தை பாதிக்கும்.

பாதிப்பு இல்லாமல்
வர முயற்ச்சிக்கிறேன்!

முடியும் என்று,
"பக்ஷி" சொல்கிறது.

Friday, April 13, 2007

நிசப்தம்

அடர்ந்த காட்டில்
அழகான மரங்கள்
ரம்மியமான சூழல்...
எங்கும் நிசப்தம்!
உன் குரல்
எனக்கு கேட்கிறது.
ஆனால்,
என்னுடைய குரல்
உனக்கு கேட்க்கவில்லை!
காதில் கோளாறா....
இல்லை மனதில் கோளாறா......
இதுதான் வாழ்க்கையோ!!!???

எடை......

அமைதியான சூழலில்
ஆழ்ந்த சிந்தனையில்,
ஆன்மாவிடம்... ஒரு கேள்வி...
என்னுடைய ஆன்மா, நிழல்...
நல்லதா... கெட்டதா...?


ஆன்மாவின் பதில்...
எனக்கு தெரிந்தால்
உனக்கு தெரிந்து இருக்கும்.
உன் நிழலை கேள்...
அது உன்னுடன் தானே வருகிறது.

நிழலிடம் கேள்வி
பதில்.....
"ஆன்மா" ... நல்லது
உன் நிழல்
உன்னுடைய கவசம்.

இரண்டையும் எடை போடாதே...
எடை போட்டால்
அமைதி போய்விடும்.
அமைதியாக சிந்தித்தேன்
"எடை போடுவதை நிறுத்திவிட்டேன்"!!!

கல்யாணம்

மலர்ந்த மொட்டை
கிள்ளி எறிந்தார்கள்.
உனக்கு இடமில்லை
மலர்ந்துவிட்டால்.....
மலர்ந்ததிற்க்கு,
தண்டனையா....???

குழப்பம்....

கேட்க்க நினைத்து
மறைந்து போனேன்.
கேட்டாலும் கிடைக்காது
என்பது தெரிந்து தானா?
கேட்டிருந்தால்
கிடைத்து இருக்குமா...?
கேள்விகள் கேட்பது
உரிமை.
ஆனால், யாரிடம்
என்பது......
அதுவே கேள்விக்குறிதான்........................!

சத்திய சோதனை

தட்டுத் தடுமாறி
முட்டி மோதி
கடைசியில்,
அடிபட்டது என்னவோ
ஆன்மாவிடம் தான்!!!

Friday, March 30, 2007

முரண்பாடான மனிதர்கள்

"செல்" லின் சொற்பொழிவு...
நான் கடவுளிடம் சரண்.
நான் எல்லா கடவுளையும்
மதிக்கிறேன்!.....
அழகான வாக்கிமூலம்,
ஒரே நெருடல், எனக்கு
அடுத்த மதத்தினர்
தரும் பிரசாதத்தினை
வாங்க மறுப்பதின், காரணம் என்னவோ???


யாரை ஏமாற்றுகிறார்கள்...
தங்களையா?
அலல்து, தங்களை நம்பும் மற்றவர்களையா?


காது கொடுத்து கேட்க்க ஆள் இருந்தால்
சாத்தானும் வேதம் ஓதும்!

கவலை

கவலையாக இருக்கிறது
எதை நம்புவது....
அருகில் இருக்கிறது
ஆனால் "செல்" போன்றது.

தொலைவில் இருக்கிறது
"நழுவுகிற மீன்"....

"செல்" அரிப்பை தடுத்துவிட்டேன்.

"நழுவுகிற மீன்" ஒன்றும் புரியவில்லை.


"செல்" அரிப்பில் அடுத்து
மாட்டப்போவது யாரோ?
அதிர்ஷ்டசாலிக்கு என் வாழ்த்துக்கள்!

கசப்பை எப்படி நீக்க என்று தெரியவில்லை.
ரணம், கசப்பு.... இரண்டும்
வருத்துகிறது.

துவேசர்கள்

அழகிய தோட்டத்தில்
நான்கு கோரைப்புற்க்கள்.
பிடிங்கினாலும்.....
மறுபடியும் வேறு இடத்தில்....

நிதர்சனம்

குப்பையை ஒதுக்கும் போது கவனித்தேன்
கைகள் படாமல் ஒதுக்குகிறோம்...
இது தானோ நமக்கும்,
உயிர் போன பின்!

நிழல்

நினைவில் நிற்க்க மறுக்கின்றன
மறைந்து போன காலங்கள்.
ஒரு வேளை, மறைந்து போனது
நான் தானோ...!

கருத்துக்கள்

சிந்திக்க, மனம் வேண்டும்
சிதர அடிக்க, எண்ணங்கள் வேண்டும்.
சிரிக்க வைக்க, மனம் வேண்டும்.
அழவைக்க, சொற்க்கள் போதும்.
நம்ப வைக்க, மூளை வேண்டும்.
ஏமாற்ற, முகஸ்துதி ஒன்று போதும்.
அடிபட்டவர்களின்… தாழ்வான கருத்துக்கள்!

சாக்கடை மனிதர்கள்

இரத்தம் கொடுத்தவனை
நீங்கள் கடவுள் என்கிறான்.
பிழைத்து நடந்ததும், கேட்கிறான்...
"நீங்கள் எந்த ஜாதி......"

மனது

தொலைந்து போனது
தேடுகிறேன்.... எதை?
கிடைக்கும் என்று நம்பிக்கை
நம்பிக்கை...எதனால்?
மனிதன் என்பதால்!
மனதுக்கு என்ன நிறம்...
வெள்ளை!
அதனால் தான் ஊடுருவுகிறது…
பிரதிபலிக்கும் அன்பை!

ரசிக்க தெரிந்தவர்கள்
சுகவாசிகள்!


ரசிக்க தெரியாதவர்கள்
வெறும் வாசிகள்!

இரண்டும் தெரிந்தவர்கள்
சொர்க்கவாசிகள்!

காயங்கள்

ஆறிய பின்னும்
தடிப்பாக தெரிகிறது... வடுக்கள்.
எது ஆறியது
எனக்கு சந்தேகம்.
உதிர்த்த உதிரமா
தடித்த தோலா?
விலித்த மனதா?
மனமே உன் நிம்மதி
எதில்...ஆறியது...?
.....???
இரண்டு அன்பான
வார்த்தைகள், புன்னைகை!!!

குழப்பம்

மறக்க நினைத்து
மறந்துவிட்டேன்.
மறந்து போனேன் என்பதையும்
மறந்தும் போனேன்.......
ஆனால்..........எதை..........?

Tuesday, March 27, 2007

i gave u lot of clues
"innocent or ignorant"
"promise" diary msg
"gossip"
"just a thought" i said "soul...shadow"this is for me.... "divine..friendship" for u two
"mistakes"
"almighty"comment.
"god" post.... i mentioned they always pray but they never help others or do anything constructively.



i never want to hide anything from u.
sorry abt evrything.
i am a simple human being with lot of truth.
this con or lies or promises never works for me.
so, let me be, who i am rather than a weird person like others.

விந்தையான மனிதர்கள்

(28-03-07-----9.20AM)
வெறும் பேச்சை மட்டும்
நம்புவள் அல்ல நான்.
செயல் வேண்டும் எதிலும்
அதனால் தான்...
படித்த முட்டாள்களை
சில சமயம் பிடிப்பது இல்லை.
படித்துவிட்டு வெறும் கனவில்
வாமும் சில பெண்களை
வெறுக்கிறேன்.
அவர்களும் வாழமாட்டார்கள்
மற்றவர்க்களையும் குழப்புவார்கள்....
இதற்க்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.
மூன்று வருடம் நரக வேதனை
பேசமட்டும் பயன்படும் கருவி அல்ல நான்.
எனக்கு செயல்கள் முக்கியம்.
அருகில் இருப்பவர்களுக்கே
உதவ மாட்டார்கள்.....
ஆனால் கடவுளிடம் சரண்!
என்ன உலகமோ .....
என்ன மனிதர்களோ.....
விந்தையான மனிதர்கள்.
இனியாவது நான் கவனமுடன் இருக்கவேண்டும்!!!

உலகம்

(25-03-07---10.00pm)

உலத்தில் எல்லாமே சந்தோஷம்
என்றால்.....
மனிதன் வாழ்க்கையை வெறுத்துவிடுவான்.

கேன் ஸர் நோயாளி.....
சந்தித்தேன், இன்று....
எத்தனை பெரிய நோய்!

ஆனால், நம்பிக்கையுடன் இருக்கிறார்
என்னை தலையில் குட்டியது
.....போல இருந்தது....!

வாழ்க்கை....
என்பது வாழ்வதற்க்கு
இன்று என்பது நிரந்தரம் அல்ல!

நாளை என்பது கனவும் அல்ல!
நடப்பவை எல்லாம் ... உணருவோம்!
வாழ்க்கையை வாழ்வோம்!

சின்ன சிரிப்பு ... மனதை இலக்கும்
சின்ன பொய் ... மனதை உறுத்தும்
சின்ன மன்னிப்பு ... மனதை இலேசாக்கும்
சின்ன உண்மை ... மனதை விலாசமாக்கும்
சின்ன வேறுபாடு ... மனதை கலக்கும்
சின்ன மாற்றம் ... மனதை சமன்படுத்தும்.


உணருகிறேன் ......... உணருவோம்!


வாழ்க்கையை அதன் போக்கில் விட...
நான் ஞானியும் அல்ல.... சாமியும் அல்ல!
தவறுகளை திருத்தமுயல்வேன்.

எதுமே மாற்றத்திற்க்கு உட்பட்டது!
மனிதனின் மனம் ஒரு விதி விலக்கல்ல!


மன்னிப்பு கேட்ப்பது என் தன்னம்பிக்கை.
உண்மையை சொன்னது என் பலம்.
மன்னிக்க மறுப்பது உன்னுடையை தேவை
மறக்க நினைக்காதது உன்னுடைய குறைபாடு.

காலத்திடம் விட்டுவிட்டேன்....
என் பிரச்சனையை!


புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்
மனிதனின் மாறுபட்ட கருத்துக்களை...
உண்மைக்கு எப்போதுமே உயிர் உண்டு
என்று நம்புவோம்!

Friday, March 23, 2007

அசட்டுத்தனங்கள்...

(23-03-07----11.00pm)


குழந்தையுன் அசட்டுத்தனமான கேள்விகள்
பெரியவர்களின் அசட்டுத்தனமான நடத்தைகள்
மனிதர்களின் அசட்டுத்தனமான நம்பிக்கை
சூழ்நிலையின் அசட்டுத்தனமான மோதல்கள்
மூளையின் அசட்டுத்தனமான எண்ணங்கள்
சமூகத்தின் அசட்டுத்தனமான எதிர்பார்ப்புகள்
உலகத்தின் அசட்டுத்தனமான பார்வை
இவை எல்லாம்....
இயற்க்கையின் அசட்டுத்தனமான 'பரிமாணங்கள்'!!!

மறக்கவும்... மன்னிக்கவும்...

மற்க்கவும் மன்னிக்கவும்...
எத்தனை எளிதான வார்த்தைகள்.
ஆனால், கடிமையான எதிரி
'மனிதர்களுக்கு'......
மறக்கவும் மன்னிக்கவும்,
காலம் தாண்டி என்றாலும்
நம் காலம் இன்னும் முடியவில்லை!
வாழ்க்கை வாழ்வது சிலகாலம்
அதில் கோபங்கள் அர்த்தமற்றது!
கோபமே அர்த்தமற்றது அல்ல
ஆனால், நெடுநாளைய கோபம்
.....அர்த்தமற்றது..............
மறப்பதும், மன்னிப்ப்தும் மனித இயல்பு
அர்த்தமுள்ளதாக வாழ்வோம்
இந்த வாழ்க்கையை!!!

I FORGET...

(16-03-07-----11.00pm)


i asked for two words
'good bye'
in return... i got
"i don't want to pursue this relationship"


i never felt,
low in my life before
that day,
i really wished....


let me die the minute!
i am trying..
to forget everything
including.... myself!


someday,
you'll understand.
the reality is...
always hard to accept!

விடுதலை

(15-03-07---11.30pm)


மனதை அரித்த விஷயங்கள்
இன்று வெளியே விட்டதும்
மனதெல்லாம் அமைதி!
எத்தனை வேதனை....
இத்தனை நாட்க்களும்
பொய் சொல்ல மனம் வேண்டும்!
தேவை இல்லா பொய்கள்
இத்தனை வேதனை படுத்தும்
என்பதை இப்போது தான் உணர்கிறேன்!
மனதில் இன்று அரிப்பு இல்லை
விட்டு விட்ட மலைப்பு இல்லை!
மற்றவர்களுக்கு தவறாக தெரியலாம்
சத்தியம் மீறப்பட்டது என நினைக்கலாம்
தேவை இல்லா சத்தியத்தை
இத்தனை நாள் காப்பாற்றியதே முட்டாள்தனம்!
சத்தியம் வாங்கியவரின்
தேனையான சத்தியங்கள்
இன்றும் காப்பாற்றுகிறேன்!
உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன்!!!
இந்த சத்தியம்
தேவை இல்லாதது....
எனக்கு விடுதலை,
இந்த பொய் சத்தியத்தில் இருந்து!

true

may be the truth 'hurts'
but..... right,
unconditional........
still exists to me..................

Monday, March 12, 2007

மவுன போராட்டம்

(13-03-07-----9.53AM)

இந்த மவுன போராட்டம்
எனறு முடியும்.

எதற்கு எல்லாமோ
காத்திருந்தேன்....

இன்று, நாளை
என்று முடியும்?

மவுனம் பதில்
தருமா....???

ஒரே அலைவரிசை
என்பதால் தான்.....


இத்தனை கவலை
மவுனமே மனம் இறங்கவும்!


(balaji, i am waiting buddhu..... i am trying very hard to adjust..... pl, revert back soon balaji, the time is killing me balaji)

Saturday, March 10, 2007

தவறுகள்

நாம் தான் தவறு செய்யவேண்டும்
என்பது தேவை இல்லை
மற்றவர்களின்.....தவறான சத்தியங்கள்
நம்மை தவறானவார்களாக காண்பிக்க
அதுவே காரணமாகிறது.
சத்தியங்கள் போற்றப்பட வேண்டியது
சத்தியம் வாங்கிய நபர்
சத்தியவதியாக இருந்தால்
ஆனால்,வாங்கியவர்களின்,
எண்ணங்கள் புரிபடவில்லை....
உன்னிடம் உண்மையை சொல்ல
மனது துடிக்கிறது.....
இயற்க்கைக்கு எதிராக
எதையும் செய்வது இல்லை..
இந்த சத்தியம் என் எதிரி!
உண்மை உன்னை என்ன
செய்யும் என்று கவலையாக இருக்கிறது.
என்றுமே எதையும் உன்னிடம்
மறைத்தது இலலை....
இந்த உண்மையை மறைத்தது
நான் இல்லை......
தோழி என்ற இடை சொருகளின்
அபத்தமான சத்தியம்....
என்னுடைய தோழரின் அறிவுரை
உண்னையை சொல்....
தவறு நீ செய்யவில்லை.....
தேவை இல்லாமல்.....
சத்தியத்தை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை....
யோசிக்கிறேன்...... ஆனால்..... நீயே
இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறாய்....
என்ன செய்ய நண்பனே.....
நீயே சொல்? ........ உண்மையை
உன்னிடம் சொல்லவா....?




(i don't know what to say balaji..... i am in real pain.... i have to tell u lot of things but i don't know.... HOW?......... )

Friday, March 9, 2007

சத்தியம்

(9-03-07--- 10.00AM)

சொல்ல வேண்டும் என்று
மனது துடிக்கிறது.

ஆனால், செய்த சத்தியம்
என்னை தடுக்கிறது.

சத்தியம் ஞாயமான
காரணமாக இருந்தால் பரவாயில்லை.....

ஆனால், அபத்தமான
காரணத்திற்க்காக...

நான் என் தூக்கத்தை
இழந்து கொண்டு இருக்கிறேன்....

சத்தியம் வாங்கியவர்கள்
சாந்தமாக .....

ஒன்றுமே நடக்காதது போல
நல்ல தோழி என்ற வேடத்துடன்...

நானோ மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்.........

நல்ல நண்பனை இழந்து
கொண்டு இருக்கிறேன்

ஒன்றும் செய்யத்தெரியாமல்
செய்யமுடியாமல்...........



(never ever promise anyone without any proper reason balaji )

Sunday, March 4, 2007

குழந்தை

(4-03-07---11.20PM)

குழந்தையாக இருந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்.


எதை பற்றியும்
கவலை வேண்டாம்.


ஆண், பெண் என்ற
பேதம் வேண்டாம்.


நினைத்தவுடன்
அழவும்....

நினைத்தவுடன்
சிரிக்கவும்...

நினைத்தவுடன்
அடம்பிடிக்கவும்....

நினைத்தவுடன்
சாதிக்கவும்....

நினைத்தவுடன்
எதையும் மறக்கவும்...

குழந்தையாக,
இருந்திருக்கலாம்!



( what to u think balaji?)

Friday, March 2, 2007

காற்று

காற்று ஒரே இடத்தில்
நிலை கொண்டு இருக்கிறது.

மேகம் திகைத்து...
நோக்குகிறது.

எந்த திசையில்
வீசப்போகிறது....


எந்த திசையாக இருந்தாலும்
காற்றின் திசைதானே...

மேகத்தின் பாதை....
இரண்டிக்கும் பிரிவுகிடையாது.

இயற்க்கையின்
விதியே அதுதான்.




(again i am telling u balaji, if my intention is good, if my love for u is right... we'll get back to normal some day ....... i am waiting and i'll wait shadow.

shadow and soul never leave me, until i leave this world... so, shadow and soul stays within me.

may be it is late realization, but it set my mind in right track balaji. time heals nothing balaji, but our attitutes could make us different)

சுகமான சுமைகள்

சிரிப்பார்கள், சிந்திக்க வைப்பார்கள்,
செனறு கொண்டே இருப்பார்கள்.

சிரிப்பார்கள், அழவைப்பார்கள்
எட்டி நின்று வேடிக்கை பார்பார்கள்.

சிரிப்பார்கள், கண்ணாமூச்சு விளையாடுவார்கள்
என்ன எதிர்பார்க்கிறார்கள்?

அவர்களுக்கும் புரியாது
நமக்கும் புரியாது.

ஆனால்,
ரசிப்போம், சிந்திப்போம்...

வேதனைப்படுவோம்,
சுகமான எல்லாமே

சுகமான சுமைதானோ...
புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்!


பைத்தியக்கார உலகம்

பார்க்கிறோம், பழகுகிறோம்...
செல்கிறோம், மறந்துவிடுகிறோம்...
இல்லை... முயற்ச்சிக்கிறோம்.

இரயில் சிநேகிதம் போல
இப்போது,
கம்யூட்டர் சிநேகிதம்.

பேசுகிறோம் மணிக்கணக்காக
திடீரென்று.....
எல்லாம் மறைந்து விடுகிறது.

விட்டு விடுகிறார்கள்,
அல்லது
விட்டுவிடுகிறோம்.

சிலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
சிலர் மாட்டவிடப்படுகிறார்கள்.
சிலர் பிடியே இல்லாமல்....

ஆனாலும்,
இந்த மோகம்...
யாரை விட்டது.

எதையோ தேடுகிறோம்
மனிதனிடம் தேடாமல்
மெஷினிடம் தேடுகிறோம்.

அதனால் தானோ
அதற்க்கு உயிர் இல்லை.
இதுவும் மாயை தானோ?

இதை உணரும் போது
நாம் பைத்தியம் ஆகி இருப்போம்,
அல்லது எதிராளி பைத்தியம் ஆகி இருப்பார்கள்.

மெஷினுக்கு இவ்வளவு மதிப்பா?
புரிந்தது......ஒன்று........
மெஷினுக்கு உயிர் கொடுக்கிறோம்.

அதில் வரும் மனிதர்களுக்கும்
உயிர் கொடுத்து பார்க்கிறோம்.
சிலர் மூச்சு விடுகிறார்கள்.

சிலர் மூச்சு விட முயற்ச்சிக்கிறார்கள்,
சிலர் மூச்சு விட்டு தோத்துப்போகிறார்கள்.
சிலர் மூச்சையே நிறுத்திவிடுகிறார்கள்...

அதில்
நம்மையும் சேர்த்து தான்.
"பைத்தியக்கார உலகம்"....

"பைத்தியக்கார மனிதர்கள்"
என்னையும்....
உன்னையும் சேர்த்துதான்!



(so, don't worry abt this gal and boy friendships balaji... they are so many of them are hiding their real names and their real identity.... i hate ppl who uses three words often... fear, promise, God... they are all playing, hiding their true identity to make others feel good abt them... in a way they are succecding balaji... just read my innocence and ignorance post again balaji. u'll understand what i mean. don't worry.)

Tuesday, February 27, 2007

அடிப்படை

(27-02-07----9.45PM)


அன்பு என்பது ஆழமான ...
உறவின் அடிப்படை.

எப்போதும் வரலாம்
எபபோதும் போகலாம்.

ஆனால் நம்பிக்கை
அதுதான் அன்பு.

அன்பு எதிர்பார்ப்பு
இல்லாமல்...

அன்பு ஏக்கம்
இல்லாமல்...

அன்பு சார்பு
இல்லாமல்...

அன்பு சந்தர்ப்பவாதம்
இல்லாமல்...

அன்பு தேவைப்படும்போது மட்டும்
இல்லாமல்...


அன்பு, அக்கறை,
நெருக்கம், நம்பிக்கை


புரிந்து கொள்ளுதல்
இவைகள் தான் உறவின் அடிப்படை.


நீயும் என்னை புரிந்துகொள்ள
முயற்ச்சிக்கிறாய்....


அதானால் தான்
பதில் தருகிறாய்....


உனக்கும் என் வலி
புரிகிறது...


என் வலி
உனகும் வலிக்கிறது...


நான் புரிந்துகொண்டேன்
அதனால் சொல்கிறேன்...


மனப்பூர்வமாக சொல்கிறேன்
உனக்கு பிடித்ததை செய்...


நீ என் நிழல்
அது எப்போதும் விலகாது...


நான் இருக்கும் வரை
நிழல் என் நிஜம்!




NO PRESSURE BALAJI.

DO WHATEVER U THINK IS RIGHT. I UNDERSTAND SWEETY!

Wednesday, February 21, 2007

காதல் என்பது அன்பு

காதல் என்பதற்க்கு
ஆயிரம் அர்த்தங்கள்.

அன்னையின் காதல்
இரத்தபந்தம்.

தந்தையின் காதல்
அன்பு.

நண்பனின் காதல்
நட்பு.

சகோதரியின் காதல்
பாசம்.

சகோதரன் காதல்
பாசம்.

செட்டியார் பொம்மையின்
ஆடலும்

தண்ணீரின்,
ஓட்டமும்.

வெயிலின்,
உக்கிரமும்.

நிலவின்,
குழுமையும்.

காற்றியின்,
தழுவழும்.

இடியின்,
தாக்கலும்...

அத்தனையும் ... உறவின்
அன்பின் வெளிப்பாடு தான்!

மனதா... மூளையா...?

காகிதத்தில் கண்டேன்
என்னை எழுத்து வடிவில்.

வடிவத்தில் இருந்தது
என் மனதா...?

மனது என்பது
என் மூளையா?

என் எண்ணமா?
என் உணர்வா?

என் கற்ப்பனையா?
என் செயலா?

இல்லை வெறும்...
எழுத்து தானா...?

எழுத்தாக இருந்தால்
நிம்மதி!

என் கற்பனையாக இருந்தால்
தப்பித்தேன்!

என் உணர்வாக இருந்தால்
பிழைத்தேன்!

என் எண்ணமாக இருந்தால்
வருத்தப்படுவேன்!

என் மூளையாக இருந்தால்
வாழ்வேன்!

மூளைக்கு மட்டுமே...
உண்மை புரியும்.

மனது என்பது கண்ணாடி போல
...உடைந்துவிடும்.

அதனுடன் சேர்ந்து, மற்றதும்
மடிந்துவிடும்!

அர்ச்சனா - 1

"அர்ச்சனா... ஏய் என்ன பகல் கனவா? ஷாலினி அர்ச்சனாவின் தோளை மெதுவாக தட்டினாள்.

அர்ச்சனா பதட்டத்துடன் திரும்பினாள்.
"என்ன ஷாலு" அமைதியாக கேட்டாள்.


"என்ன பிராப்ளம்?" ஷாலினி அவளை சிறிது யோசனையோடு நோக்கினாள்.

"நான் லேட்டாதான் வருவேன்... நீ போயிடு ஷாலு" அர்ச்சனாவின் குரலில் சிறு வருத்தம் இருந்தது.ஷாலினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.


அர்ச்சனாவின் வீட்டில் எப்போதும் எதாவது பிரச்சனை இருக்கும். நாளை எப்படியும் அதைப்பற்றி பேசுவாள்.

ஷாலு அர்ச்சனாவின் ஐந்து வருட தோழி, இருவருக்கும் நல்லதொரு உறவு இருந்தது.


ஷாலினி சென்றதும் அர்ச்சனா தன் வேலையில் மூழ்கினாள். அவளுக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனமில்லை.வீட்டிற்க்கு செல்லவேண்டும் என்று நினைத்தாலே மனது கனத்தது.


ஆபீஃஸில் ஆள் யாருமே இல்லை ப்பூனை தவிர..... இவள் அடிக்கடி இப்படி லேட்டாக செல்வதை அவன் அறிந்தே இருந்தான்.


அர்ச்சனா சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். ஐந்து அடி ஐந்து அங்குலத்தில் கோதுமை நிறத்தில்.... அழகாக இருந்தாள். நீண்ட கூண்டல், முகம் அதுதான் அவளுடைய வரப்பிரசாதம். கடவுள் வஞ்சனை இல்லாமல் படைத்து இருந்தான். சிறிது பத்மினியை நினைவுபடுத்தும் முகம்.


குணத்தில் அவளை போல் இல்லை என்று அவளை பற்றி தெரிந்தவர்கள் எல்லோரும் பாராட்டுவார்கள். மிகவும் அடக்கமானவள்.அர்ச்சானாவின் தந்தை சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்துவந்தார்.... ஆறுவருடம் முன்பு ஏற்ப்பட்ட பஸ் விபத்தில் ஒரு காலை இழந்துவிட்டார்.


அதன்பின் எல்லாம் இவள் தலையில் வந்து விழுந்தது.அவள்தான் முதல் பெண் என்பதால் வேறு வழி இல்லை. இவளுக்கு பின் இரண்டு தங்கைகள்.

அம்மா சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டதாலோ என்னவோ முரட்ருக்குணத்துடன் இருந்தார்கள்.அர்ச்சனா எப்படியோ பி.காம். முடித்துவிட்டாள்.தெரிந்தவர்களின் உதவியுடன் இங்கே சேர்ந்தாள். வெறும் டைப்பிஸ்ட்டாக சேர்ந்தாள்... இன்று அக்கெளண்ட் பிரிவில் இருக்கிறாள். எ.காம். முடித்துவிட்டாள் இப்போது..... தோழியிடம் கம்யூட்டர் படிக்கிறாள்.


அர்ச்சனாவை நம்பி தான் அவள் குடும்பம் என்பதால் .... பணம் ...பணம் என்று பிய்த்துக்கொண்டு இருந்தனர். தந்தையின் மருத்துவ செலவு, தங்கைகளின் படிப்புசெலவு.... வீட்டு வாடைகை, மளிகை சாமான், தங்கைகளின் உடை இதில் அன்னையின் மருத்துவ செலவு என்று விழிபிதுங்கி போகிறாள் ஒவ்வொறு மாதமும்!


தங்கைகள் இருவரும் அவள் அன்னையை போல எதைப் பற்றியும் கவலை இல்லை... அவர்கள் தேவை முடிந்ததா... சென்றுவிடுவார்கள்.இன்றைய பிரச்சனை அவள் அன்னையின் ஸ்கேன்னுக்கு பணம் வேண்டும். அரசு மருத்துவமனையில் சென்றுபார்க்களாம் ஆனால் மறுத்துவிட்டார் அவளுடைய தாய்.


யாரிடம் பணம் கேட்ப்பது....?இதுவரை இருவரிடம் கேட்டு இருக்கிறாள்... ஷாலினி இவளுடைய பாஸ் சீஃப் மிஸ்டர். இராமநாதன். இவளை தன்னுடைய மகள் போல நடத்தினார்.



அவள் வேலை பார்க்கும் கம்பெனி பல இடங்களில் தங்களின் கைவரிசையை காண்பிக்கிறது.பல தொழில்கள் பார்க்கின்றன... இவள் இருப்பது தான் மெயின் அலுவலகம். அதனால் எம்.டியை அடிக்கடி பார்த்து இருக்கிறாள்.



இரங்கநாதன் ஊருக்கு சென்று இருக்கிறார். ஷாலுவிடம் ஏற்க்கனவே இருமுறை வாங்கியதையே தரவில்லை.....


தான் இத்தனை கஷ்டப்பட்டாலும் தன்னை ஏன் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஏதோ நான் ஏ.ஸி யில் உட்க்கார்ந்து தூங்கிவிட்டது போல அல்லவா நினைக்கிறார்கள்.


தனக்கும் கவலை உண்டு, அசதி உண்டு.... ஏன் சிந்திக்கமுடியவில்லை அவர்களால்.... தான், தான் அதற்க்குக் காரணமா? அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தாதது தன் தவறோ...?


இதெ கம்பெனியில் அவளை இருவர் மணந்து கொள்வதாக கேட்டனர். மிகவும் நல்லவர்கள்...ஆனால் அவளுடைய இந்த சிலுவை சுமக்கும் வாழ்க்கைக்கு கல்யாணம் ஒத்துவராது என்று மிக மென்மையாக மறுத்துவிட்டாள்.

அவர்கள் இருவரும் இன்று ஒரு வயது முழந்தையுடன்..... !


காதல் கத்தரிக்காய் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே காதலித்தாலும் அவள் கல்யாண்த்தை வீட்டில் ஒத்துக்கொள்ளப்போவது இல்லை...


அவளுக்கு நடந்த நல்ல விஷயமாக நினைப்பது... இந்த வேலை, ஷாலினி... ரங்கநாதன்!


அழுகை வந்தது, வீட்டில் அழுதால் அதுவே பெரிய பிரளயத்தை கிளப்பிவிடும்.போன முறை இவள் அழுதுவிட இவளுடைய தாய் பிலுபிலு என்று பிடித்துக்கொண்டாள்...."நான் என்ன கொடுமைக்காரியா இப்படி ஒப்பாரி வைக்கிற... எல்லாம் என் தலைஎழுத்து" அவர்கள் போட்ட போடில் இவள் திகைத்துப்போனாள்.


அன்றிலிருந்து அவள் வீட்டில் கண்ணீர் விடுவது இல்லை.ஆபீஸீல் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் மேஜையில் தலை கவிழ்து அழ ஆரம்பித்தாள்.ஆனால் இவள் தனியாக இல்லை.



எம்.டி. அறையில் இருந்து வெளியே வந்த அந்த உருவம்... இவள் அருகே வந்து நின்றது சத்தமில்லாமல்..........

திகைப்புடன் அவளை பார்த்தது செய்வது அறியாது நின்ற உருவம் மெதுவாக கேட்டது "இஸ் எவ்ரிதிங் ஆல்ரைட்......"


தூக்கிவாரிப்போட நிமிர்ந்தாள்... கண்ணீரை துடைக்க மறந்து அந்த உருவத்தை நோக்கினாள்....

Saturday, February 17, 2007

எங்கே சென்றாய்....

(17-02-07---11.00AM)


எங்கே சென்றாய்....
தேடுகிறேன்!
ஓடும் மேகத்தையும்
கையில் அடங்கா காற்றையும்...
கேள்வி கேட்கிறேன்?

இத்தனையும்
எதற்க்காக...?
சின்ன அன்பிற்க்காக!
அன்புபிற்க்கு
இத்தனை சக்தியா...?

சக்தியா...அழிவா....
எனக்கே தெரியவில்லை!
தேடுதலில் என்னை
இழந்து கொண்டுஇருக்கிறேன்
சந்தோஷமாக.... வருத்தமாக....!


காற்றைப் போல...
நீயோ பிடிபடாமல்!
நானோ...
மேகத்தை போல!
காற்று போகும் தசையில்...

இரண்டுக்குமே
தங்கள் இலக்கம் தெரியவில்லை!
எது மறையும்... எது தொடரும்...
காற்றே
உன்னிடம் சரண் "நான்"!!!


Wednesday, February 14, 2007

வெறும் கல் - நான்!

(14-02-7--- 11.30 AM)


எத்தனை தான் இடம் பெயர்ந்தாலும்
கல்லுக்கு பெயர் கல் தான்!

ஆயிரம் தேனி கொட்டினாலும்
ஒரு தேனி கொட்டினாலும்

வலி ஒன்றுதான்!
இருக்கும் இடத்தை சுற்றி...

கருங்கல் சுவர் இருக்கிறது
உடைத்து வெளியே வரமுயன்று

உடைந்து போகும் ஒருசிலரில்
நானும் ஒருத்தியா ... ?

ஏனென்றால் நானும்
கல்தானே...!

கல்லுக்கு ஏது உணர்ச்சி?
அதனால் தானோ...

இத்தனை அடிபடுகிறேன்.
எதுவரை படுவேன்...?

எத்தனை பேரிடம்...
மூச்சுமுட்டுகிறது!

வெறும் கல் தானே
எனக்கு ஏது மூச்சு...?

கல் சிற்ப்பியின் கையில்
அழகான சிற்ப்பம்!

கல் சித்தன் கையில்
அழகான் குடில்!

கல் மனிதன் கையில்
வெறும் கல் தான்!

உயிறும் இல்லை!
உருவமும் இல்லை!

"வெறும் கல் தான்"
"நானும்"!!!

மரியாதை

(15-02-07..... 10.30 AM)

மரியாதை என்பது...
கேட்டு வாங்குவது கிடையாது.
நம்மை மதிப்பவர்கள்
நமக்கு தரும் சன்மானம்.
கேட்காமல் கிடைக்கவேண்டும்.
இல்லை என்றால்...
நம்மிடம் ஏதோ குறை என்றுதான் அர்த்தம்!

Monday, February 12, 2007

வினோதங்கள்

(13-02-07--- 6.12AM)

நீ சந்தோஷமாக இருந்தால்
நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நீ வேதனையில் இருந்தால்
நானும் வேதனையில் இருக்கிறேன்.

ஏன் அப்படி என்று
உனக்கு கோபம் கூட வரலாம்.

பைத்தியக்காரத்தனம்
என்று நீ நினைக்கலாம்...

நீ என்ன...
நானேநினைக்கிறேன்.

ஆனால்
ஒன்றை மறந்துவிட்டாய்...

உண்மையான அன்பு
செலுத்தினால் மட்டுமே

மற்றவர்களுக்காக
வேதனை, சந்தோஷம்...

நாம் அனுபவிக்கமுடியும்
உணர்ந்துகொண்டே இருக்கிறேன்

நான் புரிந்து கொண்டேன்
நீ புரிந்து கொள்வாயா நண்பனே!!!

(this is for u sweety... i really really care about u da)

வேதனை

(12-02-07---9.45AM)


மற்றவர்களின் வேதனை
நம்மை தாக்குமா...?

பெற்றோருக்கு பிள்ளைகளின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!

பிள்ளைகளுக்கு பெற்றோரின்
வேதனை தாக்கும் - இயற்க்கை!

கணவன், மனைவி உறவில்
வேதனை தாக்கும் - கடமை!

சகோதரன், சகோதரி உறவில்
வேதனை தாக்கும் - இரத்தபந்தம்!

நண்பர்களின் உறவில்
வேதனை தாக்கும் - அன்பினால்!

உன்னுடைய வேதனை
என்னை தாக்குகிறது!

என்னை தூங்கவிடாமல்
தம்பியா... நண்பனா...?

நம்முடைய உறவிற்க்கு
பெயர் வைத்தாய்!

என்னுடைய உண்ர்வுகளுக்கு
மதிப்பு தருகிறாயா!?

என்னுடைய வேதனையும் சேர்த்து
என்னை தாக்குகிறது!

இடைவெளி என்பது
மனதுக்கு தேவை இல்லை!

அது ஒன்றுதான்
மனிதனிடம் இருக்கும்..

ஒரே வைரம்!
பட்டை போடப்பட்டு இருக்கும்

வாழ்க்கை என்னும்
தீட்டுதலில்!

ஆனாலும்
பட்டை போடவில்லை....

என்றாலும்
வைரம்.... வைரம் தான்!!!


( i don't know what is happening there da... i was really worried about u balaji....whether u believe that or not it doesnt matter da... i care about u, and i always will)

Sunday, February 11, 2007

சட்டங்கள்

(11-02-07--10.40 AM)

எத்தனையோ பேரை சந்திக்கிறோம்
எத்தனையோ பேருடன் பழகுகிறோம்
வருவார்கள், போவார்கள்...
சிலர் நிற்ப்பார்கள்
சிலர் காணாமல் போவார்கள்.
ஆனால்
ஒரு சிலர் மட்டும்
மனதைவிட்டு அழியமாட்டார்கள்
அழிக்கவும் முடியாது!
காரணங்கள் நிறைய இருக்கலாம்.
காரணமே இல்லாமல் கூட இருக்கலாம்.
சட்டம் அடித்து
ஆணியில் மாட்டியது போல
மனதில் பதிந்து போவார்கள்!
நாம் அழியும் வரை
அந்த சட்டமும் அழியாது!
நீ சட்டத்தில் இருக்கிறாய்
அழிக்கவும் முடியாது
அழியவும் செய்யாது!
அதுதான் நட்பு!
கற்ப்பை போல நட்ப்பையும்
எண்ணவேண்டும் என்றார்கள்
உண்மைதான்
இரண்டுமே....
போற்றி பாதுகாக்கவேண்டும்!!!


(this poem is for u balaji. so many friends r coming but i couldnt relate to anyone da. it is only u i feel free and comfortable with... i dont have any inhibitions with u...ysday i commented on giftson blog about his post( actually i want to him my piece of mind... he is crossing his limits with his posts) but he came to my mail saying he wanted to chat with me. i simply said i dont believe anyone and i told him... tell me ur real name... but he dint replied and i am happy. i dont want to talk to anyone. only u... i am happy with our frienship and that is enough for me)

Saturday, February 10, 2007

அன்னை

(10-02-07---11.00AM)

அழகிய சிறுவன்
ஆடியபடியே, துறு துறுவென்று..
வயது என்று எண்ணினேன்!

நடவடிக்கையில்
சின்ன வித்தியாசங்கள்...
உணர்ந்தேன்!

குதித்தான், சிரித்தான்
சிறிது இடைவெளியில்
கால்களும் கைகளும்...

முறுக்கியபடியே...
பின்நோக்கி சென்றன.
விளையாடுகிறானா...?

மண்டையில் உறைத்தது
இல்லை!
நரம்பியல் பிரச்சனை...!

அருகே தாய்..
அமைதியாக
அமர்ந்து இருக்கிறாள்.

எந்த விதமான மாற்றங்களும் ...
இல்லாமல்,

கண்களில் அன்புடன்!!!

அவனோ...
எல்லோருக்கும்

காட்ச்சிப் பொருள் ஆனான்!

அன்புடன் மடியில் அமர்த்தினாள்.
அவனுடைய ஆடல்கள் நிற்க்கவில்லை.

வியப்புடன் தாயை நோக்கினேன்!

இதுதான் அன்போ
நீ எதுவாக இருந்தாலும்
நீ என் உயிர்!

தாயின் அன்பிற்க்கு
இந்த உலகமே ...
தலைவணங்கவேண்டும்!!!



(ysday, i went to perambur and saw this boy on the station da... still i couldnt forget his actions and her mom's gestures balaji)


Friday, February 9, 2007

அடிமையா...?(addiction)

(9-02-07--- 5.30 PM)

சின்ன கேள்விகள்
என் சிந்தனையை
இடம் மாற்றியது.

சொல்வது சரியா?
அல்லது
எனது கற்பனையா?

சிறு கோபத்துடன்
சிறு வருத்தத்துடன்
எண்ணங்கள் ஓடியது...

கோபம்
என்னை காக்க
வைத்ததிற்க்கு...!

கோபம்
என்னை இத்தனை
வருத்தப்பட வைத்ததிற்க்கு...!

கோபம்
என்னை இத்தனை
அன்பு செலுத்த வைத்ததிற்க்கு...!

கோபம்
என்மீது...இதில்
ஞாயம் இருக்குமா என்று...?

கோபம்
என்மீது ...இத்தனை
முட்டாளாகிவிட்டேனா...!

கோபம்
என்மீது...எப்படி
அடிமையானேன்...!

வருத்தம்
என்னை தவறாக
எடை போடுகிறார்களோ...?

வருத்தம்
நான் தான்
புரிந்துகொள்ளவில்லையா...?

வருத்தம்
தேவை இல்லாமல்
குழப்புகிறேன்...!

வருத்தம்
எதற்க்காக நான்
வருத்தப்படுகிறேன்...!

இத்தனை கேள்விகளுக்குப் பின்
சின்னதாக மனதில்
மின்னல்!

எதையும் ஏன்...
கோபத்துடன், வருத்தத்துடன்
எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஞாயம் இருக்கலாம்
மனதின் மூலையில்
சந்தோஷமாக...!

நல்லதிற்க்காக சொல்லி இருக்கலாம்
எதையும் நல்லதாக
எடுத்துக் கொள்ளவோமே...!

எடுத்துக் கொண்டேன்
நல்லதனமாக...
நன்றி!

திருத்திக் கொள்ளப்போகிறேன்
என் தவறுகளை
என் கட்டுப்பாட்டிற்க்குள்!

எப்போதுமே
அடிமை அல்ல எதற்க்கும்
இப்போது மட்டும் ...ஏன்?

விட்டுவிட்டேன் என்று
அர்த்தம் அல்ல
இனி அடிமை அல்ல ...அவ்வளவே!

குழப்பத்தில் தான்
உணரவேண்டி இருக்கிறது
நானும் சாதாரண மானிடன் தான்!!!

(no hard feelings balaji. i am really happy that u asked that que... may be i am a short temper person but i am not a fool to see any truth in it.so, thank u. if u think anything is wrong pl, tell me.. dont worry about my temper... it only last for 30min and i can't be angry with u for a long time bro. THANX! HONESTLY DA! )






Thursday, February 8, 2007

வடிவங்கள்

(8-02-07----8.30AM)

அழகிய இரண்டு எழுத்தில்
அன்யோன்யத்தை வெளிப்படுத்தலாம் -நாம்!

அழகிய மூன்று எழுத்தில்
மனதை வெளிப்படுத்தலாம்-காதல்

அழகிய நான்கு எழுத்தில்
உலகத்தை வெளிப்படுத்தலாம்- சிநேகம்

அழகிய ஐந்து எழுத்தில்
நம்மை வெளிப்படுத்தலாம்- நம்மிக்கை

அழகிய நம்பிக்கையை
வெளிப்படுத்தலாம்- வாழ்க்கையாக!

மனிதர்கள்

(8-02-07--- 8.25AM)

கசகச வென்ற நெருக்கடியிலும்
கையை பற்றியபடி நடக்கிறார்கள்
உலத்திலேயே அவர்கள் இருவர் மட்டும்தான்
என்பது போல...!

அத்தனை நெருக்கடியிலும்
குழந்தைகளின் கையை
தரதரவென்று இழுத்தபடி... தாய்மார்கள்
ஆனால் சந்தோஷமாக...!

நிமிர்ந்து நடக்க இடமில்லை
ஆனாலும் முகம் முழுக்க புன்னகையுடன்
நடக்க முடியாமல் நடக்கும்
வயதானவர்கள்...!

இத்தனையும் பார்த்தபடி
சிலர் வெறுப்புடன் நடக்கிறார்கள்
அவர்களுக்கு...
என்ன பிரச்சனையோ...!

ஆனாலும்
உலகம் நிற்காது!
உலகம் பிரளாது!
நம்மையும் சேர்த்துதான்...!

எங்கே ஓடுகிறார்கள்...?

(8-02-07--- 8.20 AM)

எத்தனை மனிதர்கள்
விதவிதமாக...
இங்கும் அங்கும் பறந்தபடி
எதை தேடுகிறார்கள்?
எதை தொலைத்தார்கள்?
எதை எதிர்பார்கிறார்கள்?
ஏதேதோ எதிர்பார்ப்புகள்!
சிரித்த முகம்
சிந்தனை முகம்
சிடு சிடு முகம்
கப்பலை கவிழ்த்தது போல
சிலரோ...
உலகமே தங்கள் கையில் என்பது போல
கம்பீரமாக!
ஆனால்
எல்லோரும் ஒன்றுதான் செய்கிறார்கள்.......
ஓடுகிறார்கள்!
ஒரே கேள்வி...
எதை நோக்கி....?

Tuesday, February 6, 2007

இயற்க்கையா?

காமம் .... இயற்க்கை
இயற்க்கை ... மனிதனின் உணர்ச்சி
உணர்ச்சி ... உடலின் தேவை
உடலின் தேவை ... கிளர்ச்சி
கிளர்ச்சி ... நரம்பின் எளிர்ச்சி
எளிர்ச்சி ... மூளையின் தூண்டுதல்
மூளையின் தூண்டுதல் ... மனது
மனது ... நம் கட்டுப்பாடு
நம் கட்டுப்பாடு ... மனிதனின் பலம்
மனிதனின் பலம் ... எதையும் கடந்துவரும்
கடந்துவர ... வயது முக்கியமல்ல
முக்கியம் ... நாம் யார் என்பது
நாம் யார் ... தீர்மாணிப்பது
"நாமாகத்தான் இருக்கவேண்டும்"
உணர்ந்தவர்கள் ... தப்பிக்கிறார்கள்
முடியாதவர்கள் ... தத்தளிப்பில்
தவிக்கிறார்கள் ... ஞாயப்படுத்துவதில்
ஞாயப்படுத்த வேண்டியது ... இயற்க்கையை அல்ல
நம்மை ...நம் கட்டுப்பாட்டிற்க்குள்!!!


(what do u say habibi?)

Monday, February 5, 2007

சின்ன சின்ன மாற்றங்கள்



(5-02-07---- 12.35 PM)


சின்ன அசைவு
இலைகள் உதிர்கின்றன
பூமிக்கு மெத்தையாக!

சின்ன காற்றில்
பூக்கள் பறக்கின்றன
நம்மை அர்ச்சிக்க!

சின்ன மழையில்
தண்ணீர் நிலைகள் நிறைகின்றன
மனதைப் போல!

சின்ன வெயிலில்
தாவரங்கள் உயிர் பெறுக்கின்றன
இயற்க்கையாக!

சின்ன சிரிப்பில்
உலகத்தை .........
.........மறக்கலாம் நிதர்சனமாக!!!

அழகிய நிஜங்கள்

(5-02-07---- 1.42 PM)

அழகிய மலரின் சிரித்த முகம்
தண்ணீரின் நிறமின்மை
பச்சையின் குளுமை
நீலத்தின் அலட்டல்
மஞ்சளின் விஸ்தரிப்பு
கருப்பின் அழகிய மறைப்பு
கடலின் பொங்கும் முறைப்பு
மரத்தின் ஸ்திர குணம்
இத்தனையும்
பாலின் வெள்ளை நிறமனதில்
ஊடுருவி அழகாக
பிரதிபலிக்கும்
"வாழ்க்கையின் நிஜங்களாக"!!!

Sunday, February 4, 2007

Happy debate with nature

(5-02-07---- 8.00 AM)


வானத்தை கையில் பிடிக்கவேண்டும்
அதை போர்வையாக போர்த்திக்கொள்ள!

பனியை பிடிக்க வேண்டும்
என் மனதை குளிரவைக்க!

காற்றில் பறக்கவேண்டும்
பட்டாம் பூச்சி போல - தடுமாறாமல்!

நிலவை எட்டிப் பிடிக்கவேண்டும்
என் தூக்கத்தை இனிமையாக்கியதற்க்காக!

சூரியனை நிமிர்ந்து பார்க்கவேண்டும்
எனக்கும் கோபம் வரும் என்று சொல்ல!

பூக்களின் மலர்ததலில்
சிரிப்பை சிறை வைக்கவேண்டும்!

கடலை பார்த்து பொறமை
ஓயவேமாட்டாயா!

மழையை பார்த்து கேட்க்கவேண்டும்

அழுகையா, ஆனந்தக் கண்ணீரா?

இயற்க்கையே என்னை
எப்படி சிறை வைப்பாய்?

உன்முன் எல்லோருமே
சமம் தானே!!!



(too much fog here(6.00) and i was so mermerised by that fog and i saw the first sunshine through that fog .... simply fantastic. so my happy debate with the nature)

இனிமையான தருணங்கள்

(5-02-07--7.27 AM)

அன்னையின் அன்புக் கேள்விகள்
சில அபத்தமாக தோற்றினாலும்
எத்தனை அன்பு இருந்தால்
சின்ன மாற்றத்தைக் கூட
அவர்கள் உணருகிறார்கள்.

ஒன்றுமே சொல்லவேண்டாம்
ஆனால்,
தேவைகள் என்ன என்பதை
குறிப்பால் உணர்ந்து விடுகிறார்கள்
எத்தனையோ முறை வியந்து இருக்கிறேன்...

இத்தனை அன்பு
எத்தனை அன்பு
ஆனால் அதன் முழு அர்த்தத்தை
உணர்ந்தேன்...
நான் தாயான போது!

இருந்தாலும்...
இன்றும்
அதே அன்பு அன்னையிடமிருந்து
நான் வளர்ந்துவிட்டேன்
என்றாலும்... நான் அவர்கள்
கண்களுக்கு அதே குட்டிப்பெண்தான்!

அந்த எண்ணத்தை
எப்போதும் மாற்ற ...
எனக்கு விருப்பமில்லை.
என் பிள்ளைகள் கூட
கேலி செய்கின்றன...எங்கள் இருவரையும்

ஆனாலும்
விரும்புகிறேன்....
அதே கேள்விகள்
அதே குறிப்பறிந்து செய்தல்
இனிமை அதில் தான் எனக்கு......

என்னுடைய பலமும்
என்னுடைய எண்ணங்களும்
என்னுடைய பயங்கள்
எல்லவற்றையும்
சிறை வைக்க விரும்புகிறேன்....அந்த

"இனிமையான தருணங்களில்"!!!


Saturday, February 3, 2007

கண்ணோட்டம்

(3-02-07--- 11.00AM)

கடவுள் - 1


காண்பவர்களின் கண்ணோட்டம்!
ஏதோ ஒன்று இருக்கிறது
அது என்ன என்று தேடுகிறோம்.
அந்த ஒன்று
நம்மை மீறியதாக இருக்கவேண்டும்
நம்மை பயப்படவைக்க வேண்டும்.
நம்மை பண்படுத்த வேண்டும்.
நம்மை ஞாயப்படுத்த வேண்டும்.
பெயர் என்ன வேண்டுமானாலும் வைக்கலாம்.
சிலருக்கு இது இயற்க்கை
சிலருக்கு இது செயற்க்கை
சிலருக்கு இது கடவுள்
"காண்பவர்களின் கண்ணோட்டம்"!!!



ஆரோக்கியம் -2

உடல் என்பது சுவர்
சித்திரம் என்பது வாழ்ககை
சித்திரம் வரைய சுவர் வேண்டும்
சுவர் சிதைந்து இருந்தால்
சித்திரம் வரைவது கடினம்.
சித்திர்த்திற்க்கு சில தேவையானவை
கடவுள், அன்பு, செல்வம்!





அன்பு -3

அன்பு என்பது பட்டாம்பூச்சு போல
பிடிக்க சென்றால் பறந்துவிடும்.
ஆனால் கிடைத்த இடத்தில் அமர்ந்துவிடும்
அன்பு ஏங்கும் சில நேரங்களில்
அதற்க்கு அர்த்தம் பல...
ஆனால் மனிதர்களை பொறுத்து
அதற்க்கு பெயர்களும் உண்டு.
நிலையானது என்று நெருங்குவது கடினம்.
நிலையானது இல்லை என்று ஒதுக்குவது கடினம்.
ஆனாலும் அன்பு சில நேரங்களில் உண்மை
சில நேரங்களில் கடவுள்
சில நேரங்களில் கொடுமை
முடிவில் அன்பு சில கேள்விக்குறிகளை
விட்டுச் செல்லும்........
அதன் "பாதச்சுவடுகளாக"...!!!



செல்வம்-4

செல்வம் என்பது ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்பது தேவைக்கு தான்.
தேவை என்பது நாம் அதை நாடும் வரை
நாடுவது என்பது மனிதர்களின் குணம்.

குணம் இரண்டு வகை...
"பணக்காரன், ஏழை"!


பணக்காரன்

பணத்திற்க்கு தடைகள் - தடை
நம்பிக்கைக்கு - தடை
பழகுவதற்க்கு - தடை
சில குணத்திற்க்கு - தடை
பயத்திற்க்கு - தடை
ஏழைகளுக்கு - தடை

வாழ்க்கை முழுதும் பணத்திற்க்கு காவல்.
வாழ்க்கை முழுதும் செல்வத்திற்க்கு அடிமை.
வாழ்க்கை முழுதும் பயதுடன் கழிதல்
கழிதலில் கழிக்கப்படுவது நல்ல மனிதர்களையும் தான்!!!


ஏழை

ஒன்றும் இல்லை என்பது ஒன்றுமல்ல
ஒன்றும் இல்லை என்பது ஆசை இல்லை என்பது அல்ல!
பணம் அவர்களுக்கு ஒரு கனவு
கனவு சிலருக்கு மனதை சாகடிகிறது
சிலருக்கு பணம் வெறும் மாயை
அது அவர்களை ஒன்றும் செய்வது இல்லை!

ஏழைகளுக்கு பணக்காரர்கள் தழும்பு
பணக்காரர்களுக்கு ஏழை ஒரு மலிவானவன்!


"இருவருக்கும் நடுவில் இருப்பது ஒரு பொய் தோற்றம்"!


இருவரும் இருவருக்கும் பயப்படிகிறார்கள்
எதுவும் ஞாயம் என்று ஒதுக்கமுடியாது
அறியாமை என்று விலக்கமுடியாது!

இருவரும் ஒன்றை மறந்துவிட்டனர்மனிதர்கள் என்பதை....!

தங்களை காப்பாற்ற ஓடுதலில்
தங்களின் இனிய வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.

இதில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத
சில பணக்காரர்களும், சில ஏழைகளும்!

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது!


"உலகத்தின் சில பல எதார்த்தமான உண்மைகள்"!!!




Friday, February 2, 2007

முகவரி

(3-02-07---10.08AM)


முகவரி எனபது முக்கியம்
முக்கியம் எதனால் அடையாளம்
அடையாளம் என்பது உயிர்
உயிர் என்பது உடல்
உடல் என்பது ஆதாரம்
ஆதாரம் என்பது மூச்சு
மூச்சு என்பது பிரியும் வரை...
முகவரி முக்கியம்!

பகல் கனவு

(3-02-7---- 7.23 AM)

வானத்தை கையில் பிடிக்கவேண்டும் - கற்பனை
நிலவில் நடக்க வேண்டும் - முடிந்தது மனிதனால்
மேகத்தை கடந்து செல்ல வேண்டும் - விமானம்
வேலை பற்றிய கனவு - உண்மை என்றால் முடியும்
வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் - நிழல் நிஜமாகும்.
குடும்பம் பற்றிய சிந்தனை - மனதின் பலம்
பகல் கனவு - நிஜத்தின் நிழல்கள்.
நிஜத்தின் நிழல்கள் உண்மையாகும் - செயல்கள் நடந்தால்
செயல்கள் நடப்பது - நம் கையில்
நம் கையில் என்பது - பகல் கனவின் நிஜம்!


( ur comment about pagal kannau made me to write this balaji... i need to write more but next time. thanx, some how ur comments makes me think something... give me more insightful comments balaji.. it really creates some awareness inside my mind. u r brillianr bro... honestly. it it is not formatted because just i am typing from the min i thought about it, so if there is any mistake in the poem... sorry)

மாயை

(2-02-07--- 10.40 AM)


எதுமே இந்த உலகில்
நிலையானது இல்லை!

எல்லாமே ஒரு மாயை
நாம் என்னும் எண்ணங்கள் கூட...!

நேரத்திற்க்கு நேரம்...
நிமிடத்திற்க்கு நிமிடம் மாறலாம்!

நாம் பார்க்கும் பொருட்க்கள்
பார்வைக்கு பார்வை வேறுபடும்!

நாம் சந்திக்கும் மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து மாறுவார்கள்!

நம்முடைய செயல்களே
நேற்று போல் இன்று இருக்காது!

எல்லாமே ஒரு மாயை
எதையும் ஏற்றுக்கொள்வோம்!

மாயையின் குணமே
அதுதான்....!!!

மாயை - மாற்றம் - பணிவோம்.

அமைதி - அர்த்தங்கள்

(2-02-07---- 10.20AM)


சில நேரங்களில்
சில அலசல்கள்...
அமைதியை கெடுக்கின்றன!

நம்முடைய மன ஓட்டத்தை
பிரதிபலிப்பது தான்
நம்முடைய எண்ணங்கள்!

எண்ணங்களுக்கு
வர்ணம் பூசுவது
நம்முடைய சிந்தனை!

சிந்தனையின் தாக்கம்
சந்தோஷமாக...
வருத்தமாக...

ஆனால்அமைதியை
சிலநேரங்களில்
அதன் போக்கில் விடவேண்டும்!

சில நல்ல விஷயங்கள்
சில நல்ல மாற்றங்கள்
சில நல்ல சிந்தனைகள்

.....ஏற்ப்படலாம்!
அமைதிக்கு இத்தனையும்
சத்தியமாக உண்டு!

ஆனால்....
நாம் அமைதியை
சரியாக புரிந்துகொண்டால்!

நான் புரிந்துகொள்ள முய்ற்ச்சிக்கிறேன் ...
முயற்ச்சிப்பேன்...!
நன்றி நண்பனே உனக்கு.....!!!

(ur comment......i like ur silence..because i can intrepret the way i want!! what do you think meena??".....


may be i was very upset about that first, but eventually i thought about that, u r right... well, i dont know why u said that... i dont even want to know. but thanx. it gave me some insight into that matter deeply....... thank u so much balaji)

my insight about ur silence... i might be wrong but this is what i like....



என்னுடைய கற்பனை கெடுகிறது
என்று நீ நினைத்து இருக்கலாம்!

என்னுடைய வேலை கெடுகிறது
என்று நினைக்கலாம்!

நானும் உன்னுடைய வேலையை
கெடுத்து இருக்கலாம்!

என்னுடைய மனபலம் குறையும்
என்று நினைத்து இருக்கலாம்!

உன்னை எப்போதும் என்னால்
தவறாக எண்ணமுடியாது பாலாஜி...

நீ என் நண்பன் , சகோதரன் என்பதால் அல்ல
நீ ஒரு நல்ல மனிதன்!

அதை முழுதுமாக நம்புகிறேன்
நம்புவேன் எப்போதும் நண்பனே!!!

(this is for u balaji.....THANX)

கற்பு

கற்பு என்பதற்க்கு
வரைமுறை இருக்கிறதா?
உடையில்,
நடையில்,
உணர்வில்,
மனதில்,
நடத்தையில்,
எல்லாமே "மாயை".
நல்லவர்களுக்கு
கற்பு என்பது
"வாழ்க்கை முறை".
அதை
ஆடை, மனது என்று
ஆடம்பர ஊத்தாக்குகிறார்கள்;
எதையும் உணரத்தெரியாத
கற்புக் அரசர்களும், கற்புக் அரசிகளும்!



(டிவி, சினிமா, பேப்பர்....படித்து நொந்துபோய் எழுதியது)

Thursday, February 1, 2007

தோழமை

(1-02-07---4.10 AM)


தோழமை...
எத்தனை தான் பறந்தாலும்
ஒரு சின்ன மாற்றம்
திரும்பி பார்க்கவைக்கும்!

நாம் செய்வது சரியா?
நமது தோழைமை சரியா?
நாம் தகுதி ஆனவர்களா?
அவர்கள் தகுதி ஆனவர்களா?

தோழமைக்கு....
முக்கிய தகுதி,
உண்மை...நம்பிக்கை!!!
எத்தனை முயன்றாலும்


தோழமையில்
வெறுப்பும்,
பாராமுகம்...
சகித்துக் கொள்ளவது கடினம்!

சண்டை போடலாம்,
திட்டலாம்... விலகலாம்.
பிறகு சேரலாம்...
எதற்க்கும்
காரணம் முக்கியம்!!!

இல்லை என்றால்
தோழமைக்கு
மதிப்பும் இல்லை....
மரியாதையும் இல்லை!!!


(what do u say balaji?)

Tuesday, January 30, 2007

நம்பிக்கை

(29-01-07--- 9.00 AM)


இரண்டு மாத கால வாழ்க்கை...
புரட்டிப்பார்த்தேன்!

எத்தனை சந்தோஷம்
எத்தனை அன்பு பரிமாற்றங்கள்!

கனவில் நடப்பது போல...
வானத்தில் பறப்பது போல!

அத்தனை சந்தோஷம்
என் கண்ணே பட்டுவிட்டது!

திருஷ்டி சுத்தி போட்டாலும்
போகாது போல...!

கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது என்பார்கள்!

சரியாகுமா..?
மனதின் மூலையில்...

சின்ன நம்பிக்கை ஆகும் என்று!
"நம்பிக்கை தானே...வாழ்க்கை"!!!

அமைதியின் அர்த்தம் என்ன...???

(29-01-07---- 8.00AM)

அமைதி!
இதற்க்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
எத்தனையோ அர்த்தங்கள் தேடினேன்.
என்னையே சமாதானப்படுத்துகிறேன்
என்னையே ஏமாற்றுகிறேன்!


எதற்க்காக என்பது தான் புரியவில்லை.
என்னை பிடிக்கவில்லையா?
சிறிது இடைவெளி தேவையா?
ஒன்றுமே வேண்டாமா?
மனது வலிக்கிறது!


இத்தனை அன்பை
ஒரு அமைதி கெடுக்குமா?
அமைதிக்கு நிறைய ...
சக்திகள் உண்டு!
ஒரு மனிதனை உயிரோடு கொள்ளவும்....


அடுக் அடுக்கான கேள்விகள்
ஆயிரம் எண்ணங்கள்
வருத்தமாக இருக்கிறது.
இந்த வருத்தம் கூட
பைத்தியகாரத்தனமாக அமைதி எடுக்குமோ?


அன்போ, பாசமோ
கடையில் வாங்கும் பொருள் இல்லை.
பிடிக்கவில்லை என்று
தூக்கி எறிய....
அல்லது ஒதுக்கிவைக்க?


பாசத்திற்க்கும், அன்புக்கும்
நான் எப்போதும் "அடிமை"
என்பது என்னை தெரிந்தவர்களுக்கு...
நன்கு தெரியும்.
என்றுமே நான் பிரச்சனையில்லை... யாருக்கும்!


இந்த அமைதியின்
அர்த்தம் தெரிந்தால்...
அமைதி எனக்கு கிடைக்கும்.
அமைதி பதில் தருமா?
எல்லாமே கேள்விக்குறிதான்???



Monday, January 29, 2007

காற்றுக்கு வேலிகள் இல்லை
உங்கள் அன்புக்கும் வேலிகள் இல்லை!

உங்கள் அன்பு எங்களை
முன்னேற விடாமல் செய்கிறது!

உங்களின் அடக்க பாசத்தினால்
வீட்டின் கிணற்றுத் தவளையாக நாங்கள்!

அடைத்த வீட்டில்
எப்போதும் மூச்சு முட்டும்... காற்று தேவை!

விஷமோ, அமிர்தமோ
இரண்டுமே அதிகப்படி நாசம் தான்... புரிந்துகொள்ளுங்கள்!

(what do u say?)

Sunday, January 28, 2007

காதல் நந்தவனம்

காற்று போல இனிமையாய்
ஆனால், மெதுவாக வீசுகிறாய்!

மழை போல பொழிகிறாய்
ஆனால், நேரம் பற்றி தெரியவில்லை!

பனி போல குளிர்கிறாய்
ஆனால்,எதனிடம் என்பதை அறியவும்!

தண்ணீர் போல ஓடுகிறாய்
குறையை சொல்ல வந்தால்!

கடல் போல மோதுகிறாய்
உன்னையும் மாற்ற விரும்புகிறேன் "மென்மையாக"!

----------------------------------------------

அன்பின் வெளிப்பாட்டினால் சொல்கிறேன்
புகை வண்டியை நிறுத்தவும்!

உன்மீது உள்ள காதலால் சொல்கிறேன்
எங்களுக்காக நேரம் செலவழிக்கவும்!

உரிமை இருக்கிறது, அதனால் சொல்கிறேன்
நீங்கள் யார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

நம்முடைய வாழ்க்கை என்பதால் சொல்கிறேன்
நேரம் பொன்னானது!

பயணம் முடியவில்லை... தொடர்கிறது
உங்கள் அன்பினால் தான்!


(what do u think bro? do u want me to send these poems or write some other?pl, honest opinion da)

Saturday, January 27, 2007

சில அர்த்தங்கள்!

(27-01-07--- 10.31 PM)


கோபமாக இருக்கிறோம்
என்பதற்க்கு
அர்த்தம்
கோபப்படும் "நபர்"

நம்மை விரும்பவில்லை
நம்மை மதிக்கவில்லை
என்று அர்த்தம்....
"இல்லை"!

அந்த நபரை
நாம் வெறுக்கிறோம்
என்றும் அர்த்தம்
"இல்லை"!

சிலநேரங்களில்
எதிர்பார்ப்புகள்....
மனதில் சிறு கிறுக்கள்களை
உண்டுபண்ணும்!

அதை வெளிப்படுத்தவேண்டும்
நம்மை பிடித்தவர்களிடம்
அல்லது
நாம் நம்புவர்களிடம்!


கோபம் என்பது
நெருப்பு போன்றது.
அதை
அணைக்கவேண்டும்!

அன்பு என்பது
சின்ன கோபத்திலும்
சிறிய எதிர்பார்பிலும்
"இறந்துவிடாது"!

சின்ன சின்ன கோபங்களும்
சின்ன சின்ன ஊடல்களும்
மனிதனை....
தன்னை உணரவைக்கின்றன!

உனக்கும் நன்றி நண்பனே!
உனக்கு தெரிந்த முறையில்
என்னை,
"சமாதானபடுத்தியதற்க்கு"...!!!

Friday, January 26, 2007

தொடரும் பயணம்........

(26-01-07--- 10.35 PM)

கல்யாணநாள்
எப்போதும் போல்
தனித் தனியே.....தொடர்கிறது!

இது
விதியா....
நேரமா.....தெரியவில்லை!

இதையும்...
ஏற்றுக்கொண்டேன்
ஏனென்றால்;

முதல் முறை தெரியவில்லை
பின்பு கவலையுற்றேன்
இன்று மறந்துபோனேன்...!

வாழ்க்கையில்...புன்னகையுடன்
எதையும் ஏற்றுக்கொள்ள
முயற்ச்சிக்கிறேன் ... சின்ன வருத்தத்துடன்!

முடிந்ததிற்க்கு ... சந்தோஷமாக!
முடியாத்திற்க்கு ... கவிதை கிறுக்கலாக!
தொடர்கிறது வாழ்க்கை.............



காத்திருக்கிறேன்....

(25-01-07----- 9.00 PM)

கருவூலத்தில் காத்திருந்தேன்
தாயின் அன்பிற்க்காக!

பள்ளியில் காத்திருந்தேன்
குருவின் அன்பிற்க்காக!

மணவாழ்க்கையில் காத்திருந்தேன்
கணவனின் அன்பிற்க்காக!

கருவுற்றிருக்கும் போது காத்திருந்தேன்
குழந்தையின் அன்பிற்க்காக!

இன்புற்றிருக்கும் போது காத்திருந்தேன்
சொந்தங்களின் அன்பிற்க்காக!

க ஷ்ட காலத்தில் காத்திருந்தேன்
நட்பின் அன்பிற்க்காக!

இன்று நெட்டில் காத்திருக்கிறேன்
சகோதரன், நண்பன் அன்பிற்க்காக!!!

காத்திருப்பது என்பது உலகநியதி
காத்திருந்தேன், காத்திருக்கிறேன், காத்திருப்பேன்!

Wednesday, January 24, 2007

இரயில் சிநேகங்கள்


(22-02-04)

காலையில் பரபரப்பாய் ஓடி
இரயிலில் பிடித்து
ஆவலாய் இடம்தேடி...
கிடைக்காமல்,
கிடைத்த இடத்தில்
வசதியாய் நிமிர்ந்து
நிற்க்கமுடியாமல்.....
வேர்த்து விறுவிறுத்து
அதிலேயும்
நண்பர்கள் பிடித்து...

இரவு வீடு திரும்பும் போது
அதே ஓட்டம் நடை
ஆனால்
நண்பர்களை கண்டதும்
எல்லாம் மறந்து
மனதை இலக்கும்
அந்த தருணங்கள் தான்
மனிதனை தொடர்ந்து வாழவைக்கின்றன ....!!!

முகவரி

(16-8-00)


நீ நீயாக இல்லாததினால்
நான் நீயாக மாறவேண்டிவந்தது!
இப்போது...
நீ நீயாக வேண்டும்
அது என்னிடம் இருக்கிறதா?
என்று தேடுகிறாய்.....

நான் நானாக இல்லாததினால்
நான் யார் என்று
எனக்கே தெரியவில்லை!
என்னை திருப்பித் தந்தால்
உன்னை திருப்பித் தருகிறேன்!

என்னுடைய முகவரியை
தொலைத்து இருக்கிறேன்!
இப்போது இருக்கும்
இந்த முகவரியை
"தொலைக்கவிரும்பவில்லை"..."நாடோடி போல"!!!

Tuesday, January 23, 2007

இயற்க்கையின் எதிரி?

(23-01-07---- 10.27PM)

மரங்களின் அசைவில்
சின்ன கவிதை!


காற்றின் திசையில்
மனதின் ஊஞ்சல்!


பறக்கும் தூசியில்
மனிதனின் எண்ணங்கள்!


மேகங்கள் வருகையில்
நடையில் துள்ளல்!


வெயிலின் உக்கிரத்தில்
சிந்தனை சிதறல்!


வருணபகவானின் விளையாடலில்
அழகிய சிரிப்பு!


இடியின் முழக்கத்தில்
கண்களில் கண்ணீர்!


கடலின் ஆர்பரிப்பில்
சிதறும் பயங்கள்!


இரவின் இருளில்
விடியலின் நம்பிக்கை!

இத்தனை இருந்தும்
இயற்க்கையின் முதல் எதிரி மனிதன்!!!

அறியாமை

அறியாமை என்பது மடமை!
இருந்தும் மடந்தையாக இருக்கிறோம்!

நாம் அறியாமையில் செய்யும் செயல்கள் கூட
நமக்கு எதிராக தான் முடியும்!

அறியாமல் செய்தேன் என்பது கூட
"தற்கொலை"க்கு சமம்!!!

குழந்தை

எண்ணங்களை
துள்ளி பிடிக்கின்றன
சிந்தனைகள்!

சிந்தனையின் ஒட்டம்
மனதுக்கு...
பிடிபடவில்லை!

பிடிபடவில்லை என்பதால்
சிந்தனை தன் ஓட்டத்தை
நிறுத்தவில்லை!

இரண்டின்
கண்ணாமூச்சி விளையாட்டில்
பிறந்தது..."கவிதை குழந்தை"!!!

Monday, January 22, 2007

மன்னிக்கவும்!
சின்ன வார்த்தை!
சின்ன வாக்கியங்கள்!
மிகப் பெரிய குழப்பத்தை

உண்டு பண்ணும்...
என்பதை
முதல் முறையாக உண்ர்ந்து கொண்டேன்!
எத்தனை பெரிய தவறு

தேவையில்லா
குழப்பங்கள்
தேவையில்லா
மனப்போராட்டம்!

மற்றவர்களையும் குழப்பும்
என்பதைக் கூட
அறியாமல்..அல்லது
தெரியாமல்!


எத்தனை மூடத்தனம்!
தவறு புரிந்தது...
மன்னிப்பு கேட்க்கக் கூட
பயம், உதறல்....

"உயிரோடு சாகிறேன்"
என்று சொல்வார்கள்;
எத்தனை உண்மை?
அனுபவித்துவிட்டேன்!!!

மன்னிக்கவும்!
தவறுகள், வார்த்தைகள்,
வாக்கியங்கள்
எதிலும் இருக்காது!!!


(இத்துடன் சமாதி கட்டிவிட்டேன் இந்த வருந்தலுக்கு....மறுபடி தொடருவோம் நம் நட்பை! without any confusion from my side habibi and akh! chechi)

Sunday, January 21, 2007

பயம்....

கடந்த காலம்
கானல் நீர்
என்று மறந்து இருந்தேன்.

நிகழ்காலம்
மகிழ்ச்சி
என்று நம்புகிறேன்.

எதிர்காலம்
கானல் நீர்
ஆகிவிடுமோ என்ற பயமாக இருக்கிறது.

மனிதனை
வேறோடு சாய்க்க
ஒரு உணர்வு உண்டு.

"பயம்"
என்னையும் சாய்த்துவிடுமோ
என்று பயமாக இருக்கிறது.

இத்தனை
கடந்து வந்த பின்னும்
கானல் நீரின் தாக்கம்...

என்னை
இப்படி படுத்தும்
என்று நினைக்கவில்லை.

என் மேல்
இயற்க்கைக்கு
என்ன கோபமோ?

எனக்கே தெரியவில்லை.
இந்த முறை...
வேரறுந்து மண்ணோடு போய்விடுவேன்!

கானல் நீர்
என்னை
பின் தொடர்ந்தால்!!!



( he started smoking again and it bothers me and it gives me real fear . i dont know what to do. but for me this lapse is a punishment for my sin (what i did to u) . i mentioned to u when u called me, that i dont believe in God but i believe in ""வினை விதைத்தவன் வினை அறுப்பான்". i dont have the energy or the spirit or age to overcome everything).

Saturday, January 20, 2007

நான்???


( 19-01-07----- 10.00 PM)


கேள்விகள் கேட்பது என்பது
எல்லோருக்கும் வரும்.

ஆனால்,
நமக்கு நாமே கேள்வி கேட்க்க பயப்படுவோம்.

மனிதன்!
அதிகமாக பயப்படுவது.....

தன்னை தானே கேள்வி கேட்க்க மட்டும்தான்!
ஏனென்றால்:

உண்மையை கண்டுபயம்.
தான் செய்வது தவறா?

தான் செய்வது ஞாயமா?
தான் செய்வது சரியா?

வெளியே முழங்குவான்
உலகம் தன் கையில் என்று...

உள்ளே,
வெறும் கோழையாக இருப்பான்!

தன்னை உள்ளே
நோண்டி, அதட்டி, பயந்து...

கேள்விகள் கேட்க்கும்
மனிதன் தான்

வாழ்க்கையில்,
பயம் இல்லாமல் வாழ்கிறான்!

காரணம்,
மற்றவர்கள் சொல்லும்முன்

அவனுடைய
நிறைகளும், குறைகளும் தெரியும்!

முழுமனிதன்
என்று யாருமே கிடையாது!

அரைமனிதனாக இருக்கக் கூட...
ஆழ்மனக் கேள்விகள் முக்கியம்!

கேள்விகள்...
என்னையும் கேட்டேன்!

விடையும்,
தெரிந்து கொண்டேன்!

நேசிக்கிறேன்...
ஒரு நல்ல உள்ளத்தை!

குழப்பங்கள்
நிறைந்ததுதான் வாழ்க்கை!

நிச்சயம்,
என வாழ்க்கையை குழப்பமாட்டேன்.

உத்தரவாதம்,
உன்னுடைய வாழ்க்கையையும் குழப்பமாட்டேன்!

நான் நேசிப்பது,
உன் அன்பை!

உன் சிநேகத்தை
உன் அரவணைப்பை

உன் தோழமை
உன் அறிவை

உன் விளையாட்டை
உன் நட்பை!

காதலா....
ஆம்!

எந்தவித,
அடைமொழியும் இல்லாமல்!

நண்பன், சகோதரன், சகோதரி உறவுகள்
தடையாக இருக்குமா....?

பொய்யாக....
எதையும் நான் விரும்புவது இல்லை.

நண்பன், சகோதரன்
இரண்டுமே பிடித்து இருக்கிறது!

அதையும் தாண்டி
பிடிக்கிறது!

தவறான
எண்ணங்கள் எதுவும் இல்லை.

சில நேரங்களில்
அன்பு அதிகரிக்கும் போது...

கண்மூடித்தனமான
பற்றுதல் வரும்!

அதற்க்கு,
பெயர் வைக்க பயமாக இருக்கும்!

அதுதான்...இதுவும்,
பெயர் வைக்க வேண்டாம்!

இருக்கும் பெயரே
ஒரு "அரண்" தான்!

குழப்பங்களை
களையஅரண்கள் தேவை தான்!

இது உலகம்மனிதர்களுக்கு கொடுத்த ......
வரமா?.....தண்டனையா?


தெரியவிலலை!
வாழ்க்கைஅதன் போக்கில் சீராக ஓடுகிறது!

உலகுக்காக வாழ்வது
மற்றவர்களுக்காக வாழ்வது!

என்பதில்
நமக்காக வாழ்கிறோம்...

என்பது,
எப்போதுமே அடிபட்டுவிடும்!

எந்த வருத்தமும் இல்லை
எப்போதும் போல!

ஒரே ஒரு சந்தோஷம்,
ஆழ்மனதை தொட்டுவிட்டு வந்துஇருக்கிறேன்!

காரணம்,
கண்மூடித்தனமான அன்பு!

நன்றி சொல்லவேண்டும்!
சொல்லமாட்டேன்!

சொல்லிவிட்டால்
கண்திறக்க வேண்டும்.

கண்திறக்க...
விரும்பவில்லை!

எண்ணங்களில்,
விரசம் இல்லை!

என் மனது
எனக்கு சொந்தம்!

என் கண்
எனக்கு சொந்தம்!

என் சிந்தனைகள்
எனக்கு சொந்தம்!

நீ மட்டும்,
விடுபட்டுவிட்டாய்!

இயற்கையின்,
விதியால்!

அதனால் தான் சொல்கிறேன்;
கண்மூடி இருக்கவே விரும்புகிறேன்!

உன்னிடம் கண்மூடித் தனமான அன்பு...
எப்போதுமே,இருக்கும்!

"Unconditional Love"...
"Pure 'NIRVANA' " !!!




("உண்மை" எனக்காக எழுதியது. என்னை பார்த்து நீ பயப்பட வேண்டாம் என்பதற்க்காக போட்டேன்.போட்டது தான் கலவரம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது தான் புரிந்த்து. மன்னிக்கவும்! சின்ன வேண்டுகோள்: உன் மனதில் என்னை பற்றி இருக்கும் உண்மையை சொல்லமுடியுமா? )

Thursday, January 18, 2007

சின்ன வேண்டுகோள்...

(18-01-07.......6.27 PM)


எதற்க்காக வருத்தப்படுகிறேன்?
என்ன எதிர் பார்கிறேன்?
எனக்கே தெரியவில்லை!

என் வாழ்க்கையில்
இதுவரை எதையும்
எதிர்ப்பார்த்தது இல்லை.

காரணம்,
நான் எதிர் பார்ப்பது
எதுவும்...

நடப்பது இல்லை!
கடவுள் கூட என்னிடம்
"பாராமுகம்" தான்!

அதனால்,
நானும் அதற்க்காக
வருந்தவில்லை!

இயற்க்கையாக
எனக்கு தந்த தைரியத்தில்
நிமிர்ந்து நடக்கிறேன்!

இன்று எதிர்பார்கிறேன்...
என்ன என்பது
தான் கேள்வியே?

ஆழ்மனதில்
எதையோ தேடுகிறேன்...
என்னையும்

ஒரு உயிர்
ஆழமாக நேசிக்கவேண்டும்.
எந்தவித தயக்கங்களும்

இல்லாமல்...
என்னை எனக்காக
நேசிக்கவேண்டும்!

சிறிது அதிகமான
அசட்டுத்தனமான
முரட்டுத்தனமான

ஆசைதான்!
எனக்குப் புரிகிறது...
கட்டுப்படுத்த முடியவில்லை!

பொறுமை என்பது
எனக்கு இப்போது
எட்டிக்காய் போல இருக்கிறது!

எத்தனையோ
கடந்து வந்தேன்!
இப்போது தடுமாறி நிற்க்கிறேன்...

இதையும்
கடந்து வருவேன்
என்று நம்புகிறேன்...

என் எதிர்பார்ப்பை
கண்டுபிடித்து விட்டேன்
கடந்து மட்டும் வரவேண்டும்

சின்ன பெரிய வேண்டுகோள் நண்பனே

அதுவரை...
என்னை சகித்துக்கொள்ளவும்!!!

Wednesday, January 17, 2007

எதற்க்காக...

நான் "உருகுறேன் மருகுறேன்"
ஆனால்
எதற்க்காக;
ஏன் என்றுதான்
தெரியவில்லை!

தெரிந்து என்ன செய்ய...
என்ற பயமும்,
கூடவே வருகிறது.
சில நேரங்களில்
எதையும் தெரியாமல்...

விட்டுவிடுவது,
நல்லது என்று நினைக்கிறேன்!
தேடுதலில்,
வெற்றி பெற்றது
எத்தனை சந்தோஷமோ...

அதே அளவு
இந்த
"உருகுதே..............
மருகுதே.........."யில்
உணருகிறேன்!

அதனால் தான்
சிந்திக்கிறேன்...
சில விஷயங்களை
தெரியாமல்...நினைக்காமல்,
இருப்பதே சந்தோஷம்!



(we cannot direcct the wind
but we can adjust the sails)

( 'uriguthae' song was simply superb balaji. it really stirred something in my heart, which i don't like it but what to do... still ..............)

குழப்பங்கள்...

மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்!
காரணம்...
நான் என் கட்டுப்பாட்டில் இல்லை!
இது தான் உண்மை!

புது உறவு,
மனதை ஆக்கிரமித்தது போல
அரிக்கவும் செய்கிறது...
தேவை இல்லாத சந்தேகங்களுடன்!

சரியாக சொல்கிறேன்,
"அன்பு";"
அபரிதமான அன்பு" அதிகரிக்கும் போது
கூடவே...

அதைப்பற்றிய பயமும் வரும்.
நாம் செய்வது சரியா?
இது நிலைக்குமா?
ஏகப்பட்ட குழப்பங்கள்!

இதில் என் தவறு
எனக்கே புரிகிறது!
தேவை இல்லாமல்...
உன்னையும் குழப்புகிறேன்.

அது தான் என் கவலையே...
உன்னிடம் எதையும்
மறைக்க முடியவில்லை!
எதையுமே....

என் கோபம்
என் அன்பு
என் காதல்
என் குழப்பம்
என் சந்தோஷம்
என் சந்தேகங்கள்...

எதையும் ,
எதையுமே மறைக்க முடியவில்லை!
ஆனால்
இதையும் கடந்து வருவேன்...

உன்னுடைய நல்ல தோழியாக
உன்னுடைய நல்ல சேச்சியாக
உன்னுடைய அன்பிற்க்கு
தகுதியானவளாக....!

என்னுடைய இந்த
அலைபரிக்கும்
"அனத்தலுக்காக"...
என்னை மன்னிக்கவும் நண்பனே!