(15-03-07---11.30pm)
மனதை அரித்த விஷயங்கள்
இன்று வெளியே விட்டதும்
மனதெல்லாம் அமைதி!
எத்தனை வேதனை....
இத்தனை நாட்க்களும்
பொய் சொல்ல மனம் வேண்டும்!
தேவை இல்லா பொய்கள்
இத்தனை வேதனை படுத்தும்
என்பதை இப்போது தான் உணர்கிறேன்!
மனதில் இன்று அரிப்பு இல்லை
விட்டு விட்ட மலைப்பு இல்லை!
மற்றவர்களுக்கு தவறாக தெரியலாம்
சத்தியம் மீறப்பட்டது என நினைக்கலாம்
தேவை இல்லா சத்தியத்தை
இத்தனை நாள் காப்பாற்றியதே முட்டாள்தனம்!
சத்தியம் வாங்கியவரின்
தேனையான சத்தியங்கள்
இன்றும் காப்பாற்றுகிறேன்!
உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன்!!!
இந்த சத்தியம்
தேவை இல்லாதது....
எனக்கு விடுதலை,
இந்த பொய் சத்தியத்தில் இருந்து!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment