Saturday, February 10, 2007

அன்னை

(10-02-07---11.00AM)

அழகிய சிறுவன்
ஆடியபடியே, துறு துறுவென்று..
வயது என்று எண்ணினேன்!

நடவடிக்கையில்
சின்ன வித்தியாசங்கள்...
உணர்ந்தேன்!

குதித்தான், சிரித்தான்
சிறிது இடைவெளியில்
கால்களும் கைகளும்...

முறுக்கியபடியே...
பின்நோக்கி சென்றன.
விளையாடுகிறானா...?

மண்டையில் உறைத்தது
இல்லை!
நரம்பியல் பிரச்சனை...!

அருகே தாய்..
அமைதியாக
அமர்ந்து இருக்கிறாள்.

எந்த விதமான மாற்றங்களும் ...
இல்லாமல்,

கண்களில் அன்புடன்!!!

அவனோ...
எல்லோருக்கும்

காட்ச்சிப் பொருள் ஆனான்!

அன்புடன் மடியில் அமர்த்தினாள்.
அவனுடைய ஆடல்கள் நிற்க்கவில்லை.

வியப்புடன் தாயை நோக்கினேன்!

இதுதான் அன்போ
நீ எதுவாக இருந்தாலும்
நீ என் உயிர்!

தாயின் அன்பிற்க்கு
இந்த உலகமே ...
தலைவணங்கவேண்டும்!!!



(ysday, i went to perambur and saw this boy on the station da... still i couldnt forget his actions and her mom's gestures balaji)


No comments: