Friday, February 2, 2007

மாயை

(2-02-07--- 10.40 AM)


எதுமே இந்த உலகில்
நிலையானது இல்லை!

எல்லாமே ஒரு மாயை
நாம் என்னும் எண்ணங்கள் கூட...!

நேரத்திற்க்கு நேரம்...
நிமிடத்திற்க்கு நிமிடம் மாறலாம்!

நாம் பார்க்கும் பொருட்க்கள்
பார்வைக்கு பார்வை வேறுபடும்!

நாம் சந்திக்கும் மனிதர்கள்
சூழ்நிலை பொறுத்து மாறுவார்கள்!

நம்முடைய செயல்களே
நேற்று போல் இன்று இருக்காது!

எல்லாமே ஒரு மாயை
எதையும் ஏற்றுக்கொள்வோம்!

மாயையின் குணமே
அதுதான்....!!!

மாயை - மாற்றம் - பணிவோம்.

No comments: