Sunday, February 4, 2007

இனிமையான தருணங்கள்

(5-02-07--7.27 AM)

அன்னையின் அன்புக் கேள்விகள்
சில அபத்தமாக தோற்றினாலும்
எத்தனை அன்பு இருந்தால்
சின்ன மாற்றத்தைக் கூட
அவர்கள் உணருகிறார்கள்.

ஒன்றுமே சொல்லவேண்டாம்
ஆனால்,
தேவைகள் என்ன என்பதை
குறிப்பால் உணர்ந்து விடுகிறார்கள்
எத்தனையோ முறை வியந்து இருக்கிறேன்...

இத்தனை அன்பு
எத்தனை அன்பு
ஆனால் அதன் முழு அர்த்தத்தை
உணர்ந்தேன்...
நான் தாயான போது!

இருந்தாலும்...
இன்றும்
அதே அன்பு அன்னையிடமிருந்து
நான் வளர்ந்துவிட்டேன்
என்றாலும்... நான் அவர்கள்
கண்களுக்கு அதே குட்டிப்பெண்தான்!

அந்த எண்ணத்தை
எப்போதும் மாற்ற ...
எனக்கு விருப்பமில்லை.
என் பிள்ளைகள் கூட
கேலி செய்கின்றன...எங்கள் இருவரையும்

ஆனாலும்
விரும்புகிறேன்....
அதே கேள்விகள்
அதே குறிப்பறிந்து செய்தல்
இனிமை அதில் தான் எனக்கு......

என்னுடைய பலமும்
என்னுடைய எண்ணங்களும்
என்னுடைய பயங்கள்
எல்லவற்றையும்
சிறை வைக்க விரும்புகிறேன்....அந்த

"இனிமையான தருணங்களில்"!!!


No comments: