Monday, February 12, 2007

வினோதங்கள்

(13-02-07--- 6.12AM)

நீ சந்தோஷமாக இருந்தால்
நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.

நீ வேதனையில் இருந்தால்
நானும் வேதனையில் இருக்கிறேன்.

ஏன் அப்படி என்று
உனக்கு கோபம் கூட வரலாம்.

பைத்தியக்காரத்தனம்
என்று நீ நினைக்கலாம்...

நீ என்ன...
நானேநினைக்கிறேன்.

ஆனால்
ஒன்றை மறந்துவிட்டாய்...

உண்மையான அன்பு
செலுத்தினால் மட்டுமே

மற்றவர்களுக்காக
வேதனை, சந்தோஷம்...

நாம் அனுபவிக்கமுடியும்
உணர்ந்துகொண்டே இருக்கிறேன்

நான் புரிந்து கொண்டேன்
நீ புரிந்து கொள்வாயா நண்பனே!!!

(this is for u sweety... i really really care about u da)

No comments: