Saturday, January 20, 2007

நான்???


( 19-01-07----- 10.00 PM)


கேள்விகள் கேட்பது என்பது
எல்லோருக்கும் வரும்.

ஆனால்,
நமக்கு நாமே கேள்வி கேட்க்க பயப்படுவோம்.

மனிதன்!
அதிகமாக பயப்படுவது.....

தன்னை தானே கேள்வி கேட்க்க மட்டும்தான்!
ஏனென்றால்:

உண்மையை கண்டுபயம்.
தான் செய்வது தவறா?

தான் செய்வது ஞாயமா?
தான் செய்வது சரியா?

வெளியே முழங்குவான்
உலகம் தன் கையில் என்று...

உள்ளே,
வெறும் கோழையாக இருப்பான்!

தன்னை உள்ளே
நோண்டி, அதட்டி, பயந்து...

கேள்விகள் கேட்க்கும்
மனிதன் தான்

வாழ்க்கையில்,
பயம் இல்லாமல் வாழ்கிறான்!

காரணம்,
மற்றவர்கள் சொல்லும்முன்

அவனுடைய
நிறைகளும், குறைகளும் தெரியும்!

முழுமனிதன்
என்று யாருமே கிடையாது!

அரைமனிதனாக இருக்கக் கூட...
ஆழ்மனக் கேள்விகள் முக்கியம்!

கேள்விகள்...
என்னையும் கேட்டேன்!

விடையும்,
தெரிந்து கொண்டேன்!

நேசிக்கிறேன்...
ஒரு நல்ல உள்ளத்தை!

குழப்பங்கள்
நிறைந்ததுதான் வாழ்க்கை!

நிச்சயம்,
என வாழ்க்கையை குழப்பமாட்டேன்.

உத்தரவாதம்,
உன்னுடைய வாழ்க்கையையும் குழப்பமாட்டேன்!

நான் நேசிப்பது,
உன் அன்பை!

உன் சிநேகத்தை
உன் அரவணைப்பை

உன் தோழமை
உன் அறிவை

உன் விளையாட்டை
உன் நட்பை!

காதலா....
ஆம்!

எந்தவித,
அடைமொழியும் இல்லாமல்!

நண்பன், சகோதரன், சகோதரி உறவுகள்
தடையாக இருக்குமா....?

பொய்யாக....
எதையும் நான் விரும்புவது இல்லை.

நண்பன், சகோதரன்
இரண்டுமே பிடித்து இருக்கிறது!

அதையும் தாண்டி
பிடிக்கிறது!

தவறான
எண்ணங்கள் எதுவும் இல்லை.

சில நேரங்களில்
அன்பு அதிகரிக்கும் போது...

கண்மூடித்தனமான
பற்றுதல் வரும்!

அதற்க்கு,
பெயர் வைக்க பயமாக இருக்கும்!

அதுதான்...இதுவும்,
பெயர் வைக்க வேண்டாம்!

இருக்கும் பெயரே
ஒரு "அரண்" தான்!

குழப்பங்களை
களையஅரண்கள் தேவை தான்!

இது உலகம்மனிதர்களுக்கு கொடுத்த ......
வரமா?.....தண்டனையா?


தெரியவிலலை!
வாழ்க்கைஅதன் போக்கில் சீராக ஓடுகிறது!

உலகுக்காக வாழ்வது
மற்றவர்களுக்காக வாழ்வது!

என்பதில்
நமக்காக வாழ்கிறோம்...

என்பது,
எப்போதுமே அடிபட்டுவிடும்!

எந்த வருத்தமும் இல்லை
எப்போதும் போல!

ஒரே ஒரு சந்தோஷம்,
ஆழ்மனதை தொட்டுவிட்டு வந்துஇருக்கிறேன்!

காரணம்,
கண்மூடித்தனமான அன்பு!

நன்றி சொல்லவேண்டும்!
சொல்லமாட்டேன்!

சொல்லிவிட்டால்
கண்திறக்க வேண்டும்.

கண்திறக்க...
விரும்பவில்லை!

எண்ணங்களில்,
விரசம் இல்லை!

என் மனது
எனக்கு சொந்தம்!

என் கண்
எனக்கு சொந்தம்!

என் சிந்தனைகள்
எனக்கு சொந்தம்!

நீ மட்டும்,
விடுபட்டுவிட்டாய்!

இயற்கையின்,
விதியால்!

அதனால் தான் சொல்கிறேன்;
கண்மூடி இருக்கவே விரும்புகிறேன்!

உன்னிடம் கண்மூடித் தனமான அன்பு...
எப்போதுமே,இருக்கும்!

"Unconditional Love"...
"Pure 'NIRVANA' " !!!




("உண்மை" எனக்காக எழுதியது. என்னை பார்த்து நீ பயப்பட வேண்டாம் என்பதற்க்காக போட்டேன்.போட்டது தான் கலவரம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது தான் புரிந்த்து. மன்னிக்கவும்! சின்ன வேண்டுகோள்: உன் மனதில் என்னை பற்றி இருக்கும் உண்மையை சொல்லமுடியுமா? )

No comments: