Monday, October 1, 2007

நான் யாரோ...???

ஏதோ ஒன்று "என்னை"
கட்டிப் போடுகிறது "உன்னிடம்"!

எது என்று தேடுகிறேன்,
தெரியவில்லை.

அன்பு என்பதற்க்கு
ஏதேனும் கதவுகள் இருக்கிறதா?

இருந்தால்,
அது ஜெயில் கதவா?

பூட்டினால்,
திறப்பது கடினமா?

தேவையான போது,
தேவையான அளவு திறந்துவிடப்பட வேண்டுமா?

ஆனால்,
எப்போதும் திறந்து இருக்கிறதே....?!

அப்படியானால்,
இது சமுத்திரமா???

சமுத்திரத்திற்க்கு,
ஏது கதவுகள்!!!

அன்பும், சமுத்திரமும்,
"ஒன்று" !

பரந்து விரிந்தது!
நம்மை உள்வாங்கிவிடும்.

நீந்தத் தெரிந்தவர்கள்,
"புத்திசாலிகள்"

நீந்தத் தெரியாதவர்கள்,
"படைப்பாளிகள்"

மூழ்குபவர்கள்,
"சொர்க்க வாசிகள்"

நான் யாரோ?
தெரியவில்லை.....



(உனக்கு தெரிந்தால் சொல் நண்பனே!)

பழக்கம்


நடந்து வந்த முட்பாதைகள்
மறைந்து போனாலும்,
பழக்க தோஷம்;
கால்கள் தரையில் பதிய மறுக்கின்றன!

முடியாது ... முடியவில்லை...?

எத்தனை தான் மனதை
தேற்றினாலும்,

திரும்ப திரும்ப ஒலிக்கும்
ஒரே மந்திரம்!

"உன்னால் முடியாது"
எனற பிரியமானவரின்

"அன்புக் குரல்"
கால்களை கட்டிப்போடுகின்றன!

சங்கிலியால் பிணைத்தால்,
கழட்டி விடலாம்!

போட்டது என்னவோ,
சொல்லால் அல்லவா....

அது விழுந்தது,
நெஞ்சில்!

இரத்தத்தில் கலந்துவிட்டது
பிரித்து எடுக்க முடியாமல்!!!

சொல்லை மீற
அதிக நேரம் தேவையில்லை.

ஆனால், பின்விளைவுகள்
குடும்பத்தை பாதிக்கும்.

பாதிப்பு இல்லாமல்
வர முயற்ச்சிக்கிறேன்!

முடியும் என்று,
"பக்ஷி" சொல்கிறது.