Wednesday, January 17, 2007

எதற்க்காக...

நான் "உருகுறேன் மருகுறேன்"
ஆனால்
எதற்க்காக;
ஏன் என்றுதான்
தெரியவில்லை!

தெரிந்து என்ன செய்ய...
என்ற பயமும்,
கூடவே வருகிறது.
சில நேரங்களில்
எதையும் தெரியாமல்...

விட்டுவிடுவது,
நல்லது என்று நினைக்கிறேன்!
தேடுதலில்,
வெற்றி பெற்றது
எத்தனை சந்தோஷமோ...

அதே அளவு
இந்த
"உருகுதே..............
மருகுதே.........."யில்
உணருகிறேன்!

அதனால் தான்
சிந்திக்கிறேன்...
சில விஷயங்களை
தெரியாமல்...நினைக்காமல்,
இருப்பதே சந்தோஷம்!



(we cannot direcct the wind
but we can adjust the sails)

( 'uriguthae' song was simply superb balaji. it really stirred something in my heart, which i don't like it but what to do... still ..............)

No comments: