(14-02-7--- 11.30 AM)
எத்தனை தான் இடம் பெயர்ந்தாலும்
கல்லுக்கு பெயர் கல் தான்!
ஆயிரம் தேனி கொட்டினாலும்
ஒரு தேனி கொட்டினாலும்
வலி ஒன்றுதான்!
இருக்கும் இடத்தை சுற்றி...
கருங்கல் சுவர் இருக்கிறது
உடைத்து வெளியே வரமுயன்று
உடைந்து போகும் ஒருசிலரில்
நானும் ஒருத்தியா ... ?
ஏனென்றால் நானும்
கல்தானே...!
கல்லுக்கு ஏது உணர்ச்சி?
அதனால் தானோ...
இத்தனை அடிபடுகிறேன்.
எதுவரை படுவேன்...?
எத்தனை பேரிடம்...
மூச்சுமுட்டுகிறது!
வெறும் கல் தானே
எனக்கு ஏது மூச்சு...?
கல் சிற்ப்பியின் கையில்
அழகான சிற்ப்பம்!
கல் சித்தன் கையில்
அழகான் குடில்!
கல் மனிதன் கையில்
வெறும் கல் தான்!
உயிறும் இல்லை!
உருவமும் இல்லை!
"வெறும் கல் தான்"
"நானும்"!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment