Tuesday, January 30, 2007

நம்பிக்கை

(29-01-07--- 9.00 AM)


இரண்டு மாத கால வாழ்க்கை...
புரட்டிப்பார்த்தேன்!

எத்தனை சந்தோஷம்
எத்தனை அன்பு பரிமாற்றங்கள்!

கனவில் நடப்பது போல...
வானத்தில் பறப்பது போல!

அத்தனை சந்தோஷம்
என் கண்ணே பட்டுவிட்டது!

திருஷ்டி சுத்தி போட்டாலும்
போகாது போல...!

கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது என்பார்கள்!

சரியாகுமா..?
மனதின் மூலையில்...

சின்ன நம்பிக்கை ஆகும் என்று!
"நம்பிக்கை தானே...வாழ்க்கை"!!!

அமைதியின் அர்த்தம் என்ன...???

(29-01-07---- 8.00AM)

அமைதி!
இதற்க்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
எத்தனையோ அர்த்தங்கள் தேடினேன்.
என்னையே சமாதானப்படுத்துகிறேன்
என்னையே ஏமாற்றுகிறேன்!


எதற்க்காக என்பது தான் புரியவில்லை.
என்னை பிடிக்கவில்லையா?
சிறிது இடைவெளி தேவையா?
ஒன்றுமே வேண்டாமா?
மனது வலிக்கிறது!


இத்தனை அன்பை
ஒரு அமைதி கெடுக்குமா?
அமைதிக்கு நிறைய ...
சக்திகள் உண்டு!
ஒரு மனிதனை உயிரோடு கொள்ளவும்....


அடுக் அடுக்கான கேள்விகள்
ஆயிரம் எண்ணங்கள்
வருத்தமாக இருக்கிறது.
இந்த வருத்தம் கூட
பைத்தியகாரத்தனமாக அமைதி எடுக்குமோ?


அன்போ, பாசமோ
கடையில் வாங்கும் பொருள் இல்லை.
பிடிக்கவில்லை என்று
தூக்கி எறிய....
அல்லது ஒதுக்கிவைக்க?


பாசத்திற்க்கும், அன்புக்கும்
நான் எப்போதும் "அடிமை"
என்பது என்னை தெரிந்தவர்களுக்கு...
நன்கு தெரியும்.
என்றுமே நான் பிரச்சனையில்லை... யாருக்கும்!


இந்த அமைதியின்
அர்த்தம் தெரிந்தால்...
அமைதி எனக்கு கிடைக்கும்.
அமைதி பதில் தருமா?
எல்லாமே கேள்விக்குறிதான்???



Monday, January 29, 2007

காற்றுக்கு வேலிகள் இல்லை
உங்கள் அன்புக்கும் வேலிகள் இல்லை!

உங்கள் அன்பு எங்களை
முன்னேற விடாமல் செய்கிறது!

உங்களின் அடக்க பாசத்தினால்
வீட்டின் கிணற்றுத் தவளையாக நாங்கள்!

அடைத்த வீட்டில்
எப்போதும் மூச்சு முட்டும்... காற்று தேவை!

விஷமோ, அமிர்தமோ
இரண்டுமே அதிகப்படி நாசம் தான்... புரிந்துகொள்ளுங்கள்!

(what do u say?)

Sunday, January 28, 2007

காதல் நந்தவனம்

காற்று போல இனிமையாய்
ஆனால், மெதுவாக வீசுகிறாய்!

மழை போல பொழிகிறாய்
ஆனால், நேரம் பற்றி தெரியவில்லை!

பனி போல குளிர்கிறாய்
ஆனால்,எதனிடம் என்பதை அறியவும்!

தண்ணீர் போல ஓடுகிறாய்
குறையை சொல்ல வந்தால்!

கடல் போல மோதுகிறாய்
உன்னையும் மாற்ற விரும்புகிறேன் "மென்மையாக"!

----------------------------------------------

அன்பின் வெளிப்பாட்டினால் சொல்கிறேன்
புகை வண்டியை நிறுத்தவும்!

உன்மீது உள்ள காதலால் சொல்கிறேன்
எங்களுக்காக நேரம் செலவழிக்கவும்!

உரிமை இருக்கிறது, அதனால் சொல்கிறேன்
நீங்கள் யார் என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

நம்முடைய வாழ்க்கை என்பதால் சொல்கிறேன்
நேரம் பொன்னானது!

பயணம் முடியவில்லை... தொடர்கிறது
உங்கள் அன்பினால் தான்!


(what do u think bro? do u want me to send these poems or write some other?pl, honest opinion da)

Saturday, January 27, 2007

சில அர்த்தங்கள்!

(27-01-07--- 10.31 PM)


கோபமாக இருக்கிறோம்
என்பதற்க்கு
அர்த்தம்
கோபப்படும் "நபர்"

நம்மை விரும்பவில்லை
நம்மை மதிக்கவில்லை
என்று அர்த்தம்....
"இல்லை"!

அந்த நபரை
நாம் வெறுக்கிறோம்
என்றும் அர்த்தம்
"இல்லை"!

சிலநேரங்களில்
எதிர்பார்ப்புகள்....
மனதில் சிறு கிறுக்கள்களை
உண்டுபண்ணும்!

அதை வெளிப்படுத்தவேண்டும்
நம்மை பிடித்தவர்களிடம்
அல்லது
நாம் நம்புவர்களிடம்!


கோபம் என்பது
நெருப்பு போன்றது.
அதை
அணைக்கவேண்டும்!

அன்பு என்பது
சின்ன கோபத்திலும்
சிறிய எதிர்பார்பிலும்
"இறந்துவிடாது"!

சின்ன சின்ன கோபங்களும்
சின்ன சின்ன ஊடல்களும்
மனிதனை....
தன்னை உணரவைக்கின்றன!

உனக்கும் நன்றி நண்பனே!
உனக்கு தெரிந்த முறையில்
என்னை,
"சமாதானபடுத்தியதற்க்கு"...!!!

Friday, January 26, 2007

தொடரும் பயணம்........

(26-01-07--- 10.35 PM)

கல்யாணநாள்
எப்போதும் போல்
தனித் தனியே.....தொடர்கிறது!

இது
விதியா....
நேரமா.....தெரியவில்லை!

இதையும்...
ஏற்றுக்கொண்டேன்
ஏனென்றால்;

முதல் முறை தெரியவில்லை
பின்பு கவலையுற்றேன்
இன்று மறந்துபோனேன்...!

வாழ்க்கையில்...புன்னகையுடன்
எதையும் ஏற்றுக்கொள்ள
முயற்ச்சிக்கிறேன் ... சின்ன வருத்தத்துடன்!

முடிந்ததிற்க்கு ... சந்தோஷமாக!
முடியாத்திற்க்கு ... கவிதை கிறுக்கலாக!
தொடர்கிறது வாழ்க்கை.............



காத்திருக்கிறேன்....

(25-01-07----- 9.00 PM)

கருவூலத்தில் காத்திருந்தேன்
தாயின் அன்பிற்க்காக!

பள்ளியில் காத்திருந்தேன்
குருவின் அன்பிற்க்காக!

மணவாழ்க்கையில் காத்திருந்தேன்
கணவனின் அன்பிற்க்காக!

கருவுற்றிருக்கும் போது காத்திருந்தேன்
குழந்தையின் அன்பிற்க்காக!

இன்புற்றிருக்கும் போது காத்திருந்தேன்
சொந்தங்களின் அன்பிற்க்காக!

க ஷ்ட காலத்தில் காத்திருந்தேன்
நட்பின் அன்பிற்க்காக!

இன்று நெட்டில் காத்திருக்கிறேன்
சகோதரன், நண்பன் அன்பிற்க்காக!!!

காத்திருப்பது என்பது உலகநியதி
காத்திருந்தேன், காத்திருக்கிறேன், காத்திருப்பேன்!

Wednesday, January 24, 2007

இரயில் சிநேகங்கள்


(22-02-04)

காலையில் பரபரப்பாய் ஓடி
இரயிலில் பிடித்து
ஆவலாய் இடம்தேடி...
கிடைக்காமல்,
கிடைத்த இடத்தில்
வசதியாய் நிமிர்ந்து
நிற்க்கமுடியாமல்.....
வேர்த்து விறுவிறுத்து
அதிலேயும்
நண்பர்கள் பிடித்து...

இரவு வீடு திரும்பும் போது
அதே ஓட்டம் நடை
ஆனால்
நண்பர்களை கண்டதும்
எல்லாம் மறந்து
மனதை இலக்கும்
அந்த தருணங்கள் தான்
மனிதனை தொடர்ந்து வாழவைக்கின்றன ....!!!

முகவரி

(16-8-00)


நீ நீயாக இல்லாததினால்
நான் நீயாக மாறவேண்டிவந்தது!
இப்போது...
நீ நீயாக வேண்டும்
அது என்னிடம் இருக்கிறதா?
என்று தேடுகிறாய்.....

நான் நானாக இல்லாததினால்
நான் யார் என்று
எனக்கே தெரியவில்லை!
என்னை திருப்பித் தந்தால்
உன்னை திருப்பித் தருகிறேன்!

என்னுடைய முகவரியை
தொலைத்து இருக்கிறேன்!
இப்போது இருக்கும்
இந்த முகவரியை
"தொலைக்கவிரும்பவில்லை"..."நாடோடி போல"!!!

Tuesday, January 23, 2007

இயற்க்கையின் எதிரி?

(23-01-07---- 10.27PM)

மரங்களின் அசைவில்
சின்ன கவிதை!


காற்றின் திசையில்
மனதின் ஊஞ்சல்!


பறக்கும் தூசியில்
மனிதனின் எண்ணங்கள்!


மேகங்கள் வருகையில்
நடையில் துள்ளல்!


வெயிலின் உக்கிரத்தில்
சிந்தனை சிதறல்!


வருணபகவானின் விளையாடலில்
அழகிய சிரிப்பு!


இடியின் முழக்கத்தில்
கண்களில் கண்ணீர்!


கடலின் ஆர்பரிப்பில்
சிதறும் பயங்கள்!


இரவின் இருளில்
விடியலின் நம்பிக்கை!

இத்தனை இருந்தும்
இயற்க்கையின் முதல் எதிரி மனிதன்!!!

அறியாமை

அறியாமை என்பது மடமை!
இருந்தும் மடந்தையாக இருக்கிறோம்!

நாம் அறியாமையில் செய்யும் செயல்கள் கூட
நமக்கு எதிராக தான் முடியும்!

அறியாமல் செய்தேன் என்பது கூட
"தற்கொலை"க்கு சமம்!!!

குழந்தை

எண்ணங்களை
துள்ளி பிடிக்கின்றன
சிந்தனைகள்!

சிந்தனையின் ஒட்டம்
மனதுக்கு...
பிடிபடவில்லை!

பிடிபடவில்லை என்பதால்
சிந்தனை தன் ஓட்டத்தை
நிறுத்தவில்லை!

இரண்டின்
கண்ணாமூச்சி விளையாட்டில்
பிறந்தது..."கவிதை குழந்தை"!!!

Monday, January 22, 2007

மன்னிக்கவும்!
சின்ன வார்த்தை!
சின்ன வாக்கியங்கள்!
மிகப் பெரிய குழப்பத்தை

உண்டு பண்ணும்...
என்பதை
முதல் முறையாக உண்ர்ந்து கொண்டேன்!
எத்தனை பெரிய தவறு

தேவையில்லா
குழப்பங்கள்
தேவையில்லா
மனப்போராட்டம்!

மற்றவர்களையும் குழப்பும்
என்பதைக் கூட
அறியாமல்..அல்லது
தெரியாமல்!


எத்தனை மூடத்தனம்!
தவறு புரிந்தது...
மன்னிப்பு கேட்க்கக் கூட
பயம், உதறல்....

"உயிரோடு சாகிறேன்"
என்று சொல்வார்கள்;
எத்தனை உண்மை?
அனுபவித்துவிட்டேன்!!!

மன்னிக்கவும்!
தவறுகள், வார்த்தைகள்,
வாக்கியங்கள்
எதிலும் இருக்காது!!!


(இத்துடன் சமாதி கட்டிவிட்டேன் இந்த வருந்தலுக்கு....மறுபடி தொடருவோம் நம் நட்பை! without any confusion from my side habibi and akh! chechi)

Sunday, January 21, 2007

பயம்....

கடந்த காலம்
கானல் நீர்
என்று மறந்து இருந்தேன்.

நிகழ்காலம்
மகிழ்ச்சி
என்று நம்புகிறேன்.

எதிர்காலம்
கானல் நீர்
ஆகிவிடுமோ என்ற பயமாக இருக்கிறது.

மனிதனை
வேறோடு சாய்க்க
ஒரு உணர்வு உண்டு.

"பயம்"
என்னையும் சாய்த்துவிடுமோ
என்று பயமாக இருக்கிறது.

இத்தனை
கடந்து வந்த பின்னும்
கானல் நீரின் தாக்கம்...

என்னை
இப்படி படுத்தும்
என்று நினைக்கவில்லை.

என் மேல்
இயற்க்கைக்கு
என்ன கோபமோ?

எனக்கே தெரியவில்லை.
இந்த முறை...
வேரறுந்து மண்ணோடு போய்விடுவேன்!

கானல் நீர்
என்னை
பின் தொடர்ந்தால்!!!



( he started smoking again and it bothers me and it gives me real fear . i dont know what to do. but for me this lapse is a punishment for my sin (what i did to u) . i mentioned to u when u called me, that i dont believe in God but i believe in ""வினை விதைத்தவன் வினை அறுப்பான்". i dont have the energy or the spirit or age to overcome everything).

Saturday, January 20, 2007

நான்???


( 19-01-07----- 10.00 PM)


கேள்விகள் கேட்பது என்பது
எல்லோருக்கும் வரும்.

ஆனால்,
நமக்கு நாமே கேள்வி கேட்க்க பயப்படுவோம்.

மனிதன்!
அதிகமாக பயப்படுவது.....

தன்னை தானே கேள்வி கேட்க்க மட்டும்தான்!
ஏனென்றால்:

உண்மையை கண்டுபயம்.
தான் செய்வது தவறா?

தான் செய்வது ஞாயமா?
தான் செய்வது சரியா?

வெளியே முழங்குவான்
உலகம் தன் கையில் என்று...

உள்ளே,
வெறும் கோழையாக இருப்பான்!

தன்னை உள்ளே
நோண்டி, அதட்டி, பயந்து...

கேள்விகள் கேட்க்கும்
மனிதன் தான்

வாழ்க்கையில்,
பயம் இல்லாமல் வாழ்கிறான்!

காரணம்,
மற்றவர்கள் சொல்லும்முன்

அவனுடைய
நிறைகளும், குறைகளும் தெரியும்!

முழுமனிதன்
என்று யாருமே கிடையாது!

அரைமனிதனாக இருக்கக் கூட...
ஆழ்மனக் கேள்விகள் முக்கியம்!

கேள்விகள்...
என்னையும் கேட்டேன்!

விடையும்,
தெரிந்து கொண்டேன்!

நேசிக்கிறேன்...
ஒரு நல்ல உள்ளத்தை!

குழப்பங்கள்
நிறைந்ததுதான் வாழ்க்கை!

நிச்சயம்,
என வாழ்க்கையை குழப்பமாட்டேன்.

உத்தரவாதம்,
உன்னுடைய வாழ்க்கையையும் குழப்பமாட்டேன்!

நான் நேசிப்பது,
உன் அன்பை!

உன் சிநேகத்தை
உன் அரவணைப்பை

உன் தோழமை
உன் அறிவை

உன் விளையாட்டை
உன் நட்பை!

காதலா....
ஆம்!

எந்தவித,
அடைமொழியும் இல்லாமல்!

நண்பன், சகோதரன், சகோதரி உறவுகள்
தடையாக இருக்குமா....?

பொய்யாக....
எதையும் நான் விரும்புவது இல்லை.

நண்பன், சகோதரன்
இரண்டுமே பிடித்து இருக்கிறது!

அதையும் தாண்டி
பிடிக்கிறது!

தவறான
எண்ணங்கள் எதுவும் இல்லை.

சில நேரங்களில்
அன்பு அதிகரிக்கும் போது...

கண்மூடித்தனமான
பற்றுதல் வரும்!

அதற்க்கு,
பெயர் வைக்க பயமாக இருக்கும்!

அதுதான்...இதுவும்,
பெயர் வைக்க வேண்டாம்!

இருக்கும் பெயரே
ஒரு "அரண்" தான்!

குழப்பங்களை
களையஅரண்கள் தேவை தான்!

இது உலகம்மனிதர்களுக்கு கொடுத்த ......
வரமா?.....தண்டனையா?


தெரியவிலலை!
வாழ்க்கைஅதன் போக்கில் சீராக ஓடுகிறது!

உலகுக்காக வாழ்வது
மற்றவர்களுக்காக வாழ்வது!

என்பதில்
நமக்காக வாழ்கிறோம்...

என்பது,
எப்போதுமே அடிபட்டுவிடும்!

எந்த வருத்தமும் இல்லை
எப்போதும் போல!

ஒரே ஒரு சந்தோஷம்,
ஆழ்மனதை தொட்டுவிட்டு வந்துஇருக்கிறேன்!

காரணம்,
கண்மூடித்தனமான அன்பு!

நன்றி சொல்லவேண்டும்!
சொல்லமாட்டேன்!

சொல்லிவிட்டால்
கண்திறக்க வேண்டும்.

கண்திறக்க...
விரும்பவில்லை!

எண்ணங்களில்,
விரசம் இல்லை!

என் மனது
எனக்கு சொந்தம்!

என் கண்
எனக்கு சொந்தம்!

என் சிந்தனைகள்
எனக்கு சொந்தம்!

நீ மட்டும்,
விடுபட்டுவிட்டாய்!

இயற்கையின்,
விதியால்!

அதனால் தான் சொல்கிறேன்;
கண்மூடி இருக்கவே விரும்புகிறேன்!

உன்னிடம் கண்மூடித் தனமான அன்பு...
எப்போதுமே,இருக்கும்!

"Unconditional Love"...
"Pure 'NIRVANA' " !!!




("உண்மை" எனக்காக எழுதியது. என்னை பார்த்து நீ பயப்பட வேண்டாம் என்பதற்க்காக போட்டேன்.போட்டது தான் கலவரம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது தான் புரிந்த்து. மன்னிக்கவும்! சின்ன வேண்டுகோள்: உன் மனதில் என்னை பற்றி இருக்கும் உண்மையை சொல்லமுடியுமா? )

Thursday, January 18, 2007

சின்ன வேண்டுகோள்...

(18-01-07.......6.27 PM)


எதற்க்காக வருத்தப்படுகிறேன்?
என்ன எதிர் பார்கிறேன்?
எனக்கே தெரியவில்லை!

என் வாழ்க்கையில்
இதுவரை எதையும்
எதிர்ப்பார்த்தது இல்லை.

காரணம்,
நான் எதிர் பார்ப்பது
எதுவும்...

நடப்பது இல்லை!
கடவுள் கூட என்னிடம்
"பாராமுகம்" தான்!

அதனால்,
நானும் அதற்க்காக
வருந்தவில்லை!

இயற்க்கையாக
எனக்கு தந்த தைரியத்தில்
நிமிர்ந்து நடக்கிறேன்!

இன்று எதிர்பார்கிறேன்...
என்ன என்பது
தான் கேள்வியே?

ஆழ்மனதில்
எதையோ தேடுகிறேன்...
என்னையும்

ஒரு உயிர்
ஆழமாக நேசிக்கவேண்டும்.
எந்தவித தயக்கங்களும்

இல்லாமல்...
என்னை எனக்காக
நேசிக்கவேண்டும்!

சிறிது அதிகமான
அசட்டுத்தனமான
முரட்டுத்தனமான

ஆசைதான்!
எனக்குப் புரிகிறது...
கட்டுப்படுத்த முடியவில்லை!

பொறுமை என்பது
எனக்கு இப்போது
எட்டிக்காய் போல இருக்கிறது!

எத்தனையோ
கடந்து வந்தேன்!
இப்போது தடுமாறி நிற்க்கிறேன்...

இதையும்
கடந்து வருவேன்
என்று நம்புகிறேன்...

என் எதிர்பார்ப்பை
கண்டுபிடித்து விட்டேன்
கடந்து மட்டும் வரவேண்டும்

சின்ன பெரிய வேண்டுகோள் நண்பனே

அதுவரை...
என்னை சகித்துக்கொள்ளவும்!!!

Wednesday, January 17, 2007

எதற்க்காக...

நான் "உருகுறேன் மருகுறேன்"
ஆனால்
எதற்க்காக;
ஏன் என்றுதான்
தெரியவில்லை!

தெரிந்து என்ன செய்ய...
என்ற பயமும்,
கூடவே வருகிறது.
சில நேரங்களில்
எதையும் தெரியாமல்...

விட்டுவிடுவது,
நல்லது என்று நினைக்கிறேன்!
தேடுதலில்,
வெற்றி பெற்றது
எத்தனை சந்தோஷமோ...

அதே அளவு
இந்த
"உருகுதே..............
மருகுதே.........."யில்
உணருகிறேன்!

அதனால் தான்
சிந்திக்கிறேன்...
சில விஷயங்களை
தெரியாமல்...நினைக்காமல்,
இருப்பதே சந்தோஷம்!



(we cannot direcct the wind
but we can adjust the sails)

( 'uriguthae' song was simply superb balaji. it really stirred something in my heart, which i don't like it but what to do... still ..............)

குழப்பங்கள்...

மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்!
காரணம்...
நான் என் கட்டுப்பாட்டில் இல்லை!
இது தான் உண்மை!

புது உறவு,
மனதை ஆக்கிரமித்தது போல
அரிக்கவும் செய்கிறது...
தேவை இல்லாத சந்தேகங்களுடன்!

சரியாக சொல்கிறேன்,
"அன்பு";"
அபரிதமான அன்பு" அதிகரிக்கும் போது
கூடவே...

அதைப்பற்றிய பயமும் வரும்.
நாம் செய்வது சரியா?
இது நிலைக்குமா?
ஏகப்பட்ட குழப்பங்கள்!

இதில் என் தவறு
எனக்கே புரிகிறது!
தேவை இல்லாமல்...
உன்னையும் குழப்புகிறேன்.

அது தான் என் கவலையே...
உன்னிடம் எதையும்
மறைக்க முடியவில்லை!
எதையுமே....

என் கோபம்
என் அன்பு
என் காதல்
என் குழப்பம்
என் சந்தோஷம்
என் சந்தேகங்கள்...

எதையும் ,
எதையுமே மறைக்க முடியவில்லை!
ஆனால்
இதையும் கடந்து வருவேன்...

உன்னுடைய நல்ல தோழியாக
உன்னுடைய நல்ல சேச்சியாக
உன்னுடைய அன்பிற்க்கு
தகுதியானவளாக....!

என்னுடைய இந்த
அலைபரிக்கும்
"அனத்தலுக்காக"...
என்னை மன்னிக்கவும் நண்பனே!

Tuesday, January 16, 2007

Book review

உறவுகள் - Dr. ருத்ரன்



நட்பின் முக்கியமான அடையாளங்கள் நம்பிக்கையும், நெருக்கமும் தான். இவை இருந்தால் சந்தேகம் வராது.


நம்பிக்கை போலவே நெருக்கமும் நட்பின் முக்கிய அங்கம். நெருக்கம் என்பது உள்ளே ஏற்ப்படும் உணர்வு. காலம் - தூரம் ஆகியவற்றை மீறியும் நெருக்கம் இருக்கும். அருகில் அமைவது தான் நெருக்கம். அருகில் இருக்கும்வரைதான், இருந்தால்தான் நெருக்கம் என்பதில்லை . வாழ்வின் அவசியங்கள் நண்பர்களை வெவ்வேறு ஊர்களில், நாடுகளில் வாழ வைக்கலாம். இந்த தூரம் நட்பைப் பாதிக்காது.



ஒரே கருத்து, ஒத்தவிருப்பு நண்பர்களிடையே இருக்க வேண்டியதில்லை. நட்பிற்கு ஆண்-பெண் பாகுபாடும், வயது வித்தியாசமும் தடையாகாது. இருவரிடையே உள்ள அன்பும் அக்கறையும் இதைமீறி ஆழமானது என்ற நம்பிக்கையே நட்பு.


நட்பும் காதலைப் போல ஒரு ஈர்ப்பின் அடிப்படையில் தான் ஆர்ம்பிக்கும். அந்த ஈர்ப்பு தற்காலிக கவர்ச்சியா, நிரந்தர நெருக்கமா என்பதை பொருத்தே நட்பு மெருகேரும், தொடரும்.



எத்தனையோ காரணங்களுக்காக எத்தனையோ நபர்களிடம் நமக்கு ஈர்ப்பு ஏற்படலாம். அந்த ஈர்ப்பை ஆராய்ந்தால் அது ரசிப்பா,வியப்பா, மதிப்பா இல்லை இனம் புரியாமல் இன்னும் தொடரவேண்டும் என்ற விருப்பா என்பது விளங்கும்.



நண்பர்கள் அமைவது நம் வசம்தான் உள்ளது. போலியாகப் பழகாமல் அதே நேரம் போலித்தனத்தைப் பரவாயில்லை என்று விட்டு விடாமல் தெளிவாக இருந்தால் நட்பு நல்ல முறையில் அமையும். பொய்யான உறவு ஒரு நாள் உடையும். உண்மையான நட்பு எந்தக் காலகட்டத்திலும் உறுதியாக இருக்கும்.


இளமையில் ஏற்ப்படும் நட்புதான் பலருக்கு நெடுங்காலம் நீடிக்கிறது. காரணம் அந்த இளமை, உணர்ச்சிகளையும் ரசனைகளையும் போலியாக வெளிக்காட்டாத பருவம். அந்த குறை - நிறைகளோடு ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டபின், பின்னாளில் கருத்து வேறுபாடு சிறிய கோபமாக வெளிவருமே தவிர வெறுப்பாய் கசப்பாய் மாறாது.




ஆண் பெண்நட்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அதிகம். நட்புக்கும் காதலுக்கும் நிறைய பேருக்கு வித்தியாசம் புரியாதலால் ஆண் பெண் நண்பர்கள் பலர் தொடர்து பழக முடியாமல் பிரிய நேர்கிறது.இதற்க்கு பிறர் காரணமல்ல - நம் கோணத்தின் கோணலும் காரணமாகலாம். ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ, உடப் பிறந்தவர்களாகவோ ( அல்லது அந்த உறவு சொல்லி அழைத்துகொள்பவர்கவோ) மட்டுமே இருக்க முடியும் என்ற சமுதாய மூட நம்பிக்கைதான் காரணம். இந்த மூடநம்மிக்கையை நாமும் கற்றுக் கொண்டு பின்பற்றினால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு, நல்ல நண்பர்களை - அவர்கள் வேறு பாலினத்தை சார்ந்த காரணத்தாலேயே இழக்க நேரிடுகிறது.



நட்பையும் காதலையும் புரிந்து கொண்டால் - வாழ்க்கையை சுகமாகவும் வளமாகவும் அமைத்துக் கொள்ள அவை உதவும். உறவுகளில் மிகவும் உதவியானவை நட்பும் காதலும் தான்.




(Balaji, அதனால் தான் என்னை சேச்சி என்று அழைத்தாயா? சமூகத்திற்க்கு பயந்து அல்லது என்னை பார்த்து பயந்து- அல்லது உன்னை நினைத்து பயந்து. பதில் தேவை நண்பனே. கலப்பிடம் இல்லாத உண்மை தேவை)


(நீ உண்மை சொன்னால் நானும் சொல்வேன் - promise)

வலி-வேதனை

என் வாழ்க்கையில்
பிரதானமாக அமர்ந்திருப்பது
"வலி-வேதனை"!

எதற்க்கு எல்லாமோ
இதை அனுபவித்து
இருக்கிறேன்!

முதல் முறையாக,
நண்பனுக்காக...
ஒரு நாள்

பேசவில்லை என்றால்
என் தலை வலிக்கிறது!
என் மனம் வலிக்கிறது!

என் சிந்தனை வலிக்கிறது!
எங்கே சென்றாயோ...
என்ன ஆனாயோ?

என் மீது கோபமா?
என்னை விட்டுவிடுவாயோ?
தேவை இல்லாத சிந்தனைகள்!

எனக்கே தெரிந்தாலும்...
என்னால் நிறுத்தமுடியவில்லை!
இதை நினைத்து

வருத்தப்படவா...
சந்தோஷப்படவா,
வேதனைப்படவா?

எனக்கே புரியவில்லை!
என்னை புரியாமல்
திணற வைக்கவும்...

ஆள் இருக்கிறது
என்பது
எனக்கே புதிதாக இருக்கிறது!

எனக்கு பிடிக்கவில்லை - வலி!
ஆனாலும்
பிடிக்கிறது - நண்பனை!

குழப்புகிறேனா?
அது தான்
"என் நிலைமையும்...!"

"டொடிங் தாமஸ்"...
"பைத்தியம்"
இரண்டுமே எனக்குப் பொருந்தும்!

நாம்,
ஒரே அலைவரிசை...
என்றால்

நீயும்,
இந்த வ்லி-வேதனை உணருகிறாயா
.................???

Monday, January 15, 2007

சின்ன ஆசையின்... பெரிய வேண்டுதல்!

"பிடித்தவர்களுடன்... நீண்டதூரம் நடக்கவேண்டும்" - சின்ன ஆசை!

இருவரும் வெகு தூரம்,
நடக்கவேண்டும்!

நான் பேச நினைப்பதெல்லாம்,
பேசவேண்டும்!

எந்த இடையூரும்,
இல்லாமல்!

கைகளை பற்றி இருக்கவேண்டும்!
காரணம்...

நான் சொல்வது உண்மை,
பொய் இல்லை!என்பதை,

என்னுடன் நடப்பவர்,
"உணரவேண்டும்"!

என்னுடைய உணர்வில்,
குழப்பம் இல்லை!

பயம் இல்லை!
என்பதை உணரவேண்டும்...

"இருவருமே"!
சாத்தியமா?

அதைப் பற்றி....
கவலை இல்லை!

ஆனாலும்,
"ஆசைப்படுகிறேன"!

இதில் தவறு இருந்தால்,
மன்னிக்கவும்!

எதையும்,
"மறைக்க விரும்பவில்லை"...!!!


சந்தோஷங்கள்

சந்தோஷம்!
என்பதற்க்கு என்ன அர்த்தம்?
நினைத்ததை வாங்குவதில்?
நினைத்ததை சாதிப்பதில்?

நினைத்ததை வெளிப்படுத்துவதில்?
உலகத்தின் அத்தனை ,
சந்தோஷங்களும்;
காலடியில் கிடந்தாலும்...

ஒன்று மட்டும் தான்,
சந்தோஷத்தை தரும்!
நாம் விரும்புவர்கள்...
நம்மை விரும்புகிறார்கள் என்பது மட்டும் தான்!!!

பிடித்தவர்களிடம் இருந்து
ஒரு பாராட்டுதல்!
ஒரு புகழுரை!
புதிய அனுபவம்...

அது நம் உடையை பற்றி!
நம் குணம் பற்றி!
நம் உருவம் பற்றி!
நம் எழுத்தைப் பற்றி!

எதுவாக இருந்தாலும்,
அதை சொல்வது...
"நாம் விரும்புவர்கள்"!
"நம்மை விரும்புவர்கள்"!

அதில் எனக்கு...
"பரம சந்தோஷம்"!!!
மனதில் உள்ளதை,
"அப்படியே சொல்லவும்"!

வேஷம் வேண்டாம்,
முகமூடி வேண்டாம்!
தயக்கம் வேண்டாம்!
"உண்மை" மட்டுமே வேண்டும்!!!

இருவருக்கும் நடுவே...
முகமூடியை கொண்டுவராதே!
என்னால் தாங்கமுடியாது!
புரிந்துகொள்வாய்... நம்புகிறேன்!


சத்தியமாக அடுத்த மடலில்,
"உண்மையை மட்டுமே"
எதிர்பார்க்கிறேன்!
"நம்புகிறேன்"!!!

Sunday, January 14, 2007

உண்மை!

நட்பு என்பதற்க்கு,
எல்லைக் கோடு தேவை!
இல்லை என்றால்,
எல்லைகள் மீறப்படும்!

மீறினால்,
வாழ்க்கை கேலிக்கூத்தாகிவிடும்!
நட்புக்கும், காதலுக்கும்,
இருக்கும் இடைவெளி...

ஒரு ஙாலிலை தான்!
என்பது,
ஒரு கவிஞனின் கருத்து!
உண்மையா....?

தெரியாது!
நம் உறவிற்க்கு ...
பெயர் உண்டு!
சகோதரன்! சகோதரி!

அதுதான்,
நான் எழுதும்...
கவிதையின்
"அலச்சியம்"!

என் உணர்வுகளை
உன்னால் புரிந்துகொள்ள முடியும்!
மற்றவர்களுக்கு,
புரியாது!

கவிதைக்கு முக்கியம்...
கரு
பொருள்
காதல்
பொய்மை
கற்பனை
தேடுதல்
அன்பு
சுடும் உண்மை!

"காதல்" என்பதற்க்கு,
மற்றொரு பெயர் "அபரிதமான அன்பு"!
அபரிதமான அன்பு,
யாரிடம் வேண்டுமானாலும் வரலாம்!

என்னுடைய கவிதையில்,
இருக்கும் "அத்துமீறல்கள்"
"சகோதரக் காதல்"!
கலவரம் தேவையில்லை நண்பனே!!!

Saturday, January 13, 2007

உனக்கும் கேள்விகள்???


எதற்க்காக,

மணிக் கணக்காக என்னுடன் பேசினாய்?

எதற்க்காக,
நான் கேட்டதும் போஃட்டோ அனுப்பினாய்?

எதற்க்காக,
உன்னுடைய வீட்டைப் பற்றி சொன்னாய்?

எதற்க்காக,
எனக்கு, உன்னை ஏன் பிடிக்கும் என்று கேட்கிறாய்?

எதற்க்காக,
என்னை சேச்சி என்று அழைக்கிறாய்?

எதற்க்காக,
என்னுடன் பழகுகிறாய்?

இத்தனைக்கும்,
விடை தேவை!?

முயற்ச்சித்துப் பார்,
என்னைப் பற்றி புரியும்!

நான் உன்னை பற்றி,
என்ன நினைக்கிறேன் என்பதும் புரியும்!

கேள்விகள் கேட்ப்பது,
உனக்கு மட்டும் சொந்த்ம் இல்லை!

நானும்,
கேட்க்கலாம்!

நீ என்னை நம்பவில்லையா?
அல்லது, உன்னை நம்பவில்லையா???

பதில், நான் தரமுயற்ச்சித்தேன்!
நீயும் "எல்லா" கேள்விகளுக்கும் "பதில்" தரவேண்டும்!!!

கேள்வி?


எத்தனை கவிதைகள்?

எத்தனை கடிதங்கள்?

அத்தனையும் பார்த்த பின்பும்,
அதே கேள்வி?

என்னை ஏன் பிடிக்கும்???
நானும் சொல்கிறேன்!

மறுபடியும் சொல்கிறேன்,
"எனக்கே புரியவில்லை"!!!

ஒரு நாள்,
நீ பேசவில்லைஎன்றால்...

என் தூக்கம் கெடுகிறது!
"நீ என்னை நம்பவில்லை"

என்றால்...
என மண்டை குடைகிறது!!!

புரிந்தவை சொல்கிறேன்,

என்னைப்பற்றி...

நினைவில்:
சந்தோஷம்!

மனதில்:
உற்சாகம்!

நடையில்:
துள்ளல்!

எழுத்தில்:
அலச்சியம்!

முகத்தில்:
சிரிப்பு!

எண்ணங்களில்:
மாற்றம்!

பரிமாணங்கள்:
கவிதையாய்!

காரணம்,
உன்னுடைய நட்பு!

புரிந்ததா?
இன்னும் கேள்விக் குறிதானா???

மறுபடியும்...
கேட்டால்?

"நீ சென்று விட்டால்"
"நான் மறைந்து போவேன்"!

ஏன் என்று கேட்க்காதே?
"எனக்கே புரியவில்லை"!!!

தேடுதல்


என்ன தேடுகிறேன்?

எனக்கே தெரியாது!
ஆனாலும், தேடுகிறேன்.

பணத்தையா...?
இல்லை!
ஏற்க்கனவே பார்த்துவிட்டேன்!!!

அதன் மீது,
அன்றும் பிடிப்பு இல்லை!
இன்றும் பிடிப்பு இல்லை!!!

மனிதர்களையா...?
நிறைய;
"நிறங்கள்"...

எதுவும் மனதில்
பதியவில்லை!
காரணம்...

ஒரே அலைவரிசையை,
தேடுகிறேன்?
என்னுடைய "நிறம்"...

நான் தேடும்,
உயிருக்கும் இருக்கவேண்டும்!
என்னுடைய....

தேடுதல்;
என்ன என்று....
அந்த உயிருக்கும் புரியவேண்டும்!

தேடிதலில்,
எந்த எதிர்பார்பும்...
இல்லை!!!

ஒரே எதிர்பார்ப்பு...
நான் தேடுகிற "நிறம்"
உன்னிடம் இருக்கிறது!!!

அதை நீ,
புரிந்து கொள்வாயா?
கொள்கிறாய்!!!

இல்லை என்றால்,
எதற்க்காக.....
இத்தனை"கணிணிக் கடிதங்கள்"!!!


பறவைக் கூண்டு.....


பறவையை கூண்டில்,

அடைத்தால்;
பறக்க முடியாது!

பறக்க முடியாது
என்பதால்;
பறக்கத் தெரியாதா???

இருக்கும் இடத்தில்,
வாழ்வது தான்;
அதன் நியதி, விதி!

நியதி, விதியை மாற்ற,
கதவை திறக்க
"ஒரு நல்ல உள்ளம்" தேவை!

கதவை,
திறந்தாலும்;
இறக்கைகள் வெட்டப்பட்டு இருக்கும்!

இறக்கை வளரும் வரை,
பாதுகாக்க வேண்டும்!
பராமரிக்க வேண்டும்!

இறக்கை முளைத்ததும்,
பெருந்தன்மையாக...
பறக்கவிட வேண்டும்!

இத்தனையும்,
நடக்க வேண்டுமானால்
"நல்ல உள்ளம் கிடைக்கவேண்டும்"!

தேடினேன்!
தேடிக் கொண்டு இருந்தேன்...
தேடி விட்டேன்!!!

வெளியே வந்துவிட்டேன்!
பறக்க முயற்ச்சி செய்கிறேன்;
"என்னுடைய கட்டுப்பாட்டிற்க்குள்......"!!!

Friday, January 12, 2007

ஒரு கேள்வி?

கேள்வி கேட்க்க வேண்டும்;
யாரிடம்?
கடவுளிடம்!
இத்தனை வருடம் எங்கே சென்றாய்?

இத்தனை வருடம் மறந்துவிட்டாய்!
திடீரென்று,
முளைத்து இருக்கிறாய்!
"திடீர் தரிசனம்".

அனுபவிக்கவா...
கோபப்படவா?
தெரியவில்லை!!!
காரணம்....

நீ கொடுத்த "பிரசாதம்"
மிக இனிமையாய் இருக்கிறது!
அதனால்,
"உன்னை மன்னிக்கிறேன்" !!!

இயற்க்கை....

காற்று போல தழுவுகிறாய்!
தண்ணீர் போல ஓடுகிறாய்!
பனி போல குளிர்கிறாய்!
கடலை போல மோதுகிறாய்!
மழை போல பொழிகிறாய்!

மரம் போல உறுதியாய்,
கொடி போல பற்றுதலாய்
காற்று போல இனிமையாய்,
செடி போல பசுமையாய்
பூ போல மென்மையாய்.....

எல்லாம் ஆனாய் எனக்கு,
"இயற்க்கையோடு இயற்க்கையாக" !!!

புத்தகம்


அனுபவம்,

என்பது ஒரு புத்தகம்.

புத்தகம்,
படித்ததும் மறந்து விடுகிறோம்.

மறந்து விடுவதால்,
திரும்ப படிக்கிறோம்.

புதிதாகவும்,
படித்துக் கொண்டே இருக்கிறோம்.

படிப்பது தானே,
நமது வாழ்க்கை.

வாழ்க்கை என்பது,
ஒரு புத்தகம் தானே.....!

Thursday, January 11, 2007

நண்பனுக்கு......

love,
anger,
compassion,
possessive,
frienship,
happiness,
surprise,
courage,
amusement,
pride,
pleasure,
patience,
relaxation,
closeness,
repentance,
wonder,
pain,
fear,
respect,
appreciation,
security,
envy,
hope,
obligation,
honour,
gratitude,
nervousness,
delight!

NOTALGIC!!!





நட்பு என்பதற்குள்,
இத்தனை
அற்புதமான உண்ர்வுகள்!
இருக்கும் என்பதை,
இப்போது தான் உணர்கிறேன்!!!


Sisterly hug :)

நிறங்கள்

அலை அலையாக,
எண்ணங்கள்!

எண்ணங்களுக்கு...
நிறம் உண்டா?

நிறம்,
நமது உணர்வுகள்!!!

சிவப்பு:
கோப உணர்வுகள்!

மஞ்சள்:
இதமான உணர்வுகள்!

கருப்பு:
இருண்ட உணர்வுகள்!

வெள்ளை:
தெளிவான உணர்வுகள்!

நீலம்:
பறக்கும் உணர்வுகள்!

பச்சை:
பசுமையான உணர்வுகள்!

நான்,
எந்த உணர்வில் இருக்கிறேன்???

தேட வேண்டிய
அவசியம் இல்லை!

நாம் எல்லோருமே;
"ப்ரிசம்" தானே!!!


"prism".....

நிழல்


பறப்பது போன்ற உணர்வு!
கால்கள் தரையில் பரவ முடியாமல்.
காணாததை கண்டது போல.....


நடப்பது தெரியவில்லை!
எதுக்காக நடக்கிறேன்?
என்பதும் புரியவில்லை.....


சிந்தனை எல்லாம்,
ஒரே விஷயத்தை;
யோசிக்கிறது......


சந்தோஷமான உணர்வை!
முழுதும் உணர்கிறேன்.
பறக்கிறேனா! எனக்கே சந்தேகம்.....

ஆனால்,
தரையில் தான் இருக்கிறேன்!
தடுமாறி இடிக்கும்போது உணர்கிறேன்!


விழுந்தாலும்,
வலி தெரியவில்லை!
அது, என் "நிழல்" அல்லவா.............!!!

வட்டம்

நமக்கு,
நாமே வட்டம போடுகிறோம்!

ஏன்?,
நமக்கே தெரியாது!

தெரியாது!
என்பதை புரிந்துகொள்ள....

நமக்கு,
ஒரு வட்டம் தேவை இருக்கிறது!!!




பனித்துளிகளாக......



கருத்த இருண்ட மேகங்கள்!
சலசலக்கும் மரங்கள்,
இதமான ஜில் என்ற காற்று!
அனுபவிக்கும் போதே;
"பனித்துளிகளாக மழைத்துளி"!


மனதில்,
சலசலக்கும் உணர்வுகள்!
இதமான தென்றலின் திடீர் பிரவேசம்;
மனம் முழுதும் நிரம்பி
மூச்சு முட்டுகிறது!


திணற அடிக்குமா?
திகட்டி விடுமா?
என்ற கவலை இல்லை!
விட்டு சென்று விடுமா?
என்ற பயம் இல்லை!


மனமும், உணர்வும்;
நர்த்தனம் ஆடுகிறது,
"கூத்தாண்டவர்" போல!
இதமான உணர்வுகள்;
மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன!


"பனித்துளிகளாக.............."

Monday, January 8, 2007

காத்திருத்தல்...


காத்திருத்தலும் இனிமையே!
ஆனால்,


சில நேரங்களில்
காரணம் முக்கியம்.


அதைவிட,
காத்திருக்க வைக்கும் நபர்!


காத்திருக்கும் போது வரும் உணர்வு;
எதிர்பார்ப்பு!


எதிர்பார்ப்பு,
கோபத்தை உண்டுபண்ணும்.


கோபம்,
சிந்தனையை சிதைக்கும்.


சிதையும் சிந்தனை;
தடித்த வார்த்தைகளாக வெளிப்படும்


வெளிப்படும் வார்த்தை,
அடுத்தவரை பாதிக்கும்.


பாதித்தவர் வருத்தப்படும் போதுதான்,
நம்முடைய தவறு புரியும்.


புரிந்தபின்,
மன்னிப்பு கேட்க்கவில்லை என்றால்?


அங்கே,
காத்திருந்ததின் அர்த்தமே பயனற்றது!


காத்திருக்க வைத்ததிற்க்கு,
ஞாயமான காரணங்கள் இருக்கலாம்.


புரிந்து கொள்ளாதலால்,
வந்த தவறு!


அதனால்,
"மன்னிக்கவும்"... habibi and akh!



Sunday, January 7, 2007

உண்மைகள்

அழகாக உடை உடுத்தி,
அமர்த்தலாக
கோயிலுக்கு செல்கின்றனர்.


கடவுளே!
என்னையும், என் குடும்பத்தை மட்டும் காப்பாற்று.
"தாழ்மையான வேண்டுதல்".


விழுந்து விழுந்து கும்பிட்டு
வெளியே வந்ததும்,
ஒரு ரூபாய்....


பிச்சைக்காரனுக்கு
போட அழும்,
அற்புதமான மனிதர்கள்...!!!

கனவு

புரிந்தவை எதுவும் நடப்பது இல்லை.
நடப்பது எதுவும் புரிவதும் இல்லை!

எல்லாமே ஒரு கனவு;
கனவு என்பது மயக்கமா?

மயக்கம் எதனால்.... கலக்கமா?
கலக்கம் என்பது புரிந்தது.

"உண்மை"......
அது தான் "உண்மை!"

புரிந்தது எதுவும் நடப்பதும் இல்லை!
நடப்பது எதுவும் புரிவதும் இல்லை....!



முரண்பாடு

தண்ணி அடிப்பவனிடம்
இருந்து
தன்னை காக்க,
தண்ணீர் வைக்கும்
பாத்ரூமில்,
தஞ்சம் புகுந்தாள்.


அடி, உதை....
ஏச்சு, பேச்சு,
அவள் ஏன் வெளியேறவில்லை?
உறவை ஏன் அறுக்கவில்லை......
பயமா?
பண்பா?
உறவா?
சமூகமா!
அல்லது
அன்பா!?



இவை எல்லாம் காரணம்,
முக்கிய காரணம்,
"குடி" தான் கெட்டது;
"குடிப்பவன்" இல்லை
என்ற
அப்பட்டமான "உண்மை".



வாழ்க்கையில் போராட வேண்டும்,
என்ற,
வெறி, திமிர்....துணிச்சல்!
முடியாது என்பதை
ஏற்காத முரண்பட்ட மனது.....




ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கள்.
pessimist: தேவை இல்லாமல் அடிபடுகிறாள்.
opptimist: எதையும் சமாளிப்பாள்.
society: இவளிடம் என்ன பிரச்சனையோ.
relatives: அவரவர் உறவுகள், அவரவர்களுக்கு சப்போர்ட்.

Saturday, January 6, 2007

கோபம்

கோபம் ஞாயமா?
கோபம் தேவையா?
கோபம் தவறா?
கோபம்!!!???


கோபம் ஞாயமா?
ஞாயமான சமயங்களில்;
ஞாயமான கோபம்,
ஞாயமானது.


கோபம் தேவையா?
கோபம் இல்லை
என்றால்,
மனிதனால் உணரவே இயலாது.



கோபம் தவறா?
நம்மை உணர வைக்கும்.
மற்றவர்களை மிரள வைக்கும்,
மற்றவர்களிடம் அன்பையும் பெருக்கும்!


ஞாயமான,
தேவையான,
சரியான;
அன்பான,



"எல்லாமே தேவையான கோபம் தான்"




(what is your opinion?)

Friday, January 5, 2007

மறக்க முடியாத நாள்

(22/12/06)

என்னுடை வாழ்க்கையில்,
முக்கிய இடம் பெற்ற நாள்;
முதல் நாள் நீ பண்ணிய போஃன்.


எங்கிருந்து வந்தாய்,
என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டாய்
'தம்பி', 'நண்பன்' என்ற அடைமொழியுடன்!


உன் முதல் குரலில்,
என் மனம் திறந்துவிட்டது,
இது வரை நடக்காதது.


எனக்கு எத்தனையோ பெயர்கள்
வைத்து இருக்கிறார்கள்;
ஆனால், "கேர்லிஸ்" முகம்


எனக்குத் தெரியாத,
அல்லது
நான் மறந்து போன முகம்.


உன்னிடம் மட்டும் தான்
வெளிப்பட்டு இருக்கிறது.
'நன்றி' நண்பனே!


இருபது வருடம் பழகிய தோழி,
மூன்று வருடம் பழகிய தோழி
இவர்களுக்கு தெரியாத உண்மைகள்


உன் ஒரு போஃனில்,
மடை திறந்த வெள்ளமாய்
கொட்டி இருக்கிறேன்.


என்ன மாயம் செய்தாய்?
எனக்கே புரியவில்லை!
குழப்பத்தில் உறங்க முடியவில்லை.


மறுநாள்,
உன் குரலை கேட்டதும்
புரிந்து கொண்டேன்.


நீ,
என்னுடன்விளையாடவில்லை.
நிம்மதி அடைந்தேன்.


அன்றிலிருந்து
உனக்கு என் வீட்டிலும்
அனுமதி;


என் மனதிலும் அனுமதி.
உன் ஒற்றை வரி சொல்லுக்கு
நான் தவமாக இருக்கிறேன்.


"நான் தான்"
இன்றும் என் காதில் ஒலிக்கிறது,
அசிரீரீ போல.....



என்னிடம் ஏன் இத்தனை அன்பு?
நீ கேட்ட கேள்வி,
விடை தேடுவதை நிறுத்திக் கொண்டேன்.


சில கேள்விகளுக்கு,
விடைகளே கிடையாது
புரிந்துகொள் நண்பனே!


"நீ என் தம்பி,
நான் உன் சேச்சி"
விடைகள் தேடாதே...!



"நன்றி" என்று சொன்னால்,
நம் உறவிற்க்கே அர்த்தம் இல்லை.
"சந்தோஷம் நண்பனே!" எல்லாற்றிக்கும்............

Thursday, January 4, 2007

வாழ்க்கை

ஆயிரம் கனவுகள்
ஆயிரம் ஆசைகள்
இடையில்
வாழ்க்கையின் ஓட்டம்
திசை திரும்பியது.
ஓட ஓட விரட்டியது
அதைவும்
தாண்டி வாழ்கிறேன்.
ஓட்டத்திலும்,
எனக்கு பிடித்ததெல்லாம்செய்தேன்,
செய்ய முயற்ச்சித்தேன்.
ஆனால்,
நசுக்கப்பட்டேன்
"பெண்களுக்கு இது தேவையில்லை",
என்ற
ஒற்றை வரி "மரண தண்டணையில்"

இன்று
எல்லாம் அடங்கிவிட்டது.
ஓட முடியவில்லை,
சமாதானம் ஆகிவிட்டேன்.
இனி
ஓடத் தைரியம் தேவை
அதற்க்கு,
ஊன்றுகோல் தேவை நண்பனே!
கால்கள் நசுக்கப்பட்ட
என்னைஊக்குவிக்க,
நண்பனாக நீ கிடைத்து இருக்கிறாய்.
"முயற்ச்சி செய்கிறேன்"
என்று சொல்லக் கூட
பயமாக இருக்கிறது நண்பனே!

அடிகள் எல்லாம் மறந்துவிட்டேன்.
வடுக்கள் என்னை பயமுறுத்துகின்றன.....
உனக்கு உண்மை சொல்கிறேன்,
"வீட்டில் அடிபட்டு விட்டேன்"
"வெளியே அடிபட பயமாக இருக்கிறது".
யாராவது, என்னை அணைத்து
கைபிடித்து வழிநடத்துவார்களா...!?
என்ற,
ஆசை!
இல்லை
பேராசை!
என்னை வதைக்கிறது நண்பனே,
என்னை உறங்கவிடாமல்....!




(நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய போராடும் குணம் தான் செத்துவிட்டது.15வருடத்திற்க்கு பின் என் வாழ்க்கை, தெளிந்த நீரோடை போல ஓடுகிறது.

"ப்ளாக்"கில் நான் எமுத ஆரம்பித்ததின் உண்மையான காரணம், என்னால் மற்றவர்களின் கடும் சொல்லை தாங்க முடியுமா என்று சோதிக்கத்தான்.

முதலில் சிறிது தடுமாற்றம் இருந்தது, இப்போது இல்லை(90% ஒக்கே). ராஜீவ்'விற்கு தனியாக 'ஸாரி' ,'நன்றி' என்று மெயில் அன்றைக்கே அனுப்பிவிட்டேன்).

Wednesday, January 3, 2007

கேள்விகள்???

பிறந்ததின் அர்த்தம் என்ன?
எதற்க்காக வாழ்கிறோம்?
ஏதாவது அர்த்தம் இருக்கிறதா....!
பிறக்கிறோம்,
வளர்கிறோம்,
உண்கிறோம்,
உறங்குகிறோம்,
சண்டை போடுகிறோம்;
சமாதானம் ஆகிறோம்.


துக்கம்,சோகம்,மகிழ்ச்சி
ஏதாவது ஒன்று குறைந்து
அல்லது ஒன்று அதிகரித்தால்
பிறப்பின் அர்த்தத்தை
கேள்விக் குறியாக்குகிறோம்.

கேள்வியே அர்த்தமற்றது,
பிறப்பிற்க்கு அர்த்தம்
தேடும் அளவுக்கு
வாழக் காலம் நமக்கு இல்லை!

ஏமாற்றம்

ஏமாற்றம்,
எதிர்பார்ப்பு இருந்தால் வரும்.

தெரிந்து ஏமாறுவது,
தெரியாமல் ஏமாறுவது.

பிடித்தவர்களிடம்,
தெரிந்து ஏமாறுவது

பைத்தியக்கார,
சந்தோஷமான ஏமாற்றம்.

தெரியாதவர்களிடம்,
தெரிந்தே ஏமாறுவது

சிலசமயம்,மூடத்தனமான,
சந்தோஷமான முட்டாள்தனம்............


(do you ever experienced anything like this bro...?)

Tuesday, January 2, 2007

சலனங்கள்

மனதின் ஓட்டம்
மனதின் திடம்
மனதின் பயம்
மனதின குழப்பம்
மனதின் வெறுப்பு
மனதின் கோபம்
மனதின் தேவை
மனதின் வெளிபபாடு
இவை தான்
மனிதனின் சலனமாக மாறுகிறது.

my friend and i had a big argunment about this extra marital affairs. she says it is normal; when they are not satisfied with their life, they can do anyhting they want. but my argument was i do agree with her points, but dont we have morals and loyality towards each other. i don't believe in afairs, it is really silly...may be i am very conservative.what do u think my brother?



தோழமை

(1-02-07--- 4.10 AM)

தோழமை...
எத்தனை தான் பறந்தாலும்
ஒரு சின்ன மாற்றம்
திரும்பி பார்க்கவைக்கும்!

நாம் செய்வது சரியா?
நமது தோழைமை சரியா?
நாம் தகுதி ஆனவர்களா?
அவர்கள் தகுதி ஆனவர்களா?

தோழமைக்கு....
முக்கிய தகுதி,
உண்மை...நம்பிக்கை!!!
எத்தனை முயன்றாலும்


தோழமையில்
வெறுப்பும்,
பாராமுகம்...
சகித்துக் கொள்ளவது கடினம்!


சண்டை போடலாம்,
திட்டலாம்... விலகலாம்.
பிறகு சேரலாம்...எதற்க்கும்
காரணம் முக்கியம்!!!

இல்லை என்றால்
தோழமைக்கு
மதிப்பும் இல்லை....
மரியாதையும் இல்லை!!!

(what do u say balaji?)






Monday, January 1, 2007

பெரிய பெரிய ஆசைகள்


"கேன் ஸர்" நோயாளிகளுக்கு
உதவவேண்டும்.


குழந்தைகளுக்கு(அனாதை குழந்தை)
படிப்பிற்க்கு உதவவேண்டும்.


"ஒப்ரா வின் ப்ரே" யை
பார்க்க வேண்டும்.


உலகம் முழுதும்
சுற்றிப்பார்க்க வேண்டும்.


எழுத்துலகில்(தழில்),
எதையாவது சாதிக்க வேண்டும்.


-------------------------------------
இது புதிய ஆசை,
என் புதிய தம்பியை பார்க்கவேண்டும்.