Friday, March 2, 2007

பைத்தியக்கார உலகம்

பார்க்கிறோம், பழகுகிறோம்...
செல்கிறோம், மறந்துவிடுகிறோம்...
இல்லை... முயற்ச்சிக்கிறோம்.

இரயில் சிநேகிதம் போல
இப்போது,
கம்யூட்டர் சிநேகிதம்.

பேசுகிறோம் மணிக்கணக்காக
திடீரென்று.....
எல்லாம் மறைந்து விடுகிறது.

விட்டு விடுகிறார்கள்,
அல்லது
விட்டுவிடுகிறோம்.

சிலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
சிலர் மாட்டவிடப்படுகிறார்கள்.
சிலர் பிடியே இல்லாமல்....

ஆனாலும்,
இந்த மோகம்...
யாரை விட்டது.

எதையோ தேடுகிறோம்
மனிதனிடம் தேடாமல்
மெஷினிடம் தேடுகிறோம்.

அதனால் தானோ
அதற்க்கு உயிர் இல்லை.
இதுவும் மாயை தானோ?

இதை உணரும் போது
நாம் பைத்தியம் ஆகி இருப்போம்,
அல்லது எதிராளி பைத்தியம் ஆகி இருப்பார்கள்.

மெஷினுக்கு இவ்வளவு மதிப்பா?
புரிந்தது......ஒன்று........
மெஷினுக்கு உயிர் கொடுக்கிறோம்.

அதில் வரும் மனிதர்களுக்கும்
உயிர் கொடுத்து பார்க்கிறோம்.
சிலர் மூச்சு விடுகிறார்கள்.

சிலர் மூச்சு விட முயற்ச்சிக்கிறார்கள்,
சிலர் மூச்சு விட்டு தோத்துப்போகிறார்கள்.
சிலர் மூச்சையே நிறுத்திவிடுகிறார்கள்...

அதில்
நம்மையும் சேர்த்து தான்.
"பைத்தியக்கார உலகம்"....

"பைத்தியக்கார மனிதர்கள்"
என்னையும்....
உன்னையும் சேர்த்துதான்!



(so, don't worry abt this gal and boy friendships balaji... they are so many of them are hiding their real names and their real identity.... i hate ppl who uses three words often... fear, promise, God... they are all playing, hiding their true identity to make others feel good abt them... in a way they are succecding balaji... just read my innocence and ignorance post again balaji. u'll understand what i mean. don't worry.)

No comments: