(8-02-07--- 8.25AM)
கசகச வென்ற நெருக்கடியிலும்
கையை பற்றியபடி நடக்கிறார்கள்
உலத்திலேயே அவர்கள் இருவர் மட்டும்தான்
என்பது போல...!
அத்தனை நெருக்கடியிலும்
குழந்தைகளின் கையை
தரதரவென்று இழுத்தபடி... தாய்மார்கள்
ஆனால் சந்தோஷமாக...!
நிமிர்ந்து நடக்க இடமில்லை
ஆனாலும் முகம் முழுக்க புன்னகையுடன்
நடக்க முடியாமல் நடக்கும்
வயதானவர்கள்...!
இத்தனையும் பார்த்தபடி
சிலர் வெறுப்புடன் நடக்கிறார்கள்
அவர்களுக்கு...
என்ன பிரச்சனையோ...!
ஆனாலும்
உலகம் நிற்காது!
உலகம் பிரளாது!
நம்மையும் சேர்த்துதான்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment