Wednesday, January 17, 2007

குழப்பங்கள்...

மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்!
காரணம்...
நான் என் கட்டுப்பாட்டில் இல்லை!
இது தான் உண்மை!

புது உறவு,
மனதை ஆக்கிரமித்தது போல
அரிக்கவும் செய்கிறது...
தேவை இல்லாத சந்தேகங்களுடன்!

சரியாக சொல்கிறேன்,
"அன்பு";"
அபரிதமான அன்பு" அதிகரிக்கும் போது
கூடவே...

அதைப்பற்றிய பயமும் வரும்.
நாம் செய்வது சரியா?
இது நிலைக்குமா?
ஏகப்பட்ட குழப்பங்கள்!

இதில் என் தவறு
எனக்கே புரிகிறது!
தேவை இல்லாமல்...
உன்னையும் குழப்புகிறேன்.

அது தான் என் கவலையே...
உன்னிடம் எதையும்
மறைக்க முடியவில்லை!
எதையுமே....

என் கோபம்
என் அன்பு
என் காதல்
என் குழப்பம்
என் சந்தோஷம்
என் சந்தேகங்கள்...

எதையும் ,
எதையுமே மறைக்க முடியவில்லை!
ஆனால்
இதையும் கடந்து வருவேன்...

உன்னுடைய நல்ல தோழியாக
உன்னுடைய நல்ல சேச்சியாக
உன்னுடைய அன்பிற்க்கு
தகுதியானவளாக....!

என்னுடைய இந்த
அலைபரிக்கும்
"அனத்தலுக்காக"...
என்னை மன்னிக்கவும் நண்பனே!

No comments: