(25-03-07---10.00pm)
உலத்தில் எல்லாமே சந்தோஷம்
என்றால்.....
மனிதன் வாழ்க்கையை வெறுத்துவிடுவான்.
கேன் ஸர் நோயாளி.....
சந்தித்தேன், இன்று....
எத்தனை பெரிய நோய்!
ஆனால், நம்பிக்கையுடன் இருக்கிறார்
என்னை தலையில் குட்டியது
.....போல இருந்தது....!
வாழ்க்கை....
என்பது வாழ்வதற்க்கு
இன்று என்பது நிரந்தரம் அல்ல!
நாளை என்பது கனவும் அல்ல!
நடப்பவை எல்லாம் ... உணருவோம்!
வாழ்க்கையை வாழ்வோம்!
சின்ன சிரிப்பு ... மனதை இலக்கும்
சின்ன பொய் ... மனதை உறுத்தும்
சின்ன மன்னிப்பு ... மனதை இலேசாக்கும்
சின்ன உண்மை ... மனதை விலாசமாக்கும்
சின்ன வேறுபாடு ... மனதை கலக்கும்
சின்ன மாற்றம் ... மனதை சமன்படுத்தும்.
உணருகிறேன் ......... உணருவோம்!
வாழ்க்கையை அதன் போக்கில் விட...
நான் ஞானியும் அல்ல.... சாமியும் அல்ல!
தவறுகளை திருத்தமுயல்வேன்.
எதுமே மாற்றத்திற்க்கு உட்பட்டது!
மனிதனின் மனம் ஒரு விதி விலக்கல்ல!
மன்னிப்பு கேட்ப்பது என் தன்னம்பிக்கை.
உண்மையை சொன்னது என் பலம்.
மன்னிக்க மறுப்பது உன்னுடையை தேவை
மறக்க நினைக்காதது உன்னுடைய குறைபாடு.
காலத்திடம் விட்டுவிட்டேன்....
என் பிரச்சனையை!
புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்
மனிதனின் மாறுபட்ட கருத்துக்களை...
உண்மைக்கு எப்போதுமே உயிர் உண்டு
என்று நம்புவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment