Friday, April 13, 2007

நிசப்தம்

அடர்ந்த காட்டில்
அழகான மரங்கள்
ரம்மியமான சூழல்...
எங்கும் நிசப்தம்!
உன் குரல்
எனக்கு கேட்கிறது.
ஆனால்,
என்னுடைய குரல்
உனக்கு கேட்க்கவில்லை!
காதில் கோளாறா....
இல்லை மனதில் கோளாறா......
இதுதான் வாழ்க்கையோ!!!???

எடை......

அமைதியான சூழலில்
ஆழ்ந்த சிந்தனையில்,
ஆன்மாவிடம்... ஒரு கேள்வி...
என்னுடைய ஆன்மா, நிழல்...
நல்லதா... கெட்டதா...?


ஆன்மாவின் பதில்...
எனக்கு தெரிந்தால்
உனக்கு தெரிந்து இருக்கும்.
உன் நிழலை கேள்...
அது உன்னுடன் தானே வருகிறது.

நிழலிடம் கேள்வி
பதில்.....
"ஆன்மா" ... நல்லது
உன் நிழல்
உன்னுடைய கவசம்.

இரண்டையும் எடை போடாதே...
எடை போட்டால்
அமைதி போய்விடும்.
அமைதியாக சிந்தித்தேன்
"எடை போடுவதை நிறுத்திவிட்டேன்"!!!

கல்யாணம்

மலர்ந்த மொட்டை
கிள்ளி எறிந்தார்கள்.
உனக்கு இடமில்லை
மலர்ந்துவிட்டால்.....
மலர்ந்ததிற்க்கு,
தண்டனையா....???

குழப்பம்....

கேட்க்க நினைத்து
மறைந்து போனேன்.
கேட்டாலும் கிடைக்காது
என்பது தெரிந்து தானா?
கேட்டிருந்தால்
கிடைத்து இருக்குமா...?
கேள்விகள் கேட்பது
உரிமை.
ஆனால், யாரிடம்
என்பது......
அதுவே கேள்விக்குறிதான்........................!

சத்திய சோதனை

தட்டுத் தடுமாறி
முட்டி மோதி
கடைசியில்,
அடிபட்டது என்னவோ
ஆன்மாவிடம் தான்!!!