Friday, March 30, 2007

முரண்பாடான மனிதர்கள்

"செல்" லின் சொற்பொழிவு...
நான் கடவுளிடம் சரண்.
நான் எல்லா கடவுளையும்
மதிக்கிறேன்!.....
அழகான வாக்கிமூலம்,
ஒரே நெருடல், எனக்கு
அடுத்த மதத்தினர்
தரும் பிரசாதத்தினை
வாங்க மறுப்பதின், காரணம் என்னவோ???


யாரை ஏமாற்றுகிறார்கள்...
தங்களையா?
அலல்து, தங்களை நம்பும் மற்றவர்களையா?


காது கொடுத்து கேட்க்க ஆள் இருந்தால்
சாத்தானும் வேதம் ஓதும்!

கவலை

கவலையாக இருக்கிறது
எதை நம்புவது....
அருகில் இருக்கிறது
ஆனால் "செல்" போன்றது.

தொலைவில் இருக்கிறது
"நழுவுகிற மீன்"....

"செல்" அரிப்பை தடுத்துவிட்டேன்.

"நழுவுகிற மீன்" ஒன்றும் புரியவில்லை.


"செல்" அரிப்பில் அடுத்து
மாட்டப்போவது யாரோ?
அதிர்ஷ்டசாலிக்கு என் வாழ்த்துக்கள்!

கசப்பை எப்படி நீக்க என்று தெரியவில்லை.
ரணம், கசப்பு.... இரண்டும்
வருத்துகிறது.

துவேசர்கள்

அழகிய தோட்டத்தில்
நான்கு கோரைப்புற்க்கள்.
பிடிங்கினாலும்.....
மறுபடியும் வேறு இடத்தில்....

நிதர்சனம்

குப்பையை ஒதுக்கும் போது கவனித்தேன்
கைகள் படாமல் ஒதுக்குகிறோம்...
இது தானோ நமக்கும்,
உயிர் போன பின்!

நிழல்

நினைவில் நிற்க்க மறுக்கின்றன
மறைந்து போன காலங்கள்.
ஒரு வேளை, மறைந்து போனது
நான் தானோ...!

கருத்துக்கள்

சிந்திக்க, மனம் வேண்டும்
சிதர அடிக்க, எண்ணங்கள் வேண்டும்.
சிரிக்க வைக்க, மனம் வேண்டும்.
அழவைக்க, சொற்க்கள் போதும்.
நம்ப வைக்க, மூளை வேண்டும்.
ஏமாற்ற, முகஸ்துதி ஒன்று போதும்.
அடிபட்டவர்களின்… தாழ்வான கருத்துக்கள்!

சாக்கடை மனிதர்கள்

இரத்தம் கொடுத்தவனை
நீங்கள் கடவுள் என்கிறான்.
பிழைத்து நடந்ததும், கேட்கிறான்...
"நீங்கள் எந்த ஜாதி......"

மனது

தொலைந்து போனது
தேடுகிறேன்.... எதை?
கிடைக்கும் என்று நம்பிக்கை
நம்பிக்கை...எதனால்?
மனிதன் என்பதால்!
மனதுக்கு என்ன நிறம்...
வெள்ளை!
அதனால் தான் ஊடுருவுகிறது…
பிரதிபலிக்கும் அன்பை!

ரசிக்க தெரிந்தவர்கள்
சுகவாசிகள்!


ரசிக்க தெரியாதவர்கள்
வெறும் வாசிகள்!

இரண்டும் தெரிந்தவர்கள்
சொர்க்கவாசிகள்!

காயங்கள்

ஆறிய பின்னும்
தடிப்பாக தெரிகிறது... வடுக்கள்.
எது ஆறியது
எனக்கு சந்தேகம்.
உதிர்த்த உதிரமா
தடித்த தோலா?
விலித்த மனதா?
மனமே உன் நிம்மதி
எதில்...ஆறியது...?
.....???
இரண்டு அன்பான
வார்த்தைகள், புன்னைகை!!!

குழப்பம்

மறக்க நினைத்து
மறந்துவிட்டேன்.
மறந்து போனேன் என்பதையும்
மறந்தும் போனேன்.......
ஆனால்..........எதை..........?

Tuesday, March 27, 2007

i gave u lot of clues
"innocent or ignorant"
"promise" diary msg
"gossip"
"just a thought" i said "soul...shadow"this is for me.... "divine..friendship" for u two
"mistakes"
"almighty"comment.
"god" post.... i mentioned they always pray but they never help others or do anything constructively.



i never want to hide anything from u.
sorry abt evrything.
i am a simple human being with lot of truth.
this con or lies or promises never works for me.
so, let me be, who i am rather than a weird person like others.

விந்தையான மனிதர்கள்

(28-03-07-----9.20AM)
வெறும் பேச்சை மட்டும்
நம்புவள் அல்ல நான்.
செயல் வேண்டும் எதிலும்
அதனால் தான்...
படித்த முட்டாள்களை
சில சமயம் பிடிப்பது இல்லை.
படித்துவிட்டு வெறும் கனவில்
வாமும் சில பெண்களை
வெறுக்கிறேன்.
அவர்களும் வாழமாட்டார்கள்
மற்றவர்க்களையும் குழப்புவார்கள்....
இதற்க்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.
மூன்று வருடம் நரக வேதனை
பேசமட்டும் பயன்படும் கருவி அல்ல நான்.
எனக்கு செயல்கள் முக்கியம்.
அருகில் இருப்பவர்களுக்கே
உதவ மாட்டார்கள்.....
ஆனால் கடவுளிடம் சரண்!
என்ன உலகமோ .....
என்ன மனிதர்களோ.....
விந்தையான மனிதர்கள்.
இனியாவது நான் கவனமுடன் இருக்கவேண்டும்!!!

உலகம்

(25-03-07---10.00pm)

உலத்தில் எல்லாமே சந்தோஷம்
என்றால்.....
மனிதன் வாழ்க்கையை வெறுத்துவிடுவான்.

கேன் ஸர் நோயாளி.....
சந்தித்தேன், இன்று....
எத்தனை பெரிய நோய்!

ஆனால், நம்பிக்கையுடன் இருக்கிறார்
என்னை தலையில் குட்டியது
.....போல இருந்தது....!

வாழ்க்கை....
என்பது வாழ்வதற்க்கு
இன்று என்பது நிரந்தரம் அல்ல!

நாளை என்பது கனவும் அல்ல!
நடப்பவை எல்லாம் ... உணருவோம்!
வாழ்க்கையை வாழ்வோம்!

சின்ன சிரிப்பு ... மனதை இலக்கும்
சின்ன பொய் ... மனதை உறுத்தும்
சின்ன மன்னிப்பு ... மனதை இலேசாக்கும்
சின்ன உண்மை ... மனதை விலாசமாக்கும்
சின்ன வேறுபாடு ... மனதை கலக்கும்
சின்ன மாற்றம் ... மனதை சமன்படுத்தும்.


உணருகிறேன் ......... உணருவோம்!


வாழ்க்கையை அதன் போக்கில் விட...
நான் ஞானியும் அல்ல.... சாமியும் அல்ல!
தவறுகளை திருத்தமுயல்வேன்.

எதுமே மாற்றத்திற்க்கு உட்பட்டது!
மனிதனின் மனம் ஒரு விதி விலக்கல்ல!


மன்னிப்பு கேட்ப்பது என் தன்னம்பிக்கை.
உண்மையை சொன்னது என் பலம்.
மன்னிக்க மறுப்பது உன்னுடையை தேவை
மறக்க நினைக்காதது உன்னுடைய குறைபாடு.

காலத்திடம் விட்டுவிட்டேன்....
என் பிரச்சனையை!


புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்
மனிதனின் மாறுபட்ட கருத்துக்களை...
உண்மைக்கு எப்போதுமே உயிர் உண்டு
என்று நம்புவோம்!

Friday, March 23, 2007

அசட்டுத்தனங்கள்...

(23-03-07----11.00pm)


குழந்தையுன் அசட்டுத்தனமான கேள்விகள்
பெரியவர்களின் அசட்டுத்தனமான நடத்தைகள்
மனிதர்களின் அசட்டுத்தனமான நம்பிக்கை
சூழ்நிலையின் அசட்டுத்தனமான மோதல்கள்
மூளையின் அசட்டுத்தனமான எண்ணங்கள்
சமூகத்தின் அசட்டுத்தனமான எதிர்பார்ப்புகள்
உலகத்தின் அசட்டுத்தனமான பார்வை
இவை எல்லாம்....
இயற்க்கையின் அசட்டுத்தனமான 'பரிமாணங்கள்'!!!

மறக்கவும்... மன்னிக்கவும்...

மற்க்கவும் மன்னிக்கவும்...
எத்தனை எளிதான வார்த்தைகள்.
ஆனால், கடிமையான எதிரி
'மனிதர்களுக்கு'......
மறக்கவும் மன்னிக்கவும்,
காலம் தாண்டி என்றாலும்
நம் காலம் இன்னும் முடியவில்லை!
வாழ்க்கை வாழ்வது சிலகாலம்
அதில் கோபங்கள் அர்த்தமற்றது!
கோபமே அர்த்தமற்றது அல்ல
ஆனால், நெடுநாளைய கோபம்
.....அர்த்தமற்றது..............
மறப்பதும், மன்னிப்ப்தும் மனித இயல்பு
அர்த்தமுள்ளதாக வாழ்வோம்
இந்த வாழ்க்கையை!!!

I FORGET...

(16-03-07-----11.00pm)


i asked for two words
'good bye'
in return... i got
"i don't want to pursue this relationship"


i never felt,
low in my life before
that day,
i really wished....


let me die the minute!
i am trying..
to forget everything
including.... myself!


someday,
you'll understand.
the reality is...
always hard to accept!

விடுதலை

(15-03-07---11.30pm)


மனதை அரித்த விஷயங்கள்
இன்று வெளியே விட்டதும்
மனதெல்லாம் அமைதி!
எத்தனை வேதனை....
இத்தனை நாட்க்களும்
பொய் சொல்ல மனம் வேண்டும்!
தேவை இல்லா பொய்கள்
இத்தனை வேதனை படுத்தும்
என்பதை இப்போது தான் உணர்கிறேன்!
மனதில் இன்று அரிப்பு இல்லை
விட்டு விட்ட மலைப்பு இல்லை!
மற்றவர்களுக்கு தவறாக தெரியலாம்
சத்தியம் மீறப்பட்டது என நினைக்கலாம்
தேவை இல்லா சத்தியத்தை
இத்தனை நாள் காப்பாற்றியதே முட்டாள்தனம்!
சத்தியம் வாங்கியவரின்
தேனையான சத்தியங்கள்
இன்றும் காப்பாற்றுகிறேன்!
உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன்!!!
இந்த சத்தியம்
தேவை இல்லாதது....
எனக்கு விடுதலை,
இந்த பொய் சத்தியத்தில் இருந்து!

true

may be the truth 'hurts'
but..... right,
unconditional........
still exists to me..................

Monday, March 12, 2007

மவுன போராட்டம்

(13-03-07-----9.53AM)

இந்த மவுன போராட்டம்
எனறு முடியும்.

எதற்கு எல்லாமோ
காத்திருந்தேன்....

இன்று, நாளை
என்று முடியும்?

மவுனம் பதில்
தருமா....???

ஒரே அலைவரிசை
என்பதால் தான்.....


இத்தனை கவலை
மவுனமே மனம் இறங்கவும்!


(balaji, i am waiting buddhu..... i am trying very hard to adjust..... pl, revert back soon balaji, the time is killing me balaji)

Saturday, March 10, 2007

தவறுகள்

நாம் தான் தவறு செய்யவேண்டும்
என்பது தேவை இல்லை
மற்றவர்களின்.....தவறான சத்தியங்கள்
நம்மை தவறானவார்களாக காண்பிக்க
அதுவே காரணமாகிறது.
சத்தியங்கள் போற்றப்பட வேண்டியது
சத்தியம் வாங்கிய நபர்
சத்தியவதியாக இருந்தால்
ஆனால்,வாங்கியவர்களின்,
எண்ணங்கள் புரிபடவில்லை....
உன்னிடம் உண்மையை சொல்ல
மனது துடிக்கிறது.....
இயற்க்கைக்கு எதிராக
எதையும் செய்வது இல்லை..
இந்த சத்தியம் என் எதிரி!
உண்மை உன்னை என்ன
செய்யும் என்று கவலையாக இருக்கிறது.
என்றுமே எதையும் உன்னிடம்
மறைத்தது இலலை....
இந்த உண்மையை மறைத்தது
நான் இல்லை......
தோழி என்ற இடை சொருகளின்
அபத்தமான சத்தியம்....
என்னுடைய தோழரின் அறிவுரை
உண்னையை சொல்....
தவறு நீ செய்யவில்லை.....
தேவை இல்லாமல்.....
சத்தியத்தை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை....
யோசிக்கிறேன்...... ஆனால்..... நீயே
இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறாய்....
என்ன செய்ய நண்பனே.....
நீயே சொல்? ........ உண்மையை
உன்னிடம் சொல்லவா....?




(i don't know what to say balaji..... i am in real pain.... i have to tell u lot of things but i don't know.... HOW?......... )

Friday, March 9, 2007

சத்தியம்

(9-03-07--- 10.00AM)

சொல்ல வேண்டும் என்று
மனது துடிக்கிறது.

ஆனால், செய்த சத்தியம்
என்னை தடுக்கிறது.

சத்தியம் ஞாயமான
காரணமாக இருந்தால் பரவாயில்லை.....

ஆனால், அபத்தமான
காரணத்திற்க்காக...

நான் என் தூக்கத்தை
இழந்து கொண்டு இருக்கிறேன்....

சத்தியம் வாங்கியவர்கள்
சாந்தமாக .....

ஒன்றுமே நடக்காதது போல
நல்ல தோழி என்ற வேடத்துடன்...

நானோ மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்.........

நல்ல நண்பனை இழந்து
கொண்டு இருக்கிறேன்

ஒன்றும் செய்யத்தெரியாமல்
செய்யமுடியாமல்...........



(never ever promise anyone without any proper reason balaji )

Sunday, March 4, 2007

குழந்தை

(4-03-07---11.20PM)

குழந்தையாக இருந்தால்
எத்தனை நன்றாக இருக்கும்.


எதை பற்றியும்
கவலை வேண்டாம்.


ஆண், பெண் என்ற
பேதம் வேண்டாம்.


நினைத்தவுடன்
அழவும்....

நினைத்தவுடன்
சிரிக்கவும்...

நினைத்தவுடன்
அடம்பிடிக்கவும்....

நினைத்தவுடன்
சாதிக்கவும்....

நினைத்தவுடன்
எதையும் மறக்கவும்...

குழந்தையாக,
இருந்திருக்கலாம்!



( what to u think balaji?)

Friday, March 2, 2007

காற்று

காற்று ஒரே இடத்தில்
நிலை கொண்டு இருக்கிறது.

மேகம் திகைத்து...
நோக்குகிறது.

எந்த திசையில்
வீசப்போகிறது....


எந்த திசையாக இருந்தாலும்
காற்றின் திசைதானே...

மேகத்தின் பாதை....
இரண்டிக்கும் பிரிவுகிடையாது.

இயற்க்கையின்
விதியே அதுதான்.




(again i am telling u balaji, if my intention is good, if my love for u is right... we'll get back to normal some day ....... i am waiting and i'll wait shadow.

shadow and soul never leave me, until i leave this world... so, shadow and soul stays within me.

may be it is late realization, but it set my mind in right track balaji. time heals nothing balaji, but our attitutes could make us different)

சுகமான சுமைகள்

சிரிப்பார்கள், சிந்திக்க வைப்பார்கள்,
செனறு கொண்டே இருப்பார்கள்.

சிரிப்பார்கள், அழவைப்பார்கள்
எட்டி நின்று வேடிக்கை பார்பார்கள்.

சிரிப்பார்கள், கண்ணாமூச்சு விளையாடுவார்கள்
என்ன எதிர்பார்க்கிறார்கள்?

அவர்களுக்கும் புரியாது
நமக்கும் புரியாது.

ஆனால்,
ரசிப்போம், சிந்திப்போம்...

வேதனைப்படுவோம்,
சுகமான எல்லாமே

சுகமான சுமைதானோ...
புரிந்து கொள்ள முயற்ச்சிப்போம்!


பைத்தியக்கார உலகம்

பார்க்கிறோம், பழகுகிறோம்...
செல்கிறோம், மறந்துவிடுகிறோம்...
இல்லை... முயற்ச்சிக்கிறோம்.

இரயில் சிநேகிதம் போல
இப்போது,
கம்யூட்டர் சிநேகிதம்.

பேசுகிறோம் மணிக்கணக்காக
திடீரென்று.....
எல்லாம் மறைந்து விடுகிறது.

விட்டு விடுகிறார்கள்,
அல்லது
விட்டுவிடுகிறோம்.

சிலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
சிலர் மாட்டவிடப்படுகிறார்கள்.
சிலர் பிடியே இல்லாமல்....

ஆனாலும்,
இந்த மோகம்...
யாரை விட்டது.

எதையோ தேடுகிறோம்
மனிதனிடம் தேடாமல்
மெஷினிடம் தேடுகிறோம்.

அதனால் தானோ
அதற்க்கு உயிர் இல்லை.
இதுவும் மாயை தானோ?

இதை உணரும் போது
நாம் பைத்தியம் ஆகி இருப்போம்,
அல்லது எதிராளி பைத்தியம் ஆகி இருப்பார்கள்.

மெஷினுக்கு இவ்வளவு மதிப்பா?
புரிந்தது......ஒன்று........
மெஷினுக்கு உயிர் கொடுக்கிறோம்.

அதில் வரும் மனிதர்களுக்கும்
உயிர் கொடுத்து பார்க்கிறோம்.
சிலர் மூச்சு விடுகிறார்கள்.

சிலர் மூச்சு விட முயற்ச்சிக்கிறார்கள்,
சிலர் மூச்சு விட்டு தோத்துப்போகிறார்கள்.
சிலர் மூச்சையே நிறுத்திவிடுகிறார்கள்...

அதில்
நம்மையும் சேர்த்து தான்.
"பைத்தியக்கார உலகம்"....

"பைத்தியக்கார மனிதர்கள்"
என்னையும்....
உன்னையும் சேர்த்துதான்!



(so, don't worry abt this gal and boy friendships balaji... they are so many of them are hiding their real names and their real identity.... i hate ppl who uses three words often... fear, promise, God... they are all playing, hiding their true identity to make others feel good abt them... in a way they are succecding balaji... just read my innocence and ignorance post again balaji. u'll understand what i mean. don't worry.)