Thursday, November 1, 2007

முக மூடிகள்

பெற்றோரிடம்,
நல்ல பிள்ளை என்ற முகமூடி!

ஆசிரியர்களிடம்,
படிப்பவர்கள் என்ற முகமூடி!

நண்பர்களுடன்,
தோழமை எனற முகமூடி!

கணவன், மனைவி,
கடமை என்ற முகமூடி!

குழந்தைகளிடம்,
அவர்கள் தான் உலகம் என்ற முகமூடி!

குடும்பத்தாருடன்,
எல்லாம் தங்கள் தலையில்தான் என்ற முகமூடி!

உலகத்திற்க்கு,
உலகமே தங்கள் கையில் என்ற முகமூடி!

பொதுவான மனித அடிப்படை,
எல்லாவற்றிக்கும் முகமூடி!

முகமூடிகளே,
நம்முடைய நிரந்தர முகங்கள் ஆகிவிட்டன!!!

ஆண்வேடம்


உலகத்தில்,

மக்களுக்கு
ஒரு பழக்கம்
மற்றவர்களை,காயப்படுத்துவது.

அதற்க்கு,
அவர்கள் பயன்படுத்தும்
ஆயுதம்,
"அறிவுரை"

நம்முடைய,
நிலைமை புரியாது.
நம்முடைய,
வாழ்க்கை புரியாது.

அதை தடுக்க,
ஒரு வேடம் தேவை இருந்தது,
நிமிர்நத நடை,
எதையும் சமாளிக்கும் திறமை.

இது,
"கவச குண்டலம்"
உண்மையாக,
என்னை காப்பாற்றி இருக்கிறது!


இல்லை என்றால்
இன்று;
பெண் என்பதை உணர,
ஆள் இல்லாமல் போயிருக்கும்.

பொய் முகம்



கடந்த காலம்,
என்னை காயப்படுத்தியிருந்தாலும்
நிகழ்காலம்,
என்னை சந்தோஷமாக தான் வைத்து இருக்கிறது!

உண்மையாக,
எல்லாம் மறந்துவிட்டது.
நான் பெண் என்பது,
இப்போதுதான் ஞாபகம் வருகிறது!

பாதி வாழ்க்கை,
"ஆண்வேடம்" போடவேண்டி வந்ததால்;
பெண் என்பது,
மறந்துவிட்டது!

உன்னுடன்,
பேசிய பின் தான்;
நான்,
பெண் என்பதை உணர்கிறேன்!

"சத்தியம்",
நான் சந்தோஷமாக இருக்கிறேன்!
உனக்கு,
இதை எப்படி புரிய வைப்பது!

நான்,
மறந்து போன உணர்வை,
நீ,
தட்டி எழுப்பி இருக்கிறாய்!

எந்தவித பொய்முகங்களும்
இல்லாமல்;
நான்,
நானாக...!

மறுபடியும் சொல்கிறேன்,
"எனக்கு நீந்தத்தெரியும்".
மூழ்கவேண்டிய காலத்திலேயே,
"நான் மூழ்கவில்லை" என்பதை மறந்துவிடாதே!

என்னுடைய,
அத்தனை பொய்முகத்தையும்;
கழற்றிவிட்டு
சொல்கிறேன்...

"நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்"
"நான் இந்த புது பெண்முகத்தை ரசிக்கிறேன்"
உனக்கு கவலையாக இருக்கிறது என்றால்,
"உன்னிடமும் பொய்முகம் காட்ட ரெடி".


Monday, October 1, 2007

நான் யாரோ...???

ஏதோ ஒன்று "என்னை"
கட்டிப் போடுகிறது "உன்னிடம்"!

எது என்று தேடுகிறேன்,
தெரியவில்லை.

அன்பு என்பதற்க்கு
ஏதேனும் கதவுகள் இருக்கிறதா?

இருந்தால்,
அது ஜெயில் கதவா?

பூட்டினால்,
திறப்பது கடினமா?

தேவையான போது,
தேவையான அளவு திறந்துவிடப்பட வேண்டுமா?

ஆனால்,
எப்போதும் திறந்து இருக்கிறதே....?!

அப்படியானால்,
இது சமுத்திரமா???

சமுத்திரத்திற்க்கு,
ஏது கதவுகள்!!!

அன்பும், சமுத்திரமும்,
"ஒன்று" !

பரந்து விரிந்தது!
நம்மை உள்வாங்கிவிடும்.

நீந்தத் தெரிந்தவர்கள்,
"புத்திசாலிகள்"

நீந்தத் தெரியாதவர்கள்,
"படைப்பாளிகள்"

மூழ்குபவர்கள்,
"சொர்க்க வாசிகள்"

நான் யாரோ?
தெரியவில்லை.....



(உனக்கு தெரிந்தால் சொல் நண்பனே!)

பழக்கம்


நடந்து வந்த முட்பாதைகள்
மறைந்து போனாலும்,
பழக்க தோஷம்;
கால்கள் தரையில் பதிய மறுக்கின்றன!

முடியாது ... முடியவில்லை...?

எத்தனை தான் மனதை
தேற்றினாலும்,

திரும்ப திரும்ப ஒலிக்கும்
ஒரே மந்திரம்!

"உன்னால் முடியாது"
எனற பிரியமானவரின்

"அன்புக் குரல்"
கால்களை கட்டிப்போடுகின்றன!

சங்கிலியால் பிணைத்தால்,
கழட்டி விடலாம்!

போட்டது என்னவோ,
சொல்லால் அல்லவா....

அது விழுந்தது,
நெஞ்சில்!

இரத்தத்தில் கலந்துவிட்டது
பிரித்து எடுக்க முடியாமல்!!!

சொல்லை மீற
அதிக நேரம் தேவையில்லை.

ஆனால், பின்விளைவுகள்
குடும்பத்தை பாதிக்கும்.

பாதிப்பு இல்லாமல்
வர முயற்ச்சிக்கிறேன்!

முடியும் என்று,
"பக்ஷி" சொல்கிறது.

Friday, April 13, 2007

நிசப்தம்

அடர்ந்த காட்டில்
அழகான மரங்கள்
ரம்மியமான சூழல்...
எங்கும் நிசப்தம்!
உன் குரல்
எனக்கு கேட்கிறது.
ஆனால்,
என்னுடைய குரல்
உனக்கு கேட்க்கவில்லை!
காதில் கோளாறா....
இல்லை மனதில் கோளாறா......
இதுதான் வாழ்க்கையோ!!!???