Tuesday, January 23, 2007

இயற்க்கையின் எதிரி?

(23-01-07---- 10.27PM)

மரங்களின் அசைவில்
சின்ன கவிதை!


காற்றின் திசையில்
மனதின் ஊஞ்சல்!


பறக்கும் தூசியில்
மனிதனின் எண்ணங்கள்!


மேகங்கள் வருகையில்
நடையில் துள்ளல்!


வெயிலின் உக்கிரத்தில்
சிந்தனை சிதறல்!


வருணபகவானின் விளையாடலில்
அழகிய சிரிப்பு!


இடியின் முழக்கத்தில்
கண்களில் கண்ணீர்!


கடலின் ஆர்பரிப்பில்
சிதறும் பயங்கள்!


இரவின் இருளில்
விடியலின் நம்பிக்கை!

இத்தனை இருந்தும்
இயற்க்கையின் முதல் எதிரி மனிதன்!!!

No comments: