Saturday, February 3, 2007

கண்ணோட்டம்

(3-02-07--- 11.00AM)

கடவுள் - 1


காண்பவர்களின் கண்ணோட்டம்!
ஏதோ ஒன்று இருக்கிறது
அது என்ன என்று தேடுகிறோம்.
அந்த ஒன்று
நம்மை மீறியதாக இருக்கவேண்டும்
நம்மை பயப்படவைக்க வேண்டும்.
நம்மை பண்படுத்த வேண்டும்.
நம்மை ஞாயப்படுத்த வேண்டும்.
பெயர் என்ன வேண்டுமானாலும் வைக்கலாம்.
சிலருக்கு இது இயற்க்கை
சிலருக்கு இது செயற்க்கை
சிலருக்கு இது கடவுள்
"காண்பவர்களின் கண்ணோட்டம்"!!!



ஆரோக்கியம் -2

உடல் என்பது சுவர்
சித்திரம் என்பது வாழ்ககை
சித்திரம் வரைய சுவர் வேண்டும்
சுவர் சிதைந்து இருந்தால்
சித்திரம் வரைவது கடினம்.
சித்திர்த்திற்க்கு சில தேவையானவை
கடவுள், அன்பு, செல்வம்!





அன்பு -3

அன்பு என்பது பட்டாம்பூச்சு போல
பிடிக்க சென்றால் பறந்துவிடும்.
ஆனால் கிடைத்த இடத்தில் அமர்ந்துவிடும்
அன்பு ஏங்கும் சில நேரங்களில்
அதற்க்கு அர்த்தம் பல...
ஆனால் மனிதர்களை பொறுத்து
அதற்க்கு பெயர்களும் உண்டு.
நிலையானது என்று நெருங்குவது கடினம்.
நிலையானது இல்லை என்று ஒதுக்குவது கடினம்.
ஆனாலும் அன்பு சில நேரங்களில் உண்மை
சில நேரங்களில் கடவுள்
சில நேரங்களில் கொடுமை
முடிவில் அன்பு சில கேள்விக்குறிகளை
விட்டுச் செல்லும்........
அதன் "பாதச்சுவடுகளாக"...!!!



செல்வம்-4

செல்வம் என்பது ஐஸ்வர்யம்
ஐஸ்வர்யம் என்பது தேவைக்கு தான்.
தேவை என்பது நாம் அதை நாடும் வரை
நாடுவது என்பது மனிதர்களின் குணம்.

குணம் இரண்டு வகை...
"பணக்காரன், ஏழை"!


பணக்காரன்

பணத்திற்க்கு தடைகள் - தடை
நம்பிக்கைக்கு - தடை
பழகுவதற்க்கு - தடை
சில குணத்திற்க்கு - தடை
பயத்திற்க்கு - தடை
ஏழைகளுக்கு - தடை

வாழ்க்கை முழுதும் பணத்திற்க்கு காவல்.
வாழ்க்கை முழுதும் செல்வத்திற்க்கு அடிமை.
வாழ்க்கை முழுதும் பயதுடன் கழிதல்
கழிதலில் கழிக்கப்படுவது நல்ல மனிதர்களையும் தான்!!!


ஏழை

ஒன்றும் இல்லை என்பது ஒன்றுமல்ல
ஒன்றும் இல்லை என்பது ஆசை இல்லை என்பது அல்ல!
பணம் அவர்களுக்கு ஒரு கனவு
கனவு சிலருக்கு மனதை சாகடிகிறது
சிலருக்கு பணம் வெறும் மாயை
அது அவர்களை ஒன்றும் செய்வது இல்லை!

ஏழைகளுக்கு பணக்காரர்கள் தழும்பு
பணக்காரர்களுக்கு ஏழை ஒரு மலிவானவன்!


"இருவருக்கும் நடுவில் இருப்பது ஒரு பொய் தோற்றம்"!


இருவரும் இருவருக்கும் பயப்படிகிறார்கள்
எதுவும் ஞாயம் என்று ஒதுக்கமுடியாது
அறியாமை என்று விலக்கமுடியாது!

இருவரும் ஒன்றை மறந்துவிட்டனர்மனிதர்கள் என்பதை....!

தங்களை காப்பாற்ற ஓடுதலில்
தங்களின் இனிய வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.

இதில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத
சில பணக்காரர்களும், சில ஏழைகளும்!

ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது!


"உலகத்தின் சில பல எதார்த்தமான உண்மைகள்"!!!




No comments: