Monday, October 1, 2007

நான் யாரோ...???

ஏதோ ஒன்று "என்னை"
கட்டிப் போடுகிறது "உன்னிடம்"!

எது என்று தேடுகிறேன்,
தெரியவில்லை.

அன்பு என்பதற்க்கு
ஏதேனும் கதவுகள் இருக்கிறதா?

இருந்தால்,
அது ஜெயில் கதவா?

பூட்டினால்,
திறப்பது கடினமா?

தேவையான போது,
தேவையான அளவு திறந்துவிடப்பட வேண்டுமா?

ஆனால்,
எப்போதும் திறந்து இருக்கிறதே....?!

அப்படியானால்,
இது சமுத்திரமா???

சமுத்திரத்திற்க்கு,
ஏது கதவுகள்!!!

அன்பும், சமுத்திரமும்,
"ஒன்று" !

பரந்து விரிந்தது!
நம்மை உள்வாங்கிவிடும்.

நீந்தத் தெரிந்தவர்கள்,
"புத்திசாலிகள்"

நீந்தத் தெரியாதவர்கள்,
"படைப்பாளிகள்"

மூழ்குபவர்கள்,
"சொர்க்க வாசிகள்"

நான் யாரோ?
தெரியவில்லை.....



(உனக்கு தெரிந்தால் சொல் நண்பனே!)

No comments: