(18-01-07.......6.27 PM)
எதற்க்காக வருத்தப்படுகிறேன்?
என்ன எதிர் பார்கிறேன்?
எனக்கே தெரியவில்லை!
என் வாழ்க்கையில்
இதுவரை எதையும்
எதிர்ப்பார்த்தது இல்லை.
காரணம்,
நான் எதிர் பார்ப்பது
எதுவும்...
நடப்பது இல்லை!
கடவுள் கூட என்னிடம்
"பாராமுகம்" தான்!
அதனால்,
நானும் அதற்க்காக
வருந்தவில்லை!
இயற்க்கையாக
எனக்கு தந்த தைரியத்தில்
நிமிர்ந்து நடக்கிறேன்!
இன்று எதிர்பார்கிறேன்...
என்ன என்பது
தான் கேள்வியே?
ஆழ்மனதில்
எதையோ தேடுகிறேன்...
என்னையும்
ஒரு உயிர்
ஆழமாக நேசிக்கவேண்டும்.
எந்தவித தயக்கங்களும்
இல்லாமல்...
என்னை எனக்காக
நேசிக்கவேண்டும்!
சிறிது அதிகமான
அசட்டுத்தனமான
முரட்டுத்தனமான
ஆசைதான்!
எனக்குப் புரிகிறது...
கட்டுப்படுத்த முடியவில்லை!
பொறுமை என்பது
எனக்கு இப்போது
எட்டிக்காய் போல இருக்கிறது!
எத்தனையோ
கடந்து வந்தேன்!
இப்போது தடுமாறி நிற்க்கிறேன்...
இதையும்
கடந்து வருவேன்
என்று நம்புகிறேன்...
என் எதிர்பார்ப்பை
கண்டுபிடித்து விட்டேன்
கடந்து மட்டும் வரவேண்டும்
சின்ன பெரிய வேண்டுகோள் நண்பனே
அதுவரை...
என்னை சகித்துக்கொள்ளவும்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment