Saturday, January 13, 2007
கேள்வி?
எத்தனை கவிதைகள்?
எத்தனை கடிதங்கள்?
அத்தனையும் பார்த்த பின்பும்,
அதே கேள்வி?
என்னை ஏன் பிடிக்கும்???
நானும் சொல்கிறேன்!
மறுபடியும் சொல்கிறேன்,
"எனக்கே புரியவில்லை"!!!
ஒரு நாள்,
நீ பேசவில்லைஎன்றால்...
என் தூக்கம் கெடுகிறது!
"நீ என்னை நம்பவில்லை"
என்றால்...
என மண்டை குடைகிறது!!!
புரிந்தவை சொல்கிறேன்,
என்னைப்பற்றி...
நினைவில்:
சந்தோஷம்!
மனதில்:
உற்சாகம்!
நடையில்:
துள்ளல்!
எழுத்தில்:
அலச்சியம்!
முகத்தில்:
சிரிப்பு!
எண்ணங்களில்:
மாற்றம்!
பரிமாணங்கள்:
கவிதையாய்!
காரணம்,
உன்னுடைய நட்பு!
புரிந்ததா?
இன்னும் கேள்விக் குறிதானா???
மறுபடியும்...
கேட்டால்?
"நீ சென்று விட்டால்"
"நான் மறைந்து போவேன்"!
ஏன் என்று கேட்க்காதே?
"எனக்கே புரியவில்லை"!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment