"பிடித்தவர்களுடன்... நீண்டதூரம் நடக்கவேண்டும்" - சின்ன ஆசை!
இருவரும் வெகு தூரம்,
நடக்கவேண்டும்!
நான் பேச நினைப்பதெல்லாம்,
பேசவேண்டும்!
எந்த இடையூரும்,
இல்லாமல்!
கைகளை பற்றி இருக்கவேண்டும்!
காரணம்...
நான் சொல்வது உண்மை,
பொய் இல்லை!என்பதை,
என்னுடன் நடப்பவர்,
"உணரவேண்டும்"!
என்னுடைய உணர்வில்,
குழப்பம் இல்லை!
பயம் இல்லை!
என்பதை உணரவேண்டும்...
"இருவருமே"!
சாத்தியமா?
அதைப் பற்றி....
கவலை இல்லை!
ஆனாலும்,
"ஆசைப்படுகிறேன"!
இதில் தவறு இருந்தால்,
மன்னிக்கவும்!
எதையும்,
"மறைக்க விரும்பவில்லை"...!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment